இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

கலாட்டா கல்யாணம்

படம்
சென்னை அண்ணா நகரில் அமைந்திருக்கும் உலக வர்த்த மைய கட்டிடம் மிகவும் புகழ் வாய்ந்தது.ஏராளமான சினிமா படத்தின் படப்பிடிப்புகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் உச்சியில் நின்று பார்த்தால் சென்னை நகரையே கழுகுப் பார்வையில் பார்த்து விடலாம்.வளையம் வளையமாக சுற்றி மேலே ஏறுவது போன்ற கட்டமைப்புடன் ,வித்தியாசமாக மேலை நாட்டு பாணியில் உருவாக்கப்பட்ட கட்டிடம் இது. பல சிறப்புகள் கொண்ட இந்த கட்டிடத்தில் முதன்முதலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது ஒரு சிவாஜி படம்தான். என்னபடம் என்ன காட்சியை அங்கு எடுத்தார்கள் என்பதை சொல்லும் முன்பு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். தமிழக அரசு நிதி திரட்டிக் கொடுப்பதற்காக சினிமா கலைஞர்கள் எல்லாம் இணைந்து ஆறு ஊர்களில் நட்சத்திர இரவு நடத்தினார்கள். இது சிவாஜி ஸ்ரீதர் தலைமையில் நடத்தப்பட்டது.இந்த நட்சத்திர இரவில் ஒரு காமெடி நாடகமும் நடத்தினார்கள்.அவசரம் அவசரமாக சித்ராலயா கோபு எழுதிய நாடகம் இது. சிவாஜியுடன் நிறைய நடிக நடிகையர் நடித்த நாடகம் இது.இந்த நாடகத்துக்கு  அதிக வரவேற்பு கிடைத்தது. இதை சினிமாவாக எடுத்தால் என்ன என்று ஒரு ஐடியா சிவாஜிக்கு பிறக்க,சினிமாவாகவும்...

நடிகை சுஜாதா

படம்
விஜயலட்சுமி என்ற இந்த பெண் தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த நடிகை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.தமிழ் தவிர தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்தவர். விஜயலட்சுமி என்ற நடிகையா ?இந்த பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாததுதான். சினிமாவில் இவர் பெயர் சுஜாதா. அவள் ஒரு தொடர்கதை சுஜாதாதான். இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் சுஜாதா. சுஜாதாவின் தந்தை கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று பேராசிரியராக பணி புரிந்த போது இலங்கையில் பிறந்தவர் சுஜாதா.  தந்தையின் பணி முடிந்ததும் கேரளாவில் வளர்ந்தார். 1971 ல் தபஷ்விணி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் சுஜாதா. 1971 ல் எர்ணாகுளம் ஜங்சன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது k.பாலசந்தரின் கண்ணில் பட்டார்.1974 ல்  அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார் சுஜாதா. அதன் பிறகு வரிசையாக படங்களில் நடித்து புகழ் பெற்றார்.70 80 களில் முண்ணனி நடிகையாக இருந்த போது ஜெயகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இரு குழந்தைகளும் பிறந்தன. திருமணம் முடிந்து சில காலம் ஆனதும் இவருடைய வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தது என்று யா...

1980 -.R.K.நகர் தேர்தல் வெற்றி

படம்
சென்னையின் ஆர் கே நகர் தொகுதி திராவிட கட்சிகளின் கோட்டை ஆகும். திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்த ஆர் கே நகரை தனது ரசிகர் மன்ற தலைவரை நிறுத்தி வெற்றி பெறச் செய்து வரலாற்று வெற்றியை பதியச் செய்தவர் சிவாஜி.எப்படி வந்தது இந்த வெற்றி?  இந்தப் பதிவில் இது பற்றிய செய்திகளை நாம் விரிவாக பார்க்கலாம்  1980  தமிழக தேர்தலில் திமுக- காங்கிரஸ்  கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை விரும்பவில்லை. காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதையே பலர் விரும்பினார்கள். அப்படி தனித்து போட்டியிட்டால் இனி வரும் அடுத்த தேர்களிலாவது கட்சியை பலப்படுத்த முடியும் என்ற எண்ணமே காங்கிரஸ் தொண்டர்களிடம் இருந்தது. அந்த எண்ணம்தான் சிவாஜியிடமும் சிவாஜி ஆதரவு தலைவர்களின் மனதிலும் இருந்தது. காமராஜர்  மறைவுக்கு பின்பு, அந்த ஒரு நேரமே காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.அதை காங்கிரஸ் தலைமை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் காங்கிரஸ் தனித்த பலத்துடன் வளர்ச்சிஅடைய வாய்ப்பு கிடைத்திருக்கும். கழக கட்சிகளின் தோளில் உட்...

3 இன்டஸ்ட்ரி ஹிட் படங்கள்

படம்
தமிழ் சினிமா கேரியர்லே சிவாஜியோட மூணு படங்களோட கதை உருவாக்கம் சாதனைகள் ஒரு வரலாற்று பதிவுகள்ன்னு சொல்லலாம்.வசந்தமாளிகை பட்டிக்காடா பட்டணமா தங்கப்பதக்கம் படங்கள்தான் அது.மூணு படங்களுமே வெள்ளிவிழா ஓடுன படங்கள்.மூணு படங்களுமே ஒரே நேர்க்கோட்டுலே போற கதை அமைப்பை கொண்ட படங்கள்.எந்த விதமான திடீர் திருப்பங்களோ சஸ்பென்சோ த்ரில்லர்ரோ கிடையாது. டைட்டில் ஆரம்பிச்சா கடைசிலே  வணக்கம் போடற வரைக்கும் எந்திரிச்சு போக வைக்காது.சிவாஜியோட சாம்ராஜ்யம் மூணு படத்துலே கொடி கட்டி பறக்கும். வாணிஸ்ரீக்கு வசந்த மாளிகைன்னா, ஜெயலலிதாவுக்கு பட்டிக்காடா பட்டணமான்னா, கே ஆர் விஜயாவுக்கு தங்கப்பதக்கம். அந்த படம் வேற .இந்த படம் வேற .அடுத்த படம் அது வேற மாதிரி. வசந்த மாளிமை காதல் சப்ஜெக்ட்.. பட்டிக்காடா பட்டணமாவிலே தமிழ் கலாச்சாரம்.. தங்கப்பதக்கம் ஒரு காவல் துறை அதிகாரியோட நேர்மை கடமையை சொன்ன படம். மூணு படங்களும் மூணு டிராக். ரயில் மாதிரி ஜிவ்வுன்னு திரைக்கதை போற படங்கள் . வசந்தமாளிகைலே நீங்க குடிக்ககூடாதுன்னு காதலி சொல்வாங்க. பட்டிக்காடா பட்டணமா படத்துலே நான் அப்படித்தான் இருப்பேன்னு சொல்ற கதாநாயகி. தங்கபதக்கத்துலே எ...

சிவாஜி- சோ

படம்
பெற்றால் தான் பிள்ளையான்னு ஒரு நாடகம்.1962 லே நடந்துச்சு. நாடகத்துக்கு நல்ல வரவேற்பு .அந்த நாடகத்தை சினிமாவா எடுத்தார் பீம்சிங்.வழக்கப்படி பீம்சிங் பா வரிசை டைட்டிலா பார் மகளே பார்னு வெச்சார்.அந்த நாடகத்துலே நடிச்சார் சோ.மெட்ராஸ் பாஷையை இயல்பா பேசி நடிச்சிருப்பார்.சினிமாவா எடுத்தப்போ சோவையே நடிக்க வெச்சுடுங்கன்னு சொல்லிட்டார் சிவாஜி. அப்படி சினிமாவுக்குள்ளே வந்தவர் தான் சோ. பார் மகளே பார் படம்  சோவுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துச்சு. மகாகவி காளிதாஸ் பச்சைவிளக்கு படங்கள்லே சோவை நடிக்க வெக்க சிவாஜி சிபாரிசு பண்ணுனார்.ஆனா சோ அந்த படங்கள்லே நடிக்கலே. பார் மகளே பார்னு ஒரு படம் போதும்னு முடிவெடுத்துட்டார். ரசிகர்களுக்கு இந்த படத்தோட தான் நடிக்கறதுக்கு விடுதலை கொடுத்துடலாம்னு முடிவு எடுத்திருந்தார் அப்போ.வீணை பாலசந்தர் தான் மறுபடியும் சோவை சினிமாலே நடிக்க வெச்சார் . அதுக்கு பின்னாலே சிவாஜியோட நிறைய படங்கள்லே நடிச்சார் சோ. இதுக்கு பின்னாலே நடிச்ச ஒரு சிவாஜி படத்துலே சோவுக்கு ஒரு குறிப்பிட்ட காட்சிலே சீரியஸா நடிக்கற மாதிரி காட்சி .சோவுக்கு சீரியஸா நடிப்பு வரலே. சிவாஜியும் சோவுக்கு பல தடவை ச...

திருலோகசந்தர் சிவாஜி

படம்
இயக்குனர் திருலோகசந்தர் நடிகர் திலகம் சிவாஜியை வச்சு 20 படங்களை டைரக்ஷன் பண்ணி இருக்கார். தெய்வமகன் உள்பட பல பெரிய மாஸ்டர்பீஸ் படங்களை டைரக்சன் செஞ்சவர் இவர்.தமிழ் சினிமாலே லெஜஜெண்ட் ரைடக்டரா இருந்தவர் திருலோகசந்தர் .இந்த திருலோக சந்தர் யார் ?அவர் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்தது எப்படி? நடிகர் திலகத்துடன் இணைந்தது எப்படி ?என்பதை பற்றி இந்த பதிவுலே நாம் பார்க்கலாம். 1950 ஆவது வருஷம் ஜனவரி மாசம் ஆறடி உயரத்துக்கு மேலான இருபது வயது உடைய  இளைஞர் ஒருத்தர்  'குமாரி' என்ற படத்தை யாரிச்சு டைரக்ஷன் பண்ணிட்டு இருந்த  பத்மநாப ஐயர்கிட்டே மூன்றாவது உதவியாளராக வந்து சேர்ந்தார் . ரொம்ப துறு துறுப்பும் நேர்மையும் கொண்ட அந்த இளைஞரோட கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சது. 1960 வது வருஷம் டிசம்பர் மாசம் ஏவிஎம் நிறுவனத்தினோட சார்பு நிறுவனமான முருகன் பிரதர்ஸ் பட நிறுவனத்துகிட்டே ரெண்டு கதையை சொன்னார் . முதல் கதை வரலாற்று கதை .. இரண்டாவது கதை சமூக பின்னணி  கொண்ட கதையாகவும் இருந்துச்சு. அந்த ரெண்டு கதைகளும் முருகன் பிரதர்சுக்கு ரொம்ப பிடிச்சது.சமூகப் பின்னணி கொண்ட கதையை விலைக்கு வாங்கி பீம்ஸிங் டைர...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற