ஆலயமணி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் அதற்கு முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரம் கொண்டு சென்டிமென்ட் வில்லனாகவும், அதே நேரத்தில் பணக்காரர்களுக்கு உரிய படாடோபம், ஆடம்பரம், கஷ்டத்தை அறியாத நிலையில் வாழும் பெரிய செல்வாக்கு மிக்க செல்வந்தராகவும், கடைசியில் வாழ்க்கையின் அனைத்து துன்பங்களையும் உணர்ந்து திருந்தி வாழும் ஒரு நல்ல மனிதராகவும் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தை ஜாவர் சீதாராமன் செதுக்கியிருப்பார்.
அந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் கே. சங்கர் அவர்களது இயக்கும் பாணியும், அவரது ஆங்கில கலப்பான தனித்துவமான இயக்கும் பாணியும் நமது நடிகர் திலகத்தை வெகுவாக கவர்ந்தது
சிவாஜி கணேசன் கால் ஊனமுற்ற பிறகு வீல் சேரில் உட்கார்ந்த படியே ஒரு சுற்றுலா தளத்தில் தனது மனைவி சரோஜாதேவியையும், அவரது மாஜி காதலர் எஸ். எஸ். ராஜேந்திரனையும் சந்தேகப்பட்டு மலையில் இருந்து தள்ளுவது எல்லாம் வேற லெவல் .கடைசியில் இவர்களையா நாம் சந்தேகபட்டோம் என்று நினைத்து வீல் சேரை தானே தள்ளி கொண்டு சென்று கீழே சிவாஜி கணேசன் தன்னை மாய்த்துக் கொள்வது எல்லாம் படத்தின் திரைக்கதையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.
பொதுவாகவே கே. சங்கர் இயக்கும் திரைப்படங்களில் வெளிப்புற படப்பிடிப்பு மற்றும் ஸ்டூடியோவிற்குள் நடக்கும் படப்பிடிப்புகள் எல்லாம் அவரை மீறி செயல்படாத அளவிற்கு மிகவும் கட்டு கோப்பாக வழி நடத்தி செல்பவராக கடுமையான இயக்குனராக திகழ்ந்தார்.
ஆலயமணி திரைப்படத்தில் வரும் பாடல்களில் ஒன்றான பொன்னை விரும்பும் பூமியிலே பாடல் படப்பிடிப்பு காட்சிகாக இயக்குனர் கே. சங்கர் அவர்கள் மைசூர் பிருந்தாவனத்தில் பாடலை படமாக்க பாடலில் நடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மற்றும் கதாசிரியர் ஜாவர் சீதாராமன், ஒளிப்பதிவாளர் தம்பு அனைவரும் பல மணி நேரம் காத்திருந்தும் அங்கு பாடலில் இணைந்து நடிக்கும் நடிகை சரோஜாதேவி அவர்கள் வருவதற்கு மிகவும் தாமதம் ஆகிவிட்டது.
இதனால் கோபமடைந்த இயக்குனர் கே. சங்கர் அவர்கள்
சரோஜாதேவியை வெளுத்து வாங்கி விட்டார் .
அதன் பிறகு ஒரு வழியாக அந்த பாடல் படப்பிடிப்பு நேர்த்தியாகவும் சரோஜாதேவி தாமதமாக படப்பிடிப்புக்கு வந்ததாலே நைட் மோஷனில் பிருந்தாவனம் சுற்றி பாடல் லைட் எபெக்டில் பாடல் படமாக்கப்பட்டது.
மேலும் இந்த திரைப்படம் சிவாஜி கணேசனுக்கு வெற்றி படமாக அமைந்ததது
எதிரணி நடிகரின் உறவுமுறையில் அவர்களது குடும்ப பெண்ணை கே. சங்கர் அந்த காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டாலும் திரைப்படம் இயக்கம் எந்த வந்து விட்டால் உறவு வேறு திரையுலகம் வேறு என்று தெளிவாக இருந்தார்.
இதன் காரணமாகவே சிவாஜி கணேசனை வைத்து பி. எஸ். வீரப்பா தயாரிப்பில் மீண்டும் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு அம்சமான புரபெசர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சங்கர் அசத்தியிருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இந்த திரைப்படத்தில் அமைதியான நதியினிலே ஓடும் என்ற பாடல் காட்சி தமிழ்நாட்டில் பழநி அருகே உள்ள சண்முகா நதியில் உள்ள திண்டுக்கல்-கோவை ரயில்வே பாலத்தை ஓட்டி அந்த பாடல் காட்சி துவங்குவதை போல் படமாக்கப்பட்டது.
மற்ற காட்சிகள் எல்லாம் கேரளாவில் உள்ள மூணாறு மற்றும் தேக்கடி நீர்நிலைகளில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது பாடலின் இறுதியில் தேவிகா படகு ஆற்று நீரில் உள்ள மரத்தில் மோதி கீழே விழும் போது சிவாஜி கணேசன் அவரை காப்பாற்ற ஆற்றில் குதிக்க வேண்டும் அப்போது தண்ணீரின் அடியில் ஆழமில்லாத பகுதி என்பதால் அங்கு பாறை இருப்பது அறியாமல் நடிகர் திலகம் குதித்து விட காலில் சரியடி என்று விழுந்ததாம்
அதனால் இரண்டு ஒரு நாட்கள் சிவாஜி கணேசன் படப்பிடிப்பில் நடிக்க முடியாமல் இருந்த போது இயக்குனர் கே. சங்கர் அவர்கள் கேரளா வைத்தியத்தில் கைத்தேர்ந்தவர் அதனால் நமது சிவாஜி கணேசன் கால் முறிவை குணப்படுத்த தனது கை வைத்தியத்தால் சிவாஜி கணேசன் காலை நீவி நீராவி விட்டு தனது கையாலே சிவாஜி கால் வலியை குணம் செய்தார்.
அதன் பிறகு சிவாஜி கணேசன் அவர்கள் மனிதாபிமானத்தில் கண்ணீருடன் யோ நாயரு நீ யாருயா நான் யாரு ஒவ்வொரு டைரக்டரும் நடிகன் எப்படி போனால் என்ன படத்தில் வேறு கதாநாயகனை வைத்தோ அல்லது அந்த படமே வேண்டாம் என்று சொன்ன டைரக்டர் உள்ள காலத்தில் நீ என் காலை பிடித்து குணம் செய்யலாமா என கேட்க அண்ணே இதில் என்ன இருக்குது என் அண்ணனுக்கு ஒன்று என்றால் நான் இவ்வாறு செய்ய மாட்டேனா என கேட்க சங்கரும் கண்ணீர் மல்கினார்.
அதன் பிறகு சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் இருவரையும் இயக்குவதில் 60களில் பல இயக்குனர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும்
அதை அப்போது சரியாக செய்த இயக்குனர்கள் என்றால் ராமண்ணா, கிருஷ்ணன் பஞ்சு, கே. சங்கர் மட்டுமே அதன் பிறகே இவர்களை முன்னோடியாக கொண்டு பல தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆரை தைரியமாக இயக்கினர்.
சிவாஜி கணேசன் அவர்களை பொறுத்தவரை பணிவு, தனி பாணி கொண்ட நல்ல இயக்குனர்களை அவ்வளவு எளிதாக விட்டு வைக்க மாட்டார்.
உடனே சிவாஜி கணேசன் அவர்கள் தனது சொந்த படத்தயாரிப்பு நிர்வாகி பெரியண்ணா அவர்கள் அடுத்து இயக்க இருந்த அன்பு கரங்கள் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வேண்டுகோளை ஏற்று கே. சங்கர் இயக்குனராக பணியாற்றினார்.
ஆனால் அன்பு கரங்கள் திரைப்படம் கொஞ்சம் அப்போது வெளிவந்த முந்தைய பச்சை விளக்கு திரைப்படத்தின் கதை சாயலில் இருந்ததால் ரசிகர்கள் இடையே கதையும், படமும் எடுபடாமல் போனது.
அதை தொடர்ந்து சிவாஜி கணேசன் சங்கரும் இணையவில்லை என்றதாலும் அந்த எதிரணி நடிகர் திரைப்படத்தையும் தாண்டி இந்தி படங்களை இயக்க இந்தி சினிமா பக்கம் சென்றுவிட்டார்.
அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த கஸ்தூரி நிவாஸ் என்ற படத்தின் கதையை ஜி. பாலசுப்ரமணியம் மற்றும் இயக்குனர் சங்கர் இருவரும் அந்த திரைப்படத்தின் கதையை சிவாஜி கணேசன் இடம் கூற அப்போது அது வெகு சோகம் நிறைந்த காட்சி எனக்கே அழுகை வருகிறது இதை எனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என சிவாஜி கணேசன் கூறினார்.
அதனால் அப்போது அந்த நல்ல திரைப்படம் கைவிடபட்டாலும் 4 வருடம் கழித்து அதே ஜி. பாலசுப்ரமணியம் கதையில் ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் அவன் தான் மனிதன் என்ற பெயரில் படமானது.
அதை நீண்ட நாள் கழித்து படம் எடுக்கப்பட்டாலும் சிவாஜி கணேசன் இயக்குனர் பரிந்துரை கே. சங்கரை போட சொன்னார்.
ஆனால் அப்போது எதிரணி நடிகர் நடித்து கொண்டிருந்த படத்தை இயக்கி கொண்டிருந்ததால்.
அது அப்போது நடக்காமல் போன பிறகு ஒரு வழியாக ஏ. சி. திருலோகச்சந்தரே முதலும் கடைசியுமான இயக்குனராக தேர்வாகி படம் இயக்கினார்.
இதை தொடர்ந்து வெகு காலம் கழித்து 1980களுக்கு பின்னணியில் சிரஞ்சீவி படத்தில் கே. சங்கர் சிவாஜி கணேசன் உடன் சேர்ந்தாலும்.
அந்த திரைப்படமும் பெரிதாக ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.
ஆக மொத்தத்தில் எதிரணி நடிகரின் உறவினர் என்றாலும் சிவாஜி கணேசன் மீதும் அவரது நடிப்பின் மீதும் தனி அக்கறை கொண்டவராகவே கே. சங்கர் இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக