இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி -ஒளிப்பதிவாளர்கள்

படம்
ஒரு நடிகன் கஷ்டப்பட்டு நடிப்பதை இஷ்டப்பட்டு படம் பிடிப்பவர்களே ஒளிப்பதிவு மேதைகள் . நடிகனின் அழகை குறித்த அளவில் கூட்டிக் கொடுப்பவரும் அந்த மேதைகளே. 360 டிகிரியில் எந்த கோணத்தில் நடிகர்திலகத்தை படம் பிடித்தாலும் அந்த மாபெரும் நடிகனின் நடிப்பை அறிய முடியும். இது பல ஒளிப்பதிவு மேதைகள் சொன்னது.  'silhouette' எனப்படும் நிழல்  உருவத்தில் சிவாஜியை படம் பிடித்தாலும் அவரின் போஸ் தனத்துவமாக இருக்கும். நடிகர் திலகம் கிட்டத் தட்ட 100 இயக்குநர்கள் , 60 கதாநாயகிகள் , 50 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார் . எல்லோராலும் தினந்தோறும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்ற விஷயங்கள் தான்  இது . ஆனால் ஒரு படத்துக்கு கண் போல விளங்கும் காமிரா ஒளிப்பதிவாளர்களுடன் அவர் பணிபுரிந்ததை யாரும் பதிவு செய்யதில்லை. அதற்காகவே இந்த பதிவு. பராசக்தி படத்தில் பிளாட்பாரத்தில் நின்று போலீசிடம் சிவாஜி பேசும் அந்த காட்சியை பாருங்கள். இருட்டுப் பிண்ணனியில் சிவாஜி போலீஸ் நிற்கும் துல்லிய ஒளிப்பதிவுக்கு சொந்தக்காரர் மாருதிராவ்.உலக நடிகர்களில் மேலான அந்த கலைஞனை படம்  பிடித்த முதல் ஒளிப்பதிவு மேதை. பிளாட்பாரத்தில் பட...

பானுமதி கோபம்

படம்
சிவாஜியை சிறந்த நடிகரா தேர்ந்தெடுக்காதீங்க'.வேற ஒருத்தர் பேரை சொல்றோம். அவரையே செலக்சன் பண்ணுனதா அறிவிப்பு செஞ்சுறுங்க.இப்படி ஒரு சிபாரிசு வந்துச்சு தேர்வுக் கமிட்டிக்கு. தேர்வுக் குழுவுலே இருந்த பானுமதி ,கமிட்டி குழுவுலே இருந்தே விலகிட்டாங்க. அது தான் பானுமதி . சிவாஜி நடிப்பு மேலே அந்தளவு மதிப்பு வெச்சிருந்தவங்க பானுமதி .. இந்த கேலிக் கூத்து நடந்தது வேற எங்கயும் இல்ல. தமிழ்நாடு அரசு விருது குழு கமிட்டிலே நடந்த கூத்துதான். 60 வருசமாச்சு திராவிட கட்சிகளோட ஆட்சி. தமிழகத்திலே   ஆரம்பத்திலே அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தோட  மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது. சிவாஜி கணேசனுக்கு அவரோட வாழ்நாளிலே கடைசி நொடி வரைக்கும் , சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காம செஞ்சதுதான்  ஆட்சி செஞ்சவங்க காட்டிய நன்றிக்கடன்!’ இந்த இடத்துலே தான் நடிகை பானுமதியை பாராட்டணும். தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்க போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர்  சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடினவர்   பானுமதி.  நடந்தது தான்  என்ன? தமிழக அரசின...

சிவாஜிக்கு சதி

படம்
1951 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 4 நாட்கள் திமுக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை NSகிருஷ்ணன் படமாக எடுத்து  சிவாஜியின் இரண்டாவது படமான பணம் படத்தில் சேர்த்து சென்சார் போர்டுக்கு தணிக்கைக்காக அனுப்பி வைத்தார்.சென்சார்போர்டு அதிகாரிகள் படத்துக்கும் அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என சொல்லி தணிக்கை சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டார்கள்.கலைவாணர் சிவாஜியையும் 100 துணை நடிகர்களையும் வைத்துக்கொண்டு ஸ்டுடியோவில் செட் அமைத்து ,வீட்டை விட்டு போகும் கதாநாயகன் ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பது போலவும் ,அந்த இடத்தில் திமுக மாநாடு நடப்பது போலவும் காட்சியை படமாக்கினார்.சிவாஜியும் துணை நடிகர்களும் நடித்த புதிகாக படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை படத்தில் முதலில் காட்டி அதன் பின் மாநாட்டு காட்சிகள் நடப்பது போலே இணைத்து ,பணம் படத்தை மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பினார்.சென்சார் அதிகாரிகள் இந்த முறை எதுவும் சொல்லாமல் தணிக்கை சான்றிதழ் கொடுத்தார்கள். பணம் படம் 27.12.52 ல் வெளியான பின் ,சென்னை காமதேனு தியேட்டரில் சிவாஜியின் பெயரில் மயிலாப்பூர் பகுதி...

யாகவா -ஞானப்பறவை

படம்
1991 ஆம் வருசம் வெளிவந்த படம் ஞானப்பறவை.வியட்நாம் வீடுசுந்தரம் டைரக்சன் செஞ்ச இரண்டாவது சிவாஜி படம். சுந்தரம் சினிமா பீல்டுக்கு எப்படி வந்தார்? அவரோட பூர்வீகம் பூண்டி. பூண்டி சர்ச்சுலே இருந்த பாதிரியார் சுந்தரத்துக்கு பழக்கம். சுந்தரத்துகிட்டே ஒரு திறமையிருக்குன்னு தெரிஞ்ச பூண்டி மாதா கோயில் பாதிரியார் நீ சென்னைக்கு போ  அங்க உனக்கு நல்ல எதிர்காலம் அமையும்னு ஆசி கூறி அனுப்பி வெச்சார்.சென்னைக்கு வந்த சுந்தரம் நாடகங்களுக்கு கதை வசனம் எழுதினார். வித்தியாசமான வசன நடை அவருக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்துச்சு.  தனக்கு ஆசி கூறி அனுப்பி வெச்ச பூண்டி மாதா பாதிரியாரை மையமா வெச்சு ஒரு கதை எழுதினார்.கதையோட வித்தியாசத்துக்காக ஆண்டனிங்கற முரட்டு கேரக்டர் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் கேரக்டரை எல்லாம் வெச்சு ரொம்ப டிபரண்டா கதையை ரெடி பண்ணிட்டார். அது முதல்லே நாடகமா நடந்துச்சு. மேஜர் ஹீரோவா நடிச்சார். அந்த நாடகத்தை சிவாஜி பார்த்தார்.சினிமாவா எடுக்க சிவாஜி சொன்னார். அதுப்படியே ஞானஒளி சினிமாவா ரெடி ஆகி பெரிய ஹிட் ஆச்சு. அப்புறம்  சிவாஜிக்கு வியட்நாம் வீடு செஞ்சார் சுந்தரம் .சிவாஜியோட செல்லப்பிள்ளையா ஆ...

raja film

படம்
எல்லாம் இருக்கணும்.எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது.இப்படி செய்த படமே ராஜா! ராஜாவின் ஆட்சியில் குறை இருக்கலாமோ?  ராஜான்னா ராஜாதான்.. முன்னோடிகள் எல்லாம் பிழியோ பிழியென்று சாரெடுத்து விட்டார்கள் ராஜாவை.நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது ?யாருடைய பார்வையிலும் ராஜா அழகோ அழகு. ஒரு புதிய பட டிரெயிலரில் தண்ணீரில் இருந்து வில்லை எடுக்கும் காட்சி வரும்.வில்லை எடுக்கும் போது தண்ணீரும் கனமாக மொந்தமாக வில்லுடன் சேர்ந்து வரும்.ஸ்லோமோஷனில் க்ராபிக்ஸ் டெக்னிகல் உத்திகளில் ஷாட் அமைக்கப்பட்டு பார்ப்பவரை ஈர்க்கும்.ராஜாவை பாருங்கள்...ஒரு பொருளை எடுப்பதாகட்டும்,  கையாள்வதாக ஆகட்டும், கைகளை விரிப்பதில் ,கால்களை வைத்திருப்பதில் வார்னிஷ் முடிந்த வேலைபோல் பளீர்! பளீர்!  நடிகர்திலகத்துக்கு உவமை என்று எதைக் கூற முடியும்? ராஜாவில் நடிகர்திலகத்தின் பிரசன்டேசனை விக்கிரமாதித்தன் வேதாளம் போல் விடுகதை கதைப் புதிர்களாக ஒரு புத்தகம் போடலாம். சிகரெட் பற்றவைக்கும் காட்சி. சிறையில்.லைட்டர்  நீட்டுவார் மனோகர் ..ஆரம்ப அறிமுகமாக காட்சி இது.எவ்வளவு சாதாரணமான காட்சி தான் இது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடி...

சிவாஜி பற்றி பிரபு

படம்
அப்பா கூட  ஓரே வீட்டுலே இருந்தாலும் அவரை சந்திச்சு பேசறதே மாசத்துக்கு ஒரு தடவைதான்.அப்படி இருந்துச்சு எங்க சின்ன வயசு வாழ்க்கை. அந்தளவுக்கு அப்பா பிஸியா இருந்தார்னு இளையதிலகம் பிரபு அடிக்கடி சொல்வார். தன்னுடைய மகன்களிம் கூட மனம் விட்டுப் பேச முடியாத பிஸி நிலையிலேதான் சிவாஜி லைப்பும் அமைஞ்சு இருந்துச்சு. இளையதிலகம் பிரபு தன்னோட குடும்பம் ,சித்தப்பா சண்முகம் ,பெங்களூர் ஸ்கூல் படிப்பு வாழ்க்கையை பத்தி  சொன்ன விஷயங்கள் ரொம்ப ஆச்சர்யமா , சுவராஸ்யமா இருக்கும். அது பத்தின சில இன்ட்ரெஸ்டிங்கான சில தகவல்களை இந்த பதிவுலே பாக்கலாம். இளையதிலகம் பிரபு பெங்களூர் பிஷப் காட்டன் ஸ்கூல்லே படிச்ச விஷயம் பல பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். பிரபு மட்டுமல்ல சிவாஜி  குடும்பத்துலே இருந்து 12 பேர் இந்த ஸ்கூல்லே தான் படிச்சாங்க. சிவாஜி மகன்கள் ராம்குமார் பிரபு சிவாஜி தம்பி மகன்கள் அண்ணன் தங்கவேலு பிள்ளைகள் எல்லாம் பெங்களூர்லேதான் படிச்சாங்க. அந்த நேரத்துலே எல்லாம் சிவாஜி ரொம்ப பிஸியா இருந்த நேரம்.பிள்ளைகள் சிவாஜியை சந்திச்சு பேசறது ரொம்ப அரிய விஷயமா இருந்தது. பிள்ளைகளை பாக்க எப்போதாவது தான் சிவாஜி போவா...

சிவாஜி - AL.நாராயணன்

படம்
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு வசனகர்த்தா திரு.A.L.நாராயணன் அவர்கள் வசனம் எழுதிய படங்கள்... நடிகர்திலகம் சிவாஜியின் அதிக படங்களுக்கு வசனம் எழுயவன் நான் என்று ஆரூர் தாஸ் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆனால் அது தவறான தகவல்.சிவாஜியின் அதிகமான படங்களுக்கு வசனம் எழுதியவர் A.L. நாராயணன்.ஆரூர்தாஸ் சிவாஜிக்கு எழுதிய படங்கள் 28.AL.நாராயணன் எழுதிய படங்களோ 34. நாராயணன் பேரை சொல்ல ஒரு வார்த்தை போதும் .அவர் எழுதிய வசனத்தில் இருந்தே.. ராஜான்னா ராஜாதான்.ராஜா படத்தின் இந்த பேமஸ் அக்மார்க் பன்ஞ் வசனத்தை எழுதியவர் AL.நாராயணன். AL.நாராயணன் நடிகர்திலகம் கௌரவ நடிகராக நடித்து 1956 ல் வெளிவந்த மர்மவீரன் படம்தான் முதன்முதலாக வசனம் எழுதிய சிவாஜி படம். அதற்கு பின் 1966 ல் வெளிவந்த தாயே உனக்காக படத்துக்கும் வசனம் எழுதினார்.இதிலும் சிவாஜிக்கு கௌரவ வேடம்தான்.. நாராயணன் எழுதிய  முதல் முழு நீள சிவாஜி படம் என் தம்பி . வார்த்தைகளில் எந்த சிக்கல்களும் வைக்காத வசனகர்த்தா இவர். ஒரு படத்தோட கதையை ஒரு வார்த்தை ஒரு வரின்னு ஏதோ ஒரு இடத்தில்  நச்சென்று வைத்து விடுவது நாராயணனின் ஸ்பெசாலிட்டி. இந்த என்தம்பி படத்த...

பாபு - கை ரிக்சா

படம்
ஒரு படம் எடுத்தா இப்படி எடுக்கணும். ஒரு சமூக அவல பிரச்சினையையே தீத்து வெச்ச படம்.சினிமாவை ஏனோதானான்னு எடுக்கறவங்க இந்த படத்தை கண்டிப்பா பாக்கணும். அப்படி என்ன படம் ? என்ன சமூக அவலத்தை ஒழிச்சு கட்டுச்சு?  அந்த காலத்துலே மெட்ராஸ் பட்டணத்துலே கை ரிக்ஷா ரொம்ப அதிகம் .டிராவல் பண்றதுக்கு செலவு கம்மியா இருந்த விஷயம்.பக்கமா போய்ட்டு வர்றதுக்கு சுலபமா கிடைச்ச டிரான்ஸ்போர்ட் அதுதான். மெட்ராஸ்லே மக்கள் அதிகமா இருக்கற இடங்கள்லே எல்லாம் இந்த கை ரிக்ஷா வண்டிகள் நிறைய இருக்கும். இன்னைக்கு ஆட்டோ ஸ்டாண்ட் மாதிரி கை ரிக்ஷா ஸ்டாண்ட் எல்லா இடத்துலயும் இருந்துச்சு. தனியாளா மட்டுமல்ல ஒரு குடும்பமே டிராவல் பண்ண சௌகரியமா இருந்தது  கை ரிக்ஷா . இதுலே என்ன கொடுமைன்னா கை ரிக்ஷாவை ஒரு மனுசன் இழுத்துட்டு போறதுதான்.மாஞ்சு மாஞ்சு வெயில் மழைன்னு பாக்காமே இழுத்துட்டு ஓடணும்.இதுலே நிறைய கை ரிக்ஷா தொழிலாளிகள் செருப்பே போட மாட்டாங்க. ஓட்டமா ஓடி ஓடி அடுத்த சவாரிக்காக வெயிட் பண்ணுவாங்க.அப்படி கஷ்டப்பட்டாத்தான் அவங்க குடும்பத்து வயிறு நிறையும். பாபு படத்துலே பாலாஜி பேசற மாதிரி ஒரு வசனம் வரும். என்ன இது ? ஒரு மனுசனை ...

சிவாஜி சிலைகள்

படம்
தமிழ் சினிமாலே கிட்டத்தட்ட 50 வருஷம் எல்லாவிதமான நடிப்பையும் செஞ்சு ... வந்த ..வரப்போற ... நடிகர்களுக்கு எல்லாம் ஒரு டிக்சனிரியா தன்னோட கடமையை பெர்பெக்ட்டா செஞ்ச சிவாஜியை கடவுள் தன் பக்கம் கூப்பிட்டுக்கிட்ட வருஷம் 2001. நடிப்புலே விஸ்வரூபமான அந்த  மகா நடிகனுக்கு சிலை அமைஞ்ச ஊர்கள் எப்போ வெச்சாங்க அப்படிங்கறத சொல்லத்தான் இந்த பதிவு. சிவாஜி காலமான பின்னாலே தமிழ்நாட்டுலே தான் முதல்லே சிலை வெச்சிருக்கணும். அதுக்கான வாய்ப்பு தமிழ்நாட்டுக்கு கிடைக்கலே. புதுச்சேரி அந்த பேரை தட்டிட்டு போயிடுச்சு. புதுச்சேரி கவர்மெண்ட்டே அந்த காரியத்தை செஞ்சது. அன்னைக்கு புதுச்சேரி முதல்வரா இருந்த ரங்கசாமி அவர்கள் சிவாஜிக்கு முதன்முதலா சிலையை வெச்சு  சிவாஜிக்கு பெரிய கௌரவம் பண்ணிட்டார் .புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு காலத்துலே சிவாஜி மன்ற தலைவரா இருந்தவர் .11.2.2006 லே புதுச்சேரியிலே சிவாஜி சிலையை புதுவை முதல்வரே  திறந்து வைச்சார்.பக்கத்து மாநில அரசாங்கமே சிவாஜிக்கு சிலை வெச்சு சிவாஜிக்கு பெருமை சேர்த்துச்சு.சிவாஜி சிலை திறப்பு விழாவையும் பெரிய அளவுலே நடத்தி முடிச்சார் ரங்கசாமி. 2006 ஆம் வருசம் ...

காசிக்கு போன சிவாஜி

படம்
இப்ப நீங்க பாக்கற இந்த போட்டோ ஓரு அபூர்வமான போட்டோ.  1998 ஆம் வருசம் எடுத்த இந்த போட்டோவை 2002 ஆம் வருசம் வரைக்கும் இந்த போட்டோவை யாரும் பாத்திருக்க முடியாது. கிட்டத்தட்ட 4 வருசமா இந்த போட்டோ எங்க இருந்துச்சு. இந்த போட்டோ எங்க எடுக்கப்பட்டது. இந்த போட்டோவுக்கு பின்னாலே இருக்கற விஷயம் என்ன ? சிவாஜி காலமான பின்னாலே சிவாஜி பிலிம்ஸ் ஆபீசுக்கு போனவங்க பாத்திருக்கலாம் இந்த போட்டோவை.  எட்டடி உயரத்துலே சுவத்துலே மாட்டி வெச்சிருந்தாங்க சிவாஜி பிலிம்ஸ் ஆபீஸ்லே. நடிகர்திலகம் கங்கை நதியிலே குளிச்சிட்டு  ரெண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிடறமாதிரி ,சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி  பாக்கவே பரவசமா இருக்கற இந்த அருமையான அம்சமான சிவாஜி போட்டோ பாத்தவங்க எல்லாரையும் ஆச்சர்யமாக பாக்க வெச்சது. நடிகர்திலகம் சிவாஜி  இந்தியா முழுக்க போயிருக்கிறார். ஆனால் காசிக்கு போனது இல்லே. காசிக்கு போகணும் ,அங்க  இருக்கற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு போய் சிவனை கும்பிடணும்னு ரொம்ப நாளாவே சிவாஜிக்கு ஆசை இருந்துச்சு. சிவாஜியோட இந்த ரொம்ப நாள் ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு அவங்க குடும்பம் நெனச்சது....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற