இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

அன்னைஇல்லத்தின் அரசனடா

படம்
அன்னைஇல்லத்தின் அரசனடா அவருக்கு இணையில்லை எவருமடா ராஜாமணி ஈன்ற சிங்கமடா சின்னையா போலே தங்கமடா நடிப்பில் அவனே வேந்தனடா ரசிகனுக்கு அவனே திலகமடா! (அன்னை இல்லத்தின்..) உலகம் போற்றிய கலைஞனடா உயர்பண்பில் அவன்தான்மனிதனடா  கலைகளும் அவனிடம் தஞ்சமடா கற்காத அவனோரு மேதையடா  எதிரியும் மயங்கும் நடிகனடா எல்லைகள் இல்லா சிகரமடா (அன்னை இல்லத்தின்..) நடிப்பே அவனுக்கு வேதமடா நடிகருக்கெல்லாம் அவனே பாடமடா தேவர்க்கெல்லாம் பொருந்திய உருவமடா தேகமெல்லாம் நடிப்பை கொண்டவனடா மண்ணில் உதித்த அதிசயமடா மகேசனை காட்டிய முகமடா (அன்னை இல்லத்தின்..) எவனடா இவரைப் போலே எவனடா  என்றுமே இவரே உச்சமடா தமிழனுக்கு இவரால் பெருமையடா  தரணியெல்லாம் வியந்த மனிதனடா இல்லை இவருக்கோர் இணையடா  இவர் பெயரே ஆண்ட மன்னன் சிவாஜியடா.. (அன்னை இல்லத்தின் ..) செந்தில்வேல் சிவராஜ்

சிவாஜி செய்த ஆன்டிஹீரோ வேடங்கள்

படம்
பராசக்தி வெளியாகியாச்சு.சிவாஜியும் தமிழ்நாட்டுலே நெம்பர் 1 ஆயிட்டாரு.அதுக்கு அடுத்ததா மூணு படம் பண்ணி 5 வது படத்துக்காக சிவாஜிகிட்ட கதை சொல்ல வராங்க.நீங்க தான் ஹீரோன்னு சொல்லி கதை சொல்றாங்க. கதையை கேட்டு முடிச்சா சிவாஜியோட ரோலை கேட்டா டென்ஷன் ஆயிடும்.படத்துலே ஹீரோ ஒரு பெண் பித்தன் ,நல்ல விஷயங்களே இல்லாத ஒரு மனுஷனா அந்த வேஷம் இருக்கு.கதையை கேட்ட சிவாஜி என்ன சொல்லியிருப்பாரு ?நமக்கு அதிர்ச்சிதான்.ஆனா சிவாஜி சொன்ன பதில் 'நடிக்க ரொம்ப சம்மதம்'னு சொல்லிட்டாரு. முதல் படம் வந்து சமூகப்புரட்சி பண்ணி சிவாஜியை எங்கேயோ போய் வெச்சிருக்கு.வளர வேண்டிய நேரத்துலே இந்த மாதிரி படத்துலே யாராவது நடிக்க ஒப்புக்குவாங்களா ?இங்க தான் அந்த விதியவே உடைச்செறிஞ்சார் சிவாஜி .திரும்பிப்பார்னு படத்துலே நடிச்சு சினிமா பீல்டையே திரும்பி பாக்க வெச்சுட்டாரு.அங்க ஆரம்பிச்சுச்சு சிவாஜியோட ஆட்டம்.ஆன்ட்டிஹீரோ அப்படிங்கற வார்த்தையே அதில இருந்துதான் பிரபலமாச்சு. கரெக்டா 8 மாசம் கழிச்சு ஒரு கதை வருது சிவாஜிகிட்டே.இந்த படத்துலே நீங்க நாட்டையே காட்டிக் கொடுக்கிற கதாநாயகனா நடிக்க வேண்டிய ரோல்னு சொல்றாங்க.நிஜத்துலே சிவாஜி ...

சிவாஜியை தவிர யாரும் இல்லை-சத்யஜித்ரே

படம்
பிரான்ஸ் நாட்டின் உயர்ந்த பாரம்பர்ய விருதுகளில் ஒன்றான 'செவாலியே விருது', ஆஸ்காருக்கு நிகரான விருதாகும்.இதை முதன்முதலில் பெற்ற இந்தியர்  'சத்யஜித் ரே' அதன் பின் சிவாஜி கணேசனுக்கு , 'செவாலியே விருது' வழங்கப்பட்டது. சிவாஜி கணேசனின் பெயர் செவாலியே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, செவாலியே கமிட்டியின் ஆய்வில் இருந்தபோது, ​​'இந்த உயரிய விருதைப் பெறும் அளவுக்கு சிவாஜி கணேசன் தகுதி பெற்றவரா ? என்ற கேள்விக்கு, அந்தக் குழு யாரை அணுகியது தெரியுமா? இந்தியாவில் செவாலியே விருது பெற்ற சத்யஜித்ரே அவர்களை. கமிட்டிக்கு 'ரே' சொன்ன பதில் : 'இந்திய திரைப்பட துறையில்  சிவாஜி கணேசனைத் தவிர இந்த விருதைப் பெறுவதற்கு பொருத்தமான  திறமை நிறைந்த கலைஞன் இன்று யாரும் இல்லை'.என்று... ஆனால் ரே ஏற்கனவே பெற்ற செவாலியேவிருதுக்கும் சிவாஜிக்கு வழங்கப்பட்ட விருதுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. சிவாஜிக்கு வழங்கப்பட்ட செவாலியே  விருது சத்யஜித் ரேக்கு வழங்கப்பட்டதை விட ஒப்பீட்டளவில் அல்லது தரவரிசையில் சற்று உயர்ந்தது. செவாலியே விருதைப் பெற சத்யஜித்ரே பிரான்சுக்கு நேர...

சிவாஜியின் தங்கை திருமண செய்திகள்

படம்
சின்னையா மன்றாயருக்கு ஆறு பிள்ளைகள்.அவர்களில் 5 ஆண் பிள்ளைகள்.ஒரே மகள். சிவாஜி நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சிவாஜியின் அண்ணன்கள் இரண்டு பேர் இறந்து விட்டார்கள்.சிவாஜி குடும்பத்தில் ஒரே ஒரு பெண்பிள்ளை என்பதால் அவர் மேல் அளவற்ற பாசத்தை குடும்பத்தார் வைத்திருந்தார்கள். சிவாஜியின் திருமணம் பராசக்தி வருவதற்கு 5 மாதத்திற்கு முன்பே சுவாமிமலையில் நடைபெற்று விட்டது. சிவாஜியின் ஒரே பாசத்தங்கையின் பெயர் பத்மாவதி. தன்னுடைய திருமணத்தை வெகு எளிமையாக வெறும் 500 ரூபாயில் நடத்தி முடித்த சிவாஜி தன் தங்கையின் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த நினைத்தார். சிவாஜி சினிமாவில் நடித்து புகழின் உச்சியில் இருந்தார் அப்போது.சிவாஜி அப்போது சென்னையில் அன்னைஇல்லத்தை வாங்கியிராத நேரம்.சிவாஜி வாழ்ந்த திருச்சி சங்கிலியாண்டபுரத்திலே தங்கையின் திருமணத்தை நடத்த எண்ணினார்.1955 ஆம் ஆண்டு சங்கிலியாண்டபுரத்திலே சிவாஜி வீட்டில் மிகப்பெரிய  பந்தல் போடப்பட்டும்,வாழை மரங்களும் ,தோரணங்களுமாக அமர்க்களப் படுத்தி கொண்டிருந்தது.ஊரே வியக்கும் வண்ணம் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. சிவாஜியின் திரையுலகை சேர்ந்த நண்பர்...

பட்டிக்காடா பட்டணமா வெற்றிவிழா

படம்
பி மாதவனின் ஆஸ்தான கதை ஆசிரியரான பாலமுருகன் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியின் பண்பாட்டினை மையமாக வைத்து தமிழரின் நாகரீகத்தை ஆணித்தரமாக பாலமுருகன் பதிவு செய்திருந்த கதை பட்டிக்காடா பட்டணமா . படப்பிடிப்பு தொடங்கிய நாளன்று பாலமுருகன் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று வந்தார். படப்பிடிப்பு தளத்துக்கு அவர் வந்த வேளையில், சிவாஜி முக்கையா சேர்வையாக ஒப்பனையில் இருந்தார் . சிவாஜி தனது சொந்த கற்பனையில் அந்த ஒப்பனையை செய்திருந்தார். அவர் கற்பனையில் உதித்திருந்த சிகை அலங்காரம் மூக்கையா சேர்வையை கம்பீர இளைஞராக காட்டியது . சிவாஜியின் ஒப்பனையை பார்த்துக் கொண்டிருந்த பாலமுருகன் மனதில் ஒரு சின்ன ஆலோசனை தோன்றியது.அதனை சிவாஜியிடம்  சொன்னால் ஏற்றுக் கொள்வாரா என்ற சந்தேகம் அவருக்கு. பாலமுருகன் முகத்தை பார்த்த சிவாஜிக்கு எதையோ சொல்ல பாலமுருகன் முயற்சி செய்வதை அறிந்து கொண்டார். சிவாஜிக்கு எப்படி நினைவாற்றல் ஒரு வரப்பிரசாதமோ, அதுபோல ஒருத்தருடைய முகத்தைப் பார்த்து அவரின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் திறனையும் சிவாஜி பெற்றிருந்தார் .பாலமுருகன் பார்வையை வைத்து அவர் தன்னிடம் எதையோ சொல்ல துடிப்பதை அறிந்தார் . அண...

சாப்பாட்டு ராமன்

படம்
மாதவன் டைரக்ஷன்லே சிவாஜி 10000 வாலா  சரவெடி மாதிரி நடிப்பை கொளுத்தி போட்ட படம்தான்  ராமன் எத்தனை ராமடி. நாலஞ்சு சின்ன பசங்க,ஒரு ஆயாதான் உலகம்னு வாழ்ந்துகிட்டிருக்கிற கேரக்டர்தான் ஆரம்ப பாதி சாப்பாட்டு ராமனா நடிச்ச சிவாஜிக்கு. அரை டவுசர் ,கொஞ்சம் அரை வேக்காட்டுத்தனமான கேரக்டர் .கொஞ்சம் ஏமாந்தா சிரிக்க வெச்சிடும்.ஆனா பிரமிக்க வெச்சிட்டாரே. படத்துலே காக்கா வலிப்பு நோய் ராமனுக்கு இருக்கும் . அந்த காக்கா வலிப்பு நோய் வந்து பாதிக்கப்படறமாதிரி படத்துலே நாலு காட்சி இருக்கும். முதல் காட்சி  குளத்துக்கு பக்கத்துலே வலிப்பு வரும்.அப்போ அங்கே வர்ற கே ஆர் விஜயா தன்னோட சாவிக் கொத்தை கொடுத்து காப்பாத்துவார். அதுதான் கே.ஆர்.வி உடனான முதல் சந்திப்பு. (குளத்தின் படிகளில் ஏறும்போது கே.ஆர்.வி தலையை தூக்கும் போது, ​​அங்கே மல்லிகைப் பூக்கள் விழும், அதை சிவாஜி எடுத்து ஒரு பக்தியுடன் வைச்சுக்குவார்).  இரண்டாவது முறை, நம்பியார் அவரை சவுக்கால அடிச்சு பங்களாவை விட்டு வெளியே தூக்கி எறியுப்போ அவருக்குப் வலிப்பு வரும், நம்பியார் தன்னோட  வேலைக்காரனை சிவாஜிக்கு உதவ அனுமதிக்க மாட்டார். பங்களாவின...

சிவாஜி அம்சம் என்பது இதுதான்...

படம்
சிவாஜி அம்சம் என்பது இதுதான்.. அந்த மலை பாரு எவ்வளவு பெரிசா இருக்கு.அந்த மலை மாதிரி எதுவும் இல்லையே.அந்த மலை உருவாகறதுக்கு முன்னாலேயே  மலைகள் இருந்துச்சே .ஆனா அந்த மலை மாதிரி இல்லையே . அந்த மலை மாதிரி எத்தைனையோ மலைகளும் உருவாகியிருகே.ஆனாலும் அந்த மலை மாதிரி உயர்வா இல்லையே .ஏன்? அது ..மலைன்னா என்னான்னா தெரிஞ்சுக்தான் முதல்ல உருவான மலைகள்.ஆனா ஒரு மலை எப்படி இருக்கணும்னு தெரிஞ்சுக்க உருவான மலைதான் ஆரம்பத்துல சொன்ன அந்த உயர்ந்த மலை. அந்த மலை மாதிரித்தான் கலையுலகத்துலே சிவாஜிகணேசனும். சிவாஜியைப் போலே எத்தனையோ கலைஞர்கள் இருக்கலாம்.ஒரு கலைஞன் எப்படி இருக்கணும்னு  உருவானவர்தான் சிவாஜிகணேசன். குளம் ,குட்டை ,கடல்னு பல விதத்தில தண்ணி இருக்கு.கடல்  பெரிசா இருந்தாலும் உப்பு கரிக்கும் .குடிக்க முடியாது .குளம் குட்டையெல்லாம் தேங்கி நிக்கற தண்ணி. சுத்தமிருக்காது. ஆறு அப்படியில்லே . ஓடிக்கிட்டே இருக்கும்.போற இடமெல்லாம் விவசாயம் நல்லா நடக்கும்.ஓடிக்கிட்டே இருக்கறதாலே கிருமிகள் சேராது.குடிக்கவும் உபயோகமாகும்.அதை போலத்தான் நல்ல கலைஞனோட உபயோகமும் இந்த சமூகத்துக்கு பயன்படறதா இருக்கணும்.சிவாஜி ...

சிவாஜி T.S.பாலைய்யா தூள் கிளப்பிய படங்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி தன்னோட ரோல் மாடலா ரெண்டு நடிகர்களை சொல்வார். ஒருத்தர் எம்ஆர் ராதா இன்னொருத்தர் டி எஸ் பாலையா. இவங்க ரெண்டு பேருமே வித்தியாசமான நடிப்புக்கு சொந்தக்காரங்க.பாலய்யா கோட்சூட் போட்டாருன்னா ஹாலிவுட் ஆக்டர் மாதிரி மாறுவார்.வேட்டி சட்டை போட்டா அது வேற மாதிரியா பட்டைய கிளப்புவார்..கூடவே பாலய்யாவோட குரல் அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் அப்படின்னு சொல்லலாம் . இவரோட மேனரிசம் வேற எந்த ஒரு நடிகர்கிட்டயும் பாக்க முடியாது. சிவாஜிக்கு முன்னாலே இருந்தே சினிமாவில் ஆதிக்கம் செலுத்திட்டு  வந்தவர் பாலையா .அவரோட தனித்துவமே  அவரோட  வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி.  திருவிளையாடல் படத்த எடுத்துக்கலாம்.  கதைப்படி சோமநாத பாகவதர் சங்கீத மேதை.  சாஸ்திரிய சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடலை பாலையா பாடற மாதிரி காட்சி. சிவாஜிக்கு சம்பந்தமே இல்லை அப்படின்னாலும் சில நேரம் சூட்டிங் ஸ்பாட்லே இருப்பார்னு எல்லாருக்கும் தெரியும். இந்த பாட்டு சூட்டிங் நேரத்திலயும்  சிவாஜி இருந்தார். பாடல் காட்சி யை ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க. இடைவெளியில பாலையாவுடன் பேசிக்கொண்டிருந்தார் ச...

சிவாஜியுடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த நடிகைகள்

படம்
சிவாஜியுடன் 60  கதாநாயகிகளுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளார்கள்.இவர்களில் கே ஆர் விஜயா பத்மினி சிவாஜிக்கு ஜோடியாக 30 படங்களுக்கு மேலும் நடித்துள்ளார்கள்.K.R.விஜயா சிவாஜியின் முதல் 100 படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க வில்லை.ஆனால் பத்மினி சிவாஜியின் இரண்டாவது படத்தில் இருந்தே ஜோடியாக நடித்துள்ளார். நடிகர்திலகத்தோடு ஜோடியாக நேரடியாக நடித்த கதாநாயகிகள்:  ஜெயலலிதா-18, சரோஜாதேவி-17,சுஜாதா-16 ,தேவிகா-12, ஸ்ரீப்ரியா 10, சௌகார்ஜானகி 11, சாவித்திரி-11, வாணிஸ்ரீ-9,  மஞ்சுளா-9, பண்டரி பாய்-8, பானுமதி-7, லக்ஷ்மி-7,ஜமுனா-7 ,எம்.என்.ராஜம்-6, உஷா நந்தினி-5, வடிவுக்கரசி 2, -ஸ்ரீவித்யா-2 வைஜயந்தி மாலா-3, ஜி.வரலக்ஷ்மி-3 ,பாரதி-2,விஜயகுமாரி-2, அம்பிகா-2,ராதா-2, ஸ்ரீதேவி-2,ஸ்ரீரஞ்சனி-2, கிருஷ்ணகுமாரி-2,வசந்தா-2, சாரதா-2,அஞ்சலிதேவி-2 ,மைனாவதி-2,லலிதா-2, ராஜசுலோச்சனா-2,,- படங்களிலும் நடித்துள்ளார்கள். சிவாஜிக்கு கதாநாயகியாக ஒரே ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த நடிகைகள் யார் யாரென்று பார்க்கலாம்.  மாலினி-1, சிவாஜி சந்திரபாபு நடித்து  1958 ல் வெளிவந்த  சபாஷ் மீனா திரைப்படத...

மியுசிக் பண்ண 21 நாளான சிவாஜி பாட்டு

படம்
M.S.விஸ்வநாதன் கண்ணதாசன் கிட்ட சொல்றாரு.இந்த படத்துலே வர்ற கதாநாயகன் சில பிரச்சினைகளாலே சிக்கித்  தவிக்கிறான்.அவன் வாழ்க்கையே வெறுத்து போயி புலம்பற மாதிரி சீனு.இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு பாட்டை போடணும்.சாதாரணமா சிச்சுவேஷன கேட்டதுமே வரிகளை கொட்டித் தள்ளற கண்ணதாசன் டிரை பண்றாரு.டிரை பண்றாரு.முதல் வரியா எதை எழுதலாம்னு .எத்தனை தடவை யோசிச்சாலும் முதல் வரியே வசமா சிக்க மாட்டேங்குது.அந்த நாளும் ஓடிடிச்சு.மறு நாளும் இப்படியே.இப்படியே ஓடிருச்சு 21 நாளு.எந்த படத்துக்காக இந்த பாடுன்னா  சிவாஜியோட சொந்த படம் புதிய பறவைக்காக.பாட்டு என்னாச்சுன்னு கேக்க வர்றாரு சிவாஜி.விஸ்வநாதன் நடந்ததை சொல்றாரு. இப்ப மூணு பேரும் உக்காந்து டிஸ்கஸ் பண்றாங்க. சிவாஜி மறுபடியும் அந்த சீனை சொல்றாரு.கதாநாயகன் நிம்மதி இல்லாமே தவிக்கிறான்.அப்ப அவனுக்கு நிம்மதிதான் தேவை.அதனாலே எங்கே நிம்மதி கிடைக்கும்னு புலம்பறான்னு சொன்னதுமே கண்ணதாசனுக்கு பொறி தட்டிருச்சு.வார்த்தைகள் டக்குன்னு வந்து விழுது.எங்கேநிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்னு சொல்றாரு.சிவாஜிக்கும் விஸ்வநாதனுக்கும் அது ரொம்ப பிடிச்சுருச்சு. கண்ணதாசா...

சிவாஜி படங்களுக்கு செய்யப்பட்ட புதுமையான விளம்பரங்கள்

படம்
சிவாஜி படங்களுக்கு புதுமையான வித்தியாசமாக செய்யப்பட்ட விளம்பரங்கள். 1957 ஆம் ஆண்டு வணங்காமுடி திரைப்பட வெளியீட்டின் போது புதுமையான அதற்கு முன்பு யாரும் செய்யாத வகையில் விளம்பரம் செய்ய தீர்மானித்தார்கள்.அதற்காக 80 அடி கட் அவுட் ஒன்றை தயார் செய்து சென்னையில் சித்ரா திரையரங்கில் வைத்தார்கள் . இப்படி ஒரு உயரமான கட் அவுட் அதற்கு முன் வெளியான எந்த தமிழ் திரைப்படத்திற்கும் வைக்கப்படவில்லை.அந்த கட் அவுட்டை பார்ப்பதற்காகவே வெளியூரில் இருந்தெல்லாம் மக்கள் வந்து பார்த்தார்கள். கூட்டம் அதிகமாகி டிராபிக் ஜாமே ஏற்பட்டது.அதற்காக போலீஸ் பந்தோபதஸ்தும் போட்டார்கள்.  60 வருசத்துக்கு முன்னாடியே சிவாஜி படத்துக்காக சென்னையில் நடந்த பிரம்மாண்ட ப்ரோமஷன்.. பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் அதனை மக்களிடையே அதிகம் கொண்டு போய் சேர்ப்பதற்கு புது விதமான ப்ரோமோஷன்களை செய்வார்கள். அப்படி இருக்கையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக , சிவாஜி கணேசனின் படத்திற்காக படக்குழு செய்த ப்ரோமோஷன் ஒரு வியத்தகு விஷயம். பாவமன்னிப்பு. கடந்த 1961 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்...

சிவாஜி படங்களில் நாகேஷின் அலப்பறை காட்சிகள்

படம்
சிவாஜி படங்களில் நாகேஷ் செய்த அலப்பறை காட்சிகள். சவாலே சமாளி படத்துலே நாகேஷ் செஞ்ச அலப்பறை கொஞ்ச நஞ்சமா என்ன? ஒரு வகையிலே காமெடி  மாதிரி நடிச்சிருந்தாலும் கூடவே பாக்கறவங்க யோசிக்க முடியாதபடி வில்லத்தனத்தனத்தையும் சேத்தே செஞ்சிருப்பாரு நாகேஷ்.தடுக்கி விழுந்தா பஞ்சா அடிச்சு தள்ளியிருப்பாரு. பண்ணையாரா வர்ற பகவதிக்கும் சிவாஜிக்கும் இடையிலே புகுந்து கேம் ஆடுவாரே.அதைச் சொல்லணும்.பஞ்சாயத்துலே தேர்தல் ஒப்பந்தம் எழுதுன பின்னாலே ,சிவாஜி கேப்பாரு.நான் தோத்தா இந்த ஊரை விட்டே போயிடனும்னு சொன்னீங்க ,பண்ணையாரு தோத்தா என்ன செய்யறதுன்னு.இடையிலே புகுந்து நாகேஷ் அப்படி இப்படின்னு பேச்சை வளர்த்தி,கடைசியா ஒரு திரியை கொளுத்தி போடுவாரு.பண்ணையாரு தோத்தாருன்னா அவரு பொண்ண கட்டி குடுங்கன்னு கேப்ப போலிருக்கேன்னு ,அடிச்சு தூக்கிடுவார்.அந்த ஒரு வரி வசனத்தை வச்சுத்தான் சவாலே சமாளி படமே.அந்த டைமிங், ரைமிங்னு நாகேஷ் வசனங்களை வகுத்துல புகுத்தி தன்னோட பாணியிலே விளையாடியிருப்பாரு. பண்ணையாரு தோத்த செய்திய கேட்டதும் மனுஷன் அந்தரத்துலே துள்ளி குதிச்சு  அட்டகாசம் பண்ணிடுவார்.மாணிக்கத்தை ( சிவாஜியை)ஜெயிக்க வச்சதே நாந...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற