இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி கதை கேக்கறாரா? தூங்கறாரா?

படம்
சிவாஜி கதை கேக்குற விதமே மத்த நடிகர்கள் கதை கேக்கற விதத்துல இருந்து வேறுபட்டது.அவர் கிட்ட கதாசிரியர்கள் கதை சொல்லறப்போ ,எதிர்லே இருக்கறவங்களை நல்லா கவனிச்சுகிட்டு கதையை சொல்லுங்கன்னு கேக்க ஆரம்பிப்பார்.கொஞ்ச நேரத்துலே கண்ணை மூடிட்டு அமைதியா உக்காந்துக்குவார்.கதை ரொம்ப நேரமா சொல்லிட்டு வர்றவங்க சிவாஜி எங்க தூங்கிட்டாரோன்னு சட்டுன்னு கதை சொல்றதை நிப்பாட்டுவாங்க.என்னடா சத்தத்தை காணோம்னு சிவாஜி கண்ணு முழிச்சு ,ஏப்பா நிப்பாட்டிட்டேன்னு கேக்கறப்போ கதை சொல்றவங்களுக்கு திக்குன்னு ஆயிடும். நீங்க ஒண்ணும் ரியாக்சன் காட்டலே , தூங்கிட்டிங்களோன்னு நெனச்சுட்டோம்னு அவங்க நினச்சத சிவாஜிகிட்ட சொல்லாமே மழுப்பலா ஏதோ ஒரு பதிலைச் சொல்லி ,மறுபடியும் தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பிப்பாங்க.இருந்தாலும் அவங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கும்.முழு கதையையும் கேட்ட பின்னாலே சிவாஜி கண்ணு முழிச்சு , அந்த கதையிலே அந்த கேரக்டரை பத்தியும் ,கதையை பத்தியும் கரெக்ஷன் சொல்லுவாரு .அத அப்படிச் செய்யாலாமா ,இதை இப்படி பண்ணலாமான்னு யோசனை சொல்லுவார்.அதை கேட்டதும் கதையாசிரியர்கள் ஆடிப் போவாங்க.இப்படி பல தடவை இது மாதிரி நடந்துரு...

தமிழ்நாட்டில் சிவாஜி படங்கள் எடுக்கப்பட்ட ஊர்கள்

தமிழ்நாட்டில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் காலடி படாத ஊர்களே இல்லை எனலாம்.சிவாஜியளவுக்கு சினிமாவுக்காக பயணம் செய்தவர்கள் யாரும்  இல்லை எனௌறும்கூறலாம். .சிவாஜியவர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த ஊர்களில் எடுக்கப்பட்டது என்பதை ஒரு பார்வை பார்க்கலாம். ஒரு திரைப்படம் ஒரு ஊரில் முழுவதுமாக ,அல்லது சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டிருக்கும்.அந்த விபரங்களை தான் இதில் நாம் பார்க்கப்போகிறோம்.. சென்னை சென்னையில் ஏராளமான படங்கள்.உதாரணத்துக்கு திருடன் படத்தில் வரும் ஷுட்டிங் காட்சி .சென்னை நகரில் முக்கிய தெரு ஒன்றில் படஷுட்டிங் நடத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.. நீலவானம் சாந்தி தியேட்டர் காட்சி... பட்டிக்காடா பட்டணமா ,எங்கமாமா என்று நிறைய படங்கள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. தர்மம் எங்கே திரைப்படம் கடலூரில் எடுக்கப்பட்டன. தர்மம்எங்கே படத்தில் க்ளைமாக்ஸில்  காண்பிக்கப்படும் கோட்டை காட்சிகள் செஞ்சிக்கோட்டையில் படம் பிடிக்கப்பட்டவையாகும். பொன்னூஞ்சல் திரைப்படம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஏலகிரி பகுதியிலும்,ஆகாயப் பந்தலிலே என்ற பாடல் இந்த பகு...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற