இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி பிறந்தநாள் விழாக்களின் தொகுப்பு

படம்
நடிகர்திலகம் சிவாஜி தன் பிறந்தநாளை எப்போதிருந்து  விமர்சையாக கொண்டாட ஆரம்பித்தார் ?ஏன் கொண்டாட ஆரம்பித்தார் ?என்பது பல சுவாராஸ்யமான விஷயங்களை கொண்டதாகும்.நடிகர் திலகம் நடிக்க தொடங்கிய  ஆரம்ப காலத்தில் இருந்து  அவர் திரைப்பட உலகில் மிகவும் பிசியாக இருந்து கொண்டே இருந்தார்.ஆரம்ப காலங்களில் தன் பிறந்த நாளை கொண்டாடுவதில் அதிக விருப்பம் இல்லாமல் தான் நடிகர் திலகம் இருந்தார். 1967 இம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜர் தோல்வியடைந்தார். திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் காங்கிரஸ் கட்சியும் ஒரு பலவீனத்தில் இருந்தது. காங்கிரஸ் கட்சியையும், காமராஜர் கரத்தையும்  வலுப்படுத்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் முனைந்தார். காங்கிரஸ் கட்சியை வளரச்சிப்படுத்த சிவாஜி செய்த முயற்சிகளில் ஒன்று தான், சிவாஜிகணேசன்  பிறந்த நாள் விழா கொண்டாட்டம். 1970களில் ஆரம்பித்தது இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள். அதற்கு முன்பு வரை தன் வீட்டிலேயே எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த நடிகர் திலகம் அதற்குப் பின்பு தமிழகம் எங்கும் தன் ரசிகர் படையையும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும் ஒன்று கூ...

அன்னை இல்லத்தின் மூன்று சகோதரர்கள்

படம்
அவங்க மூணு பேரு அண்ணன் தம்பிகள்.அவங்க அம்மா அஞ்சு பெத்தெடுத்தும் ரெண்டு நிக்கலை.அந்த குடும்பம் எப்படி இருக்கப் போகுதுன்னு தெரியாமயே ,காலம் சீக்கீரம் அந்த ரெண்டு பேரை கொண்டு போயிடுச்சு.அந்தம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. மூணு பேரையும் வளக்கறதுக்கு. மூணு பேரும் பொறந்தப்போ கலையம்சம் தெரியாமத்தான் அந்த குடும்பம் இருந்துச்சு. மூத்தவருக்கு அடுத்த படியா ஒரு தம்பி .அந்த தம்பிதான் அந்த குடும்பத்தையே உயர்த்தப் போகுதுன்னு அப்ப யாரும் அறிஞ்சிருக்க வாய்ப்பில்லை.வீதிலே நாடகம் டான்ஸ்னு யாராவது காட்டினா ஓடிப்போய் பாக்கறதுதுதான் அந்த தம்பியோட வழக்கமா இருந்துச்சு. அந்த தம்பிக்கு  24 வயசு ஆகறப்போ அந்த குடும்பத்தோட தலை விதி மாறும்னு ஜாதகம் இருந்துச்சு.ஜாதகம் சொன்னது அது.ஆனா அவங்க அதை ஜோஸ்யம் பாத்து தெரிஞ்சுக்கலே. அந்த தம்பியோட 24 வயசு வரைக்கும் ஒண்ணும் பெரிசா இல்லே ,அந்த குடும்பத்துக்கு.அதுக்கு பிறகு ரெண்டாவது பையானாலே உலகப் பேரு கிடைக்க்குமுனு யாரு நெனச்சா ? அவங்க அம்மா வெச்ச பேரே மாறும்படி ஆயிருச்சே.அம்மா வெச்சபேரு ரெண்டாவதா போயிருச்சே.ஆனா அந்த பேரு சொன்னா அசந்து போயிரும் தமிழ்நாடே ! கணேசமூர்த்தி ! முழுப...

மனிதன் நினைப்பதுண்டு பாடல் ஆய்வு...

படம்
ஆஸ்தி அந்தஸ்து அதிகாரம் பதவி பணம் எல்லாம் போயாச்சு.போயாச்சுன்னு சொல்றதை விட தானமா கொடுத்தாச்சு.இப்ப எதுவும் இல்லை.கொடுத்து கொடுத்து தேஞ்சு போன மனுஷன் கடைசியா எதிர்பார்த்துட்டு இருக்கற ஒரு விஷயம் தன்னோட மரணத்தை .இதுதான் அவன்தான் மனிதன் படத்தோடகடைசி பாட்டுக்கான சிச்சுவேஷன். இந்த மாதிரி சிச்சுவேஷன் சொன்னா கவிஞர் லட்டு மாதிரி வார்த்தைகளை கொட்டுவாரு.Ms விஸ்வநாதன் மியுசிக் பத்தி சொல்லவே வேணாம்.அடிச்சு பிரிச்சு மேஞ்சிருப்பாரு  இந்த பாட்டுலே.இவங்க அதகளம் பண்ணியிருந்தா நடிகர்திலகம் விடுவாரா? மனுஷன் கொன்னுருப்பார்.பாட்டை கேக்கறப்பவே நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போகும் .விசூவலா பாக்கறப்போ ,அவ்வளவுதான் நெஞ்செல்லாம் அடைச்சுப் போற மாதிரி பீலிங்இருக்கும்.நல்லா சினிமாவை ரசிக்கறவங்களா இருந்தா இந்த பாட்டு நம்மளை "மெஸ்மரைஸ்" பண்ணிடும். எத்தனை தடவை பாத்தாச்சு.சோகப்பாட்டா இருந்தாலும் சலிக்கவா வெக்குது.இன்னும் கேக்கலாம்னுதான் உணர்வைத் தூண்டுது . வாழ்க்கையை யோசிக்க வெக்கற உணர்வை தர்ற பாட்டு. 'மனிதன் நினைப்பதுண்டு  வாழ்வு நிலைக்குமென்று  இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று ..' இந்த ரெண்ட...

ராமாயண வரியை பாடலுக்கு எழுதிய கண்ணதாசன்

படம்
மயக்கமென்ன இந்த மௌனமென்ன .. வசந்தமாளிகையில் இடம் பெற்ற இந்த பாடலின் மிக முக்கியமான வரி ஒன்றுஉண்டு. இந்த வரியை கண்ணதாசன் எதிலிருந்து எடுத்து இந்த பாடலை உருவாக்கினார் என்பதை அறிந்தால் நாம் ஆச்சர்யப்படுவோம். கண்ணதாசன் கையாண்ட அந்த வரி என்ன?  எதை உதாரணமாக எடுத்து அந்த வரியை எழுதினார் என்பதை பார்க்கலாம். அதற்கு முன்பு இதற்கு ஆதாரமான ராமாயணக்கதை ஒன்று . சீதையை கடத்தி சென்ற ராவணன் சீதையை ஒரு வனத்தில் சிறை வைத்தான் அது தான் அசோக வனம் ஆயிற்று. சீதை எங்கே இருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க பலரையும் பல பகுதிகளுக்கு ராமன் அனுப்பி வைத்தான். அவர்களில் அனுமனும் ஒருவன்.அனுமனும் இலங்கையில் சீதையை சந்தித்து விட்ட பின் ,ராமன் எவ்வாறேனும் உன்னை மீட்பான் என்று சீதையிடம் சொல்கிறான்.சீதையும் அனுமன் மேல் நம்பிக்கை கொண்டாள். "சீதையை கண்டேன் "என்று ராமனிடம் சொல்ல என்ன சேதி சொல்கிறீர்கள் ? என்று சீதையிடம் அனுமன் கேட்க,திருமண இரவன்று ராமன் சொன்ன, இனி சிந்தையிலும் பிறிதொரு மாதை தொடேன் என்ற சத்தியத்தை சொல்லி ,கூடவே தன் கணையாளியையும் கொடுத்து அனுப்புகிறாள். கம்பனின் இந்த வரிகள் கண்ணதாசனின் மனதில் ஆழப் பதிந்து...

ஒரு காசுக்கு 9 படமா?

படம்
சிவாஜியோட இந்த  ஒரு படத்துக்கு காசு கொடுத்து டிக்கட் வாங்கிட்டு போயி படம் பாத்துட்டு வந்தா ஒன்பது படம் பாத்துட்டு வந்த மாதிரி இருக்கும். முதல் சிவாஜி வந்து கொஞ்ச நேரத்துலே அடுத்த சிவாஜி ,அப்புறமா சிவாஜி சிவாஜின்னு ஒன்பது சிவாஜியும் வந்து கடைசி காட்சியிலே எட்டு சிவாஜியும் வந்து உக்காந்த அந்த ஒரு சீனைப் பாத்து ஆடிப்போச்சு பாத்தவங்க மனசெல்லாம். ஆக்ஷன் இல்லாத இங்கிலீஸ் படத்துலே வர்ற இங்கிலீஸ் ஹீரோவை பாக்கற மாதிரி இருக்கும் அந்த முதல் சிவாஜி வர்ற அற்புதராஜ் கேரக்டரை பாக்கையிலே.அந்த படித்த மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த அந்த நாகரீக சீமான் தன் பார்வையில் தன் நடையில் பேச்சில் தாஜ்மஹாலை முதன்முதலில் பார்த்த பரவசத்தை தந்தான்.'நளினா' இந்த பெயர் அவர் உதட்டில் நெளினா என்று வந்தது.ஒரு பிரிட்டீஸ் கனவானின் பேச்சு போலே.. தமிழ் சினிமாவில் யாரும் பார்த்தேயிராத ஒரு மேனரிசத்தை முதன்முதலாக பார்த்து அனுபவித்தான் அது வரை பார்க்காத தமிழன். சிவாஜியிடம் இருந்து இப்படி ஓர் நடிப்பை கண்டிப்பாக வாங்க முடியும் என்று நினைத்துத்தான் இயக்குனர் அந்த வேடத்துக்கு அற்புதராஜ் என்று பெயர் வைத்தாரோ என்னவோ?  உருண்டு வரும...

பிளாக் டிக்கெட்...

படம்
பிளாக் டிக்கட்.. இந்த தலைமுறைக்கு இது தெரியாத விஷயம்.இப்பல்லாம் புதுப்பட ரிலீஸ்னா தியேட்டர்லேயே அதிக விலையிலே விக்கறாங்க. 2000 வருஷம் வரைக்கும் இந்த வியாபாரம் இருந்துச்சு. அதிக தியேட்டர்கள்லே படம் வெளியிடற முறை எப்போ வந்துச்சோ ,மால், மல்ட்டிபிளக்ஸ் வந்த பின்னாலே, தொலைஞ்சு போன  வியாபாரந்தான் இந்த பிளாக்டிக்கெட் பிசினஸ்.என்னாடா ,இதை  போய் வியாபாரம்னு சொல்றானேன்னு நெனக்காதீங்க.இது அப்பிடித்தான் நடந்துச்சு அந்த டயத்துலே. புதுப்படம் ரிலிசாச்சுன்னா,குறிப்பா ஸ்டார் வேல்யூ படங்கள்..அந்த நடிகனோட ரசிகன் வர்றானோ இல்லையோ ,முதல்லே தியேட்டர்லே நிக்கறது இந்த பிளாக் டிக்கெட் கும்பல்தான்.ரிலீசாகற புதுப்படம் எத்தனை நாள் ஹவுஸ்புல்லா ஓடுதோ அத்தனை நாளும் இவங்க ஆஜர் ஆயிடுவாங்க. முதல் ஷோ ரிசல்ட்டை பட தயாரிப்பாளரை விட இவங்க எதிர்பார்ப்பாங்க.முதல் ஷோ இடைவேளை டயத்துலேயே படத்தை பத்தின ரிப்போர்ட் ஓரளவு இவங்களுக்கு தெரிஞ்சுடும். படம் பயங்கர ஹிட்டுன்னா டிக்கெட் விலை தாறு மாறா ஏறிடும். ஒரு ஷோ ஓடிட்டு இருக்கறப்போ ,அடுத்த ஷோவுக்காக பெரிய வரிசையிலே நிப்பாங்க .50 பேரு கூட டிக்கட் வாங்கியிருக்க மாட்ட...

சிவாஜி படங்களில் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்

படம்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.பாட்டுக்கோட்டையார் என சிறப்புடன் அழைக்கப்பட்டவர்.இவர் சினிமாவுக்கு 1955 ல் இருந்துதான் எழுதத் தொடங்கினார்.1959 ல் இயற்கை எய்தி விட்டார்.அவர் மரணித்த போது வயது 29 தான்.சினிமாவுக்குகாக 180 பாடல்களுக்கு மேல்தான் எழுதி இருந்தார்.அவர் எழுதிய இந்த மொத்த பாடல்களில் 42 பாடல்களை சிவாஜி படங்களுக்கு எழுதி  இருக்கிறார்.இந்த வகையில் சிவாஜி படங்களுக்கு தான்  அவர் அதிக பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரங்கோன்ராதா ,மக்களை பெற்ற மகராசி,அம்பிகாபதி,புதையல்,உத்தமபுத்திரன்,பதிபக்தி, தங்கப்பதுமை,அவள் யார்?பாகப்பிரிவினை, இரும்புத்திரை,புனர் ஜென்மம் ஆகிய சிவாஜி படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்களில் பெரும்பாலும் சமூக சித்தாந்த கருத்துக்கள் மேலோங்கி இருக்கும்.எளிமையான வார்த்தைகளில் பொட்டில் அடித்தாற் போலே எழுதுவது இவருடைய பாணி... நடிகர்திலகத்தின் எந்தெந்த படங்களுக்கு என்னென்ன பாடல்களை இவர் எழுதியுள்ளார் என்பதை பார்க்கலாம். ரங்கூன் ராதா (1956) பட்டுக்கோட்டையார்  நடிகர்திலகத்தின் படத்துக்கு பாடல் எழுதிய முதல் படம் ரங்கோன் ...

நடக்கப் பிறந்த நடையழகன்

படம்
என்ன நடையப்பான்னு ?ரொம்ப வியந்து எந்த நடிகனோட நடையையும் சொல்ல முடியாது.ஒவ்வொரு நடிகனோட பெஸ்ட்டா  பல படங்களை பல பேரு பல படத்தை சொல்லியிருக்கலாம். அவங்களோட  நடிப்பையும் சொல்லியிருக்காங்க.ஆனா இந்த நடை விஷயத்துலே மட்டும் மத்த நடிகர்களோட நடை  ஸ்டைலை விவரிச்சதை பாத்திருக்க முடியாது.நடையா ! பார்ரா ! சிவாஜியோட நடையை அப்பிடின்னு ஏகப்பட்ட படங்களை சொல்லலாம். அதுவும் சில படங்கள்லே சிவாஜியோட நடையை  காட்டறதுக்காகவே காட்சிகளை எக்ஸ்ட்ராவா வெச்சிருப்பாங்க.ஒரு காட்சியிலே நடிச்சு முடிச்ச பின்னாலே அந்த காட்சியை  அதோட முடிச்சிருக்கலாம்.ஆனா அதோட தொடர்ச்சியா சிவாஜியோட நடையை காமிச்சு  சீனை முடிச்சிருப்பாங்க.உதாரணமா உத்தமன் படத்துலே மஞ்சுளாவோட வீட்டுலே வீகேஆரோட பேசிட்டு வர்ற காட்சி,எங்கள் தங்க ராஜா படத்துலே மஞ்சுளாகிட்ட காலேஜ்லே என்னை மறந்துடுன்னு சொல்லிட்டு நடந்து வர்ற காட்சின்னு பல படங்களை சொல்லலாம். அதை விட சிவாஜியோட நடையை காமிச்சே புல் டைட்டில் ஓடற படமும் இருக்குது. அவன் ஒரு சரித்திரம் படத்துலே புல் டைட்டிலும் சிவாஜியோட நடையை காமிச்சே முடிச்சிருப்பாங்க. இதுதான்டா ராஜநடை இதுதான்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற