அது தமிழ் சினிமாவோட வேற லெவல் படம்.அதுலே ஒரு காட்சி. திருடனான மகனை போலீஸ் ஆபிசர் கைது பண்ற காட்சி. திருடன் மகனும், அப்பா போலீசும் மிரட்டியிருப்பாங்க. சும்மா தெறிச்சு விழற வசனங்களாலே காட்சி பட பட பட்டாசா இருக்கும். இந்த காட்சிலே போலீசோட மனைவியும் திருடனான மகனோட அம்மாவும் ஆன நடிகையும் இருப்பாங்க. அப்பாவும் மகனும் அவ்வளவு பண்ணிட்டாங்க.இதை பாத்துட்டு இருக்கறத தவிர அவங்களுக்குவேற வழி தெரியலே. இருந்தாலும் பெத்த அம்மாவா ரெண்டு வரி வசனம் பேசமாமே எப்படி? அப்படி மிரட்டியிருந்த காட்சிலே கடைசியா அந்த வசனம் பேசற மாதிரி வெச்சிருப்பாங்க.அப்பா மகன் ரெண்டு பேரையும் வெச்சே எல்லாம் முடிஞ்சது.இதுக்கு மேலே அந்த அம்மா பேசி தன்னோட இருப்பை எப்படி காட்டறது?
அந்த ரெண்டு வரி வசனத்துலே வெடிச்சது வெடி.
"என்னாங்க! இப்படி மௌனமா இருந்தே எல்லாத்தையும் நடத்தி முடிச்சிடீங்களேன்னு " ஒரு கதறல். இதை மட்டும் பேசி எப்படி ஸ்கோர் பண்ண முடியும் ?
ஆனா தியேட்டரே அதிர்ந்து போயிருச்சே.
அந்த உணர்ச்சி கதறல் உருக்கம் எல்லாம் அந்த வசனத்தை பேசி கலக்கியிருப்பாங்க.
தான் புன்னகை அரசி மட்டுமில்லே ,இதுலயும் தான் அரசிதான்னு நிரூபிச்ச படம் .
அவங்க யாரு ,அது என்னபடம்னு நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லே.
இந்த கே ஆர் விஜயா இருக்காங்களே ஒரு சின்ன ஷாட் வெச்சா போதும் அதை அப்படியே இதுதான் தன்னோட ஸ்பெசல்னு காட்டிருவாங்க.
எத்தனை படம், எத்தனை காட்சி, எத்தனை வசனம் ...
அதுலே எத்தனை நடிப்பு ,எத்தனை துடிப்பு. தமிழ் சினிமாலே 50 வருசத்துக்கும் மேலே டிராவல் பண்ணுன நடிகை கே.ஆர் விஜயா.
கை கொடுத்த தெய்வத்துலே ஆரம்பிச்சது சிவாஜி கே ஆர் விஜயா தொடர் வரிசை.
35 வருசமா சிவாஜியோட இணைஞ்சு ,என்னை விட யாருன்னு சொல்ல வெச்சவர் கே ஆர் விஜயா.
நடிப்புலேதான் இந்த ஜோடி மிரட்டுச்சுன்னா சாதனை செஞ்சதிலயும் நெம்பர் 1தான்.
25 நூறு நாள் படம் 3 வெள்ளிவிழா படம்னு கே ஆர் விஜயா சிவாஜியோட சேந்த சினிமா லைப் ஸ்டைல் பெரிய ரெக்கார்ட்டை வெச்சிருக்கு.
சிவாஜியோட அன்னை இல்ல வீட்டுக்கு அதிக முறை வந்த நடிகைகள்லே இவரும் ஒருத்தர்.அன்னை இல்ல வீட்டை பத்தி சொல்லறப்போ ,அன்னை இல்லம் வீட்டுக்குள்ளே போறப்பவே ஒரு கோயிலுக்குள்ளே நுழையற உணர்வை தரும்.அங்க வந்து போகாத பிரபலங்களே இல்லை. அன்னை இல்லத்தை கட்டிக் காத்தது சிவாஜி மனைவி கமலாமான்னு குமுதம் பத்திரிக்கைக்கே பேட்டி கொடுத்தவங்க கே ஆர் விஜயா.
நான் டப்பிங் நல்லா பேசறேன்னு சொன்னா அதுக்கு காரணம் சிவாஜி தான்.அந்த காலத்துலே டப்பிங் எல்லாம் கிடையாது.நேரிடையாவே சூட்டிங் ஸ்பாட்டுலேயே ரெக்கார்ட் பண்ணிருவாங்க. தடங்கல் இல்லாமே பண்ணினாத்தான் சரியா வரும். வசனங்களை மாடுலேசனா எப்படி பேசணும்னு சொல்லி கொடுத்தவர் சிவாஜி.
கை கொடுத்த தெய்வம் 1964 லே சிவாஜி கே.ஆர் . விஜயா நடிச்ச முதல் படம் .
சரஸ்வதி சபதம் ரெண்டாவது படம் .ஜோடியா நடிக்காத படங்கள் இது .
மூணாவதா செல்வம் படத்துலே ஜோடியா ஜாய்ன் பண்ணுணாங்க. அந்த படத்தோட முதல் ஷாட்டை தன்னாலே மறக்க முடியாதுன்னு விஜயா சொல்வாங்க.அது ரொம்ப சிறப்பான காட்சின்னு சொல்ல முடியாது. சிவாஜிக்கு ஜோடியா நடிக்க போறோம்ங்கற அந்த ஒரு உணர்வுக்காகத்தான் அதை கே ஆர் விஜயா அடிக்கடி சொல்வாங்க.
சிவாஜி வெளிநாட்டுலே இருந்து வருவார்.வந்ததும் தன்னைத்தான் முதல்லே பாக்க வருவார்னு விஜயா ஆத்தோரத்துலே ஆடிப் பாடற காட்சி. இன்னும் சிவாஜி வரலையேன்னு ஏங்கறப்போ திடீர்னு வந்து நிப்பார் சிவாஜி. இது தான் அந்த முதல் ஷாட்.
1967 ல் கந்தன் கருணை .ஜோடியில்லை.
இதே வருசம் நெஞ்சிருக்கும் வரை . ஒரு கார் பயணத்துலே உருவான கதை இது. ஸ்ரீதரும் கோபுவும் பெங்களூர் காரிலே போக அந்த டிஸ்கசன்லே உருவான கதை.
மேக்கப்பா.. அதெல்லாம் எதுக்கு? இருக்கற மாதிரியே நடிக்க வெச்சிரலாம்னு ஸ்ரீதர் பண்ணுன க்ளாசிக் படம்.
67 லே ஒரு சூப்பர் ஹிட் வந்துச்சு. பாலாஜி தயாரிப்புலே.ஸ்டைல் சிவாஜியை நாம பாத்த படம்.ஸ்பீடு பிரேக்கர் இல்லாமே போச்சு படம் .தங்கை பாலாஜிக்கு கை கொடுத்த முதல் ' கை'..
இதே 1967 லிலேயே பாலாடை திருவருட் செல்வர் படங்கள்.
அடுத்த சூப்பர்ஹிட் இரு மலர்கள். இந்த பட 100 வது நாள் வெற்றிவிழாவுலே சிவாஜி ,இந்த படத்துலே எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாங்க. ஆனா சிரிச்சுகிட்டே எல்லா பேரையுமே தட்டிட்டு போயிட்டாங்க விஜயான்னு சொன்னதுலே கே ஆர் விஜயாவுக்கு ரொம்ப பெருமையாஇருந்துச்சு.
1.11.67 லே வெளியான ஊட்டி வரை உறவு வேற சூப்பர் பம்பர் ஹிட்டா அமைஞ்சது.விஜயாவுக்கு சரியா டான்ஸ் ஆட வராதுன்னு சொன்னவங்க வாயை அடைச்சது தேடினேன் வந்தது பாட்டு.
இந்த 1967 லே மட்டும் சிவாஜி கே ஆர் விஜயா நடிச்சு 7 படங்கள் வத்ததுச்சு.இந்த வருசத்துலே சிவாஜி நடிச்சு வந்த படங்களே எட்டு தான்.எட்டு படத்துலே 7 படத்துலே கே ஆர் விஜயா நடிச்சிருந்தாங்க. ஒரே வருசத்துலே சிவாஜிக்கு ஜோடியா அதிக படங்கள்லே நடிச்ச நடிகை கே ஆர் விஜயாதான்.
3 வருசத்துலே சிவாஜியோட பத்து படம் பண்ணினார்
கே ஆர் விஜயா.
சூட்டிங் ஸ்பாட்லே சிவாஜியோட நடிச்ச ரெண்டு சம்பவத்தை கே ஆர் விஜயா முக்கியமா சொல்லியிருக்கார்.
தச்சோளி அம்பு படத்துலே நடிச்சப்போ ஒரு ஆக்சன் காட்சிலே சிவாஜி நடிச்சார். அந்த ஆக்சன் காட்சிலே சிவாஜி நடிச்சு முடிஞ்சம் டோட்டல் பட யூனிட்டே கை தட்டி ஆரவாரம் செஞ்சாங்களாம். இதுலே
கே ஆர் விஜயா சொல்ல வந்த விஷயம் என்னான்னா ,
ஆக்சன் காட்சிலே நடிக்கறது பெரிசில்லே. அதுலே உணர்ச்சியை காட்டணும்.ஏதோ ஒண்ணு விடுபட்டு போயிடும். சிவாஜி ஆக்சன் காட்சிலே உணர்ச்சியோட நடிப்பார் .அது தான் அவரோட சிறப்புன்னு சொன்னவர் விஜயா.
இன்னொன்னு , திரிசூலம் சூட்டிங்லே நடந்தது. ரொம்ப வருசம் கழிச்சு சிவாஜி விஜயா ஏர்போர்ட்லே சந்திச்சு பேசற காட்சி.இதுலே ரெண்டு பேரும் நடிச்ச அந்த உணர்ச்சிகரமான சூட்டிங்கை பாத்து டைரக்டர் கூட கட் சொல்ல மறந்துட்டாராம். சீன் முடிஞ்சதும் ஏர் போர்ட்லே நின்னு பாத்தவங்க அத்தனை பேரும் கை தட்டி ஆரவாரம் செஞ்சாங்களாம்.இதுலே என்னான்னா அங்க இருந்தவங்களுக்கு தமிழ் தெரியாது. இருந்தாலும் அந்த உணர்ச்சிகரமான நடிப்பை பாத்தே அவங்களை கை தட்ட வெச்சிருச்சு அந்த நடிப்பு.
அதையும் மறக்க முடியாதுன்னு விஜயா சொன்ன விஷயம் இது.
சிவாஜிக்கு மகளா கே ஆர் விஜயா நடிச்ச படம் திருமால் பெருமை. 1968 லே வெளியாச்சு.
1969 லே செம ஆக்சன் படமா வந்தது திருடன்.இது மாதிரி ஒரு ஸ்டைலான திருடனை தமிழ் சினிமாலே யாரும் பாத்ததில்லே.கே ஆர் விஜயாவோட படு பாந்தமான நடிப்பை இதுலே பாக்கலாம் .
சின்ன வயசுலே சிவாஜி நடிச்ச பராசக்தி மனோகரா எல்லாம் பாத்திருக்கேன் .பின்னாலே அவர் கூட ஜோடியா நடிப்பேன்னு கனவுலே கூட நெனச்சுப் பாத்ததில்லே.இது கே ஆர் விஜயா சொன்னது.
1970 லே எதிரொலி.Homely lookன்னு பேர் வாங்குன விஜயா இதுலே பட்டையை கிளப்புயிருப்பாங்க.மேஜரோட மிரட்டல் ஒரு பக்கம் விஜயாவோட பயம் ஒரு பக்கம்னு சிவாஜி ரோல் ரொம்பவே வித்தியாசம்தான் இந்த படத்துலே.
அடுத்து மாதவனோட பிரசன்டேசன்லே ராமன் எத்தனை ராமனடி.சிவாஜி கே ஆர் விஜயா ரெண்டு பேரும் டபுள் ரோல் பண்ணுன மாதிரியான நடிப்பு.
சிவாஜி படங்கள்லே ரெண்டு கதாநாயகி இடம் பெற்ற படங்கள்லே அதிகமா நடிச்சவர் கே ஆர் விஜயா.
சிவாஜிக்கு ஜோடி...
அவரோட மகன் பிரபுவுக்குஅம்மாவா நடிச்ச படங்கள் சிம்ம சொப்பனம் சாதனை மிருதங்க சக்கரவர்த்தி தராசு.
சொர்க்கம் படம் 70 லே வெளியாச்சு .100 நாள் ஓடி ஹிட்டான படம்.
இந்த படத்துலே சிவாஜி கே.ஆர்.விஜயாவிடம் "பீடி குடிச்சா லோ கிளாஸ்; சிகரெட் குடிச்சா ஹை கிளாஸ்" ன்னு சொல்வார்.உடனே கே.ஆர்.விஜயா ''கெட்டுப் போறதிலேயே கிளாஸ் வேறயா ?"ன்னு ஒரு போடு போடுவார்.இன்னொரு காட்சில, சிவாஜி,'பங்களாவில் மகனுக்கு என்ன குறைச்சல்'ன்னு ஆத்திரத்தில் சொல்வார்.''பங்களாதாங்க குறைச்சல்' ன்னு அதுக்கும் பதிலடியா பேசுவார்.இந்த மாதிரி காட்சிலே எல்லாம் விஜயாவோட நடிப்பே தனிதான்.
1972 லே தவப்புதல்வனும் 100 நாள் ஓடுன படம்.
1973 லே பாரதவிலாஸ் .அதுவும் 100 நாள் ஓடுன படம்.
1974 லே வெளியான பிளாக் பஸ்டர் படம் தங்கபதக்கம்.சாதாரண
ஹவுஸ் வைப் வேஷம் தான் கே ஆர் விஜயாவுக்கு. அந்த வேஷத்துலே விஜயாவை பீட் பண்ண யாருமில்லே.தமிழ் சினிமா ஹிஸ்டரிலே ரெக்கார்ட்டா இருக்கற படம்.காக்கி சட்டை படம் பண்றவங்களுக்கு டிக்சனரியா இருக்கற படம்.இதுலே நடிச்ச பெருமையும் கே ஆர் விஜயாவுக்கு.
1976 லே கிரகப்பிரவேசம்,
1977 லே நாம் பிறந்த மண்,
1978 லே ஜெனரல் சக்கரவர்த்தி,தச்சோளிஅம்பு மலையாள படம்,ஜஸ்டிஸ் கோபிநாத் படங்கள் .
27.01.1979 லே திரிசூலம்.
மூணு சிவாஜி நடிச்சிருந்தாலும் கே ஆர் விஜயாவையும் பேச வெச்சது திரிசூலம்.சிரிச்சே பேர் வாங்கறவங்கன்னு சொன்னாலும் அழற காட்சியிலயும் உருக வெச்சவர் விஜயா. இவங்கஅளவுக்கு அழுது பேர் வாங்குனவங்க குறைவுதான். இதுக்கு உதாரணமா தங்க பதக்கம் ,இந்த திரிசூலம் படங்களை சொல்லலாம்.
சிவாஜியை வெச்சு நான் வாழ வைப்பேன் படத்தை சொந்தமா தயாரிச்சாங்க விஜயா. 100 நாள் ஓடி ஹிட்டான படம் இது.வெளியான வருசம் 1979
80 லே ரிஷிமூலம் 100 நாள் படம்
81 லே சத்தியசுந்தரம்,கல்தூண் 100 நாள் படங்கள்
82 லே ஹிட்லர் உமாநாத் ,
ஊருக்கு ஒரு பிள்ளை ஊரும் உறவும்,
83 லே நீதிபதி வெள்ளிவிழா படம்னு அமைஞ்சது.
1983 லே முக்கியமா சொல்ல வேண்டிய படம் மிருதங்க சக்கரவர்த்தி.
ஒரு கணவன் மனைவி அந்நியோன்யமான நடிப்பை அற்புதமா காட்டி இருப்பாங்க
சிவாஜி கே ஆர் விஜயா.100 நாள் வெற்றிப்படம் இது.
84 லே தராசு படம் ,
சிம்ம சொப்பனம் ,
வம்ச விளக்குன்னு மூணு படங்கள் .
கே ஆர் விஜயோவோட 250 வது படம் படிக்காத பண்ணையார் .சிவாஜிக்கு ஜோடியில்லே.
1985 லே ராஜரிஷிலே கௌரவ வேசத்துலே நடிச்சார் விஜயா.
1986 சாதனை படத்துலே சினிமா டைரக்டரா நடிச்ச சிவாஜிக்கு மனைவியா நடிச்சார் கே ஆர் விஜயா.
1987 லே கிருஷ்ணன் வந்தான் .
சிவாஜி கடைசியா நடிச்ச வருசம் 1999.இந்த வருசம் வெளியான மன்னவரு சின்னவரு படத்திலயும் நடிச்சார் கே ஆர் விஜயா .
1964 லே கை கொடுத்த தெய்வம் படத்துலே ஆரம்பிச்ச சிவாஜியோட கே ஆர் விஜயா திரைப்பயணம் இடையிலே பெரிய இடைவெளி இல்லாமே ஓரே சீராக பயணம் செஞ்சது.
35 வருசமா சிவாஜியோட டிராவல் செஞ்ச பெருமை கே ஆர் விஜயாங்கற புன்னகை அரசிக்கு இருக்கு.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக