இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி இயக்குனர் சங்கர்

படம்
ஆலயமணி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் அதற்கு முந்தைய படங்களில் இருந்து  மாறுபட்ட கதாபாத்திரம் கொண்டு சென்டிமென்ட் வில்லனாகவும், அதே நேரத்தில் பணக்காரர்களுக்கு உரிய படாடோபம், ஆடம்பரம், கஷ்டத்தை அறியாத நிலையில் வாழும் பெரிய செல்வாக்கு மிக்க செல்வந்தராகவும், கடைசியில் வாழ்க்கையின் அனைத்து துன்பங்களையும் உணர்ந்து திருந்தி வாழும் ஒரு நல்ல மனிதராகவும் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தை ஜாவர் சீதாராமன் செதுக்கியிருப்பார். அந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் கே. சங்கர் அவர்களது இயக்கும் பாணியும், அவரது ஆங்கில கலப்பான தனித்துவமான இயக்கும் பாணியும் நமது நடிகர் திலகத்தை வெகுவாக கவர்ந்தது சிவாஜி கணேசன் கால் ஊனமுற்ற பிறகு வீல் சேரில் உட்கார்ந்த படியே ஒரு சுற்றுலா தளத்தில் தனது மனைவி சரோஜாதேவியையும், அவரது மாஜி காதலர் எஸ். எஸ். ராஜேந்திரனையும் சந்தேகப்பட்டு மலையில் இருந்து தள்ளுவது எல்லாம் வேற லெவல் .கடைசியில் இவர்களையா நாம் சந்தேகபட்டோம் என்று நினைத்து வீல் சேரை தானே தள்ளி கொண்டு சென்று கீழே சிவாஜி கணேசன் தன்னை மாய்த்துக் கொள்வது எல்லாம் படத்தின் திரைக்கதையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்....

பூப்போலே உன் புன்னகையில் பாட்டு

படம்
1954 லிலே இருந்து 18 வருஷமா சிவாஜிக்கு T.MS பாடிட்டு வர்றார். சிவாஜி குரல் , TMS குரல்னு பிரிச்சுப் பாக்க முடியாத ஒரு விஷயம் இது. இந்த சமயத்துலே ஒரு புது பாடகரை சிவாஜிக்கு பாட வெச்சா அது செட்டாகுமா? ரசிகர்கள் ஏத்துக்குவாங்களான்னு ஒரு சந்தேகம் இருக்கத்தான் செஞ்சது. MS.விஸ்வநாதனுக்கு நம்பிக்கை  இருந்துச்சு. சிவாஜிக்கு சந்திரபாபு எல்லாம் பாடியிருக்கார். இதையும்  சிவாஜி மாத்திருவார்னு ஒரு நம்பிக்கை.புதுசா ரிஸ்க் எடுக்க காரணம் என்னான்னா அந்த பாட்டு ரொம்ப மெலடியான பாட்டு.உச்சஸ்தாயி குரலா இருக்கக் கூடாது. கம்பீரம் சேராம மென்மையான இருக்கணும். அதனாலே சிவாஜிக்கு அந்த புதுப்பாடகரை பாட வெக்க முயற்சிகள் நடந்துட்டு இருந்துச்சு.அந்த புது பாடகரை சுத்தி இருந்தவங்க எல்லாம் பயமுறுத்தி வெச்சிருந்தாங்க. சிவாஜிக்கு பாடணும் ,ரொம்ப கவனம் தேவைன்னு எல்லாம் .இப்படி ஏதாச்சும் செய்வாங்கன்னு தான் பாட்டு ரெக்கார்டிங் நடக்கறதுக்கு முன்னாலேயே சிவாஜி வந்தார்.அந்த பாடகரை கூப்பிட்டு ,நீ உன்னோட பாவத்துலே பாடு,எனக்காக எதையும் மாத்த முயற்சிக்காதே ,நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். சிவாஜிக்கு பாட வந்த அ...

சிவாஜியின் தாயார் சிலை

படம்
ராமாவரம் தோட்டத்துக்கு எதிராக ஒரு சிறிய கிராமம் போலே நடிகர்திலகம் சிவாஜிக்கு ஒரு தோட்டம் உண்டு.நஞ்சையும் புஞ்சையும் பச்சை பசேல் என செழிப்புடன்  இருக்கும் அந்த தோட்டம். பல திரைப்படங்களின் டைட்டில் காட்சிகளில் பார்த்திருக்கலாம். சிவாஜி கார்டன் என்று டைட்டில் வரும்.  நடிகர்திலகம் சிவாஜி தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து விட்டு ஓய்வு கிடைக்கும் போது சற்று இளைப்பாற அந்த தோட்டத்துக்கு வருவார். பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த தோட்டம் தான் சிவாஜி கார்டன். சிவாஜிக்கு தன் தாயார் ராஜாமணி அம்மையார் மீது மிகுந்த பாசம் உண்டு.வெளியூர்  படப்பிடிப்புக்கு சென்றாலும் தினமும் ஒருமுறையாவது தொலைபேசியில் பேசிவிடுவது சிவாஜியின் வழக்கம். 1972 ல் வசந்தமாளிகை படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சிவாஜியின் தாயார் இறந்து விட்டார்.சிவாஜியால் அந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை.தனிமையில் இருக்கும் போதெல்லாம் தாயாரை  நினைத்து வருந்துவார். சிவாஜிக்கு ஆறுதல் சொல்லி சிவாஜியின் மனதை தேற்றி ஆறுதல் படுத்துவார் கமலாம்மா. வீட்டில் இருந்தால் அம்மாவின் நினைவு அவரை மேலும் துன்புறுத்தவே ,தாய...

sivaji kr vijaya 35 Years

படம்
அது தமிழ் சினிமாவோட வேற லெவல் படம்.அதுலே ஒரு காட்சி. திருடனான மகனை போலீஸ் ஆபிசர் கைது பண்ற காட்சி. திருடன் மகனும், அப்பா போலீசும் மிரட்டியிருப்பாங்க. சும்மா தெறிச்சு விழற வசனங்களாலே காட்சி பட பட பட்டாசா இருக்கும். இந்த காட்சிலே போலீசோட மனைவியும் திருடனான மகனோட அம்மாவும் ஆன நடிகையும் இருப்பாங்க. அப்பாவும் மகனும் அவ்வளவு பண்ணிட்டாங்க.இதை பாத்துட்டு இருக்கறத தவிர அவங்களுக்குவேற வழி தெரியலே. இருந்தாலும் பெத்த அம்மாவா ரெண்டு வரி வசனம் பேசமாமே எப்படி?  அப்படி மிரட்டியிருந்த  காட்சிலே கடைசியா அந்த வசனம்  பேசற மாதிரி வெச்சிருப்பாங்க.அப்பா மகன் ரெண்டு பேரையும் வெச்சே எல்லாம் முடிஞ்சது.இதுக்கு மேலே அந்த அம்மா பேசி தன்னோட இருப்பை எப்படி  காட்டறது?  அந்த ரெண்டு வரி வசனத்துலே வெடிச்சது வெடி. "என்னாங்க! இப்படி மௌனமா இருந்தே எல்லாத்தையும் நடத்தி முடிச்சிடீங்களேன்னு " ஒரு கதறல். இதை மட்டும்  பேசி எப்படி ஸ்கோர் பண்ண முடியும் ? ஆனா தியேட்டரே அதிர்ந்து போயிருச்சே.  அந்த உணர்ச்சி கதறல் உருக்கம் எல்லாம் அந்த வசனத்தை பேசி கலக்கியிருப்பாங்க. தான் புன்னகை அரசி மட்டுமில்லே ,இத...

சிவாஜி இளையதலைமுறை

படம்
தமிழ்சினிமாவுலே தினந்தோறும் புதுசு புதுசா நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் வந்துட்டுதான் இருக்காங்க. சிவாஜியோட வேலை செய்யாத பிரபல நடிகர் நடிகைகள்  இயக்குனர்களே இல்லை அப்படின்னு சொல்லலாம்  பிற்காலத்துலே வந்த இளைய தலைமுறை கலைஞர்களும் சிவாஜியோடு கைகோர்த்து தங்களை பெருமைப்படுத்திக்கிட்டாங்க.  80 கள் வரை சிவாஜியோட படங்கள் ஒரு பயணம்ன்னா 80 களுக்குபின்னாலே அது ஒரு பயணமா அமைஞ்சது.  80 களுக்கு பின்னலே வந்த இளைய தலைமுறை கலைஞர்களோட  நடிகர்திலகம் நடிச்ச படங்களை பற்றிய பதிவுதான் இது. தாவணிக்கனவுகள் - 14.9.1984 லே வெளியாச்சு .. "ஒரு இமயத்துடன் இணைவதில் பெருமைப்படுகிறோம்"ன்னு டைட்டில் போட்டே சிவாஜியை கேப்டன் சிதம்பரமாக அறிமுகம் செஞ்சார்  கே.பாக்யராஜ். வீரபாண்டிய கட்டபொம்மன் கப்போலோட்டிய தமிழன், பகத் சிங், திருப்பூர் குமரன்னு பல வரலாற்று வீரர்களோட வேஷங்கள் போட்ட சிவாஜியை   நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வேஷத்துலே  அறிமுகம் செஞ்சார் கே.பாக்யராஜ். “எமனுக்கு வாகனம் எதுன்னு கேட்டா எருமக்கடான்னு சொல்ல தெரியுதுல்ல. தேசத்துக்காக உயிர்விட்ட ஒரு தியாகியினுடைய பேர் தெரியாது உன...

சிவாஜி -ஒளிப்பதிவாளர்கள்

படம்
ஒரு நடிகன் கஷ்டப்பட்டு நடிப்பதை இஷ்டப்பட்டு படம் பிடிப்பவர்களே ஒளிப்பதிவு மேதைகள் . நடிகனின் அழகை குறித்த அளவில் கூட்டிக் கொடுப்பவரும் அந்த மேதைகளே. 360 டிகிரியில் எந்த கோணத்தில் நடிகர்திலகத்தை படம் பிடித்தாலும் அந்த மாபெரும் நடிகனின் நடிப்பை அறிய முடியும். இது பல ஒளிப்பதிவு மேதைகள் சொன்னது.  'silhouette' எனப்படும் நிழல்  உருவத்தில் சிவாஜியை படம் பிடித்தாலும் அவரின் போஸ் தனத்துவமாக இருக்கும். நடிகர் திலகம் கிட்டத் தட்ட 100 இயக்குநர்கள் , 60 கதாநாயகிகள் , 50 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார் . எல்லோராலும் தினந்தோறும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்ற விஷயங்கள் தான்  இது . ஆனால் ஒரு படத்துக்கு கண் போல விளங்கும் காமிரா ஒளிப்பதிவாளர்களுடன் அவர் பணிபுரிந்ததை யாரும் பதிவு செய்யதில்லை. அதற்காகவே இந்த பதிவு. பராசக்தி படத்தில் பிளாட்பாரத்தில் நின்று போலீசிடம் சிவாஜி பேசும் அந்த காட்சியை பாருங்கள். இருட்டுப் பிண்ணனியில் சிவாஜி போலீஸ் நிற்கும் துல்லிய ஒளிப்பதிவுக்கு சொந்தக்காரர் மாருதிராவ்.உலக நடிகர்களில் மேலான அந்த கலைஞனை படம்  பிடித்த முதல் ஒளிப்பதிவு மேதை. பிளாட்பாரத்தில் பட...

பானுமதி கோபம்

படம்
சிவாஜியை சிறந்த நடிகரா தேர்ந்தெடுக்காதீங்க'.வேற ஒருத்தர் பேரை சொல்றோம். அவரையே செலக்சன் பண்ணுனதா அறிவிப்பு செஞ்சுறுங்க.இப்படி ஒரு சிபாரிசு வந்துச்சு தேர்வுக் கமிட்டிக்கு. தேர்வுக் குழுவுலே இருந்த பானுமதி ,கமிட்டி குழுவுலே இருந்தே விலகிட்டாங்க. அது தான் பானுமதி . சிவாஜி நடிப்பு மேலே அந்தளவு மதிப்பு வெச்சிருந்தவங்க பானுமதி .. இந்த கேலிக் கூத்து நடந்தது வேற எங்கயும் இல்ல. தமிழ்நாடு அரசு விருது குழு கமிட்டிலே நடந்த கூத்துதான். 60 வருசமாச்சு திராவிட கட்சிகளோட ஆட்சி. தமிழகத்திலே   ஆரம்பத்திலே அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தோட  மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது. சிவாஜி கணேசனுக்கு அவரோட வாழ்நாளிலே கடைசி நொடி வரைக்கும் , சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காம செஞ்சதுதான்  ஆட்சி செஞ்சவங்க காட்டிய நன்றிக்கடன்!’ இந்த இடத்துலே தான் நடிகை பானுமதியை பாராட்டணும். தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்க போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர்  சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடினவர்   பானுமதி.  நடந்தது தான்  என்ன? தமிழக அரசின...

சிவாஜிக்கு சதி

படம்
1951 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 4 நாட்கள் திமுக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை NSகிருஷ்ணன் படமாக எடுத்து  சிவாஜியின் இரண்டாவது படமான பணம் படத்தில் சேர்த்து சென்சார் போர்டுக்கு தணிக்கைக்காக அனுப்பி வைத்தார்.சென்சார்போர்டு அதிகாரிகள் படத்துக்கும் அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என சொல்லி தணிக்கை சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டார்கள்.கலைவாணர் சிவாஜியையும் 100 துணை நடிகர்களையும் வைத்துக்கொண்டு ஸ்டுடியோவில் செட் அமைத்து ,வீட்டை விட்டு போகும் கதாநாயகன் ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பது போலவும் ,அந்த இடத்தில் திமுக மாநாடு நடப்பது போலவும் காட்சியை படமாக்கினார்.சிவாஜியும் துணை நடிகர்களும் நடித்த புதிகாக படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை படத்தில் முதலில் காட்டி அதன் பின் மாநாட்டு காட்சிகள் நடப்பது போலே இணைத்து ,பணம் படத்தை மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பினார்.சென்சார் அதிகாரிகள் இந்த முறை எதுவும் சொல்லாமல் தணிக்கை சான்றிதழ் கொடுத்தார்கள். பணம் படம் 27.12.52 ல் வெளியான பின் ,சென்னை காமதேனு தியேட்டரில் சிவாஜியின் பெயரில் மயிலாப்பூர் பகுதி...

யாகவா -ஞானப்பறவை

படம்
1991 ஆம் வருசம் வெளிவந்த படம் ஞானப்பறவை.வியட்நாம் வீடுசுந்தரம் டைரக்சன் செஞ்ச இரண்டாவது சிவாஜி படம். சுந்தரம் சினிமா பீல்டுக்கு எப்படி வந்தார்? அவரோட பூர்வீகம் பூண்டி. பூண்டி சர்ச்சுலே இருந்த பாதிரியார் சுந்தரத்துக்கு பழக்கம். சுந்தரத்துகிட்டே ஒரு திறமையிருக்குன்னு தெரிஞ்ச பூண்டி மாதா கோயில் பாதிரியார் நீ சென்னைக்கு போ  அங்க உனக்கு நல்ல எதிர்காலம் அமையும்னு ஆசி கூறி அனுப்பி வெச்சார்.சென்னைக்கு வந்த சுந்தரம் நாடகங்களுக்கு கதை வசனம் எழுதினார். வித்தியாசமான வசன நடை அவருக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்துச்சு.  தனக்கு ஆசி கூறி அனுப்பி வெச்ச பூண்டி மாதா பாதிரியாரை மையமா வெச்சு ஒரு கதை எழுதினார்.கதையோட வித்தியாசத்துக்காக ஆண்டனிங்கற முரட்டு கேரக்டர் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் கேரக்டரை எல்லாம் வெச்சு ரொம்ப டிபரண்டா கதையை ரெடி பண்ணிட்டார். அது முதல்லே நாடகமா நடந்துச்சு. மேஜர் ஹீரோவா நடிச்சார். அந்த நாடகத்தை சிவாஜி பார்த்தார்.சினிமாவா எடுக்க சிவாஜி சொன்னார். அதுப்படியே ஞானஒளி சினிமாவா ரெடி ஆகி பெரிய ஹிட் ஆச்சு. அப்புறம்  சிவாஜிக்கு வியட்நாம் வீடு செஞ்சார் சுந்தரம் .சிவாஜியோட செல்லப்பிள்ளையா ஆ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற