இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

உங்களை விட்டால் வேறு யார் ?

படம்
உங்களை விட்டால் வேறு யார்?  உதட்டுப் புன்முறுவலில் மறைத்து வைத்தீர்கள். அது காதலா? அன்பா?  மெல்லிய புள்ளியில் ஒரு  ராஜ பேரிகை காதல் சொன்னீர்கள்! அழகாபுரியின் ஆனந்தாக! இதைச் செய்ய  எங்களை மயக்க  உங்களை விட்டால் வேறு யார்? பாசப் பார்வையில் சோறிட்டு  அன்பு காட்டியதற்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த  பாபுவின் தியாகம் சொல்ல, உங்களை விட்டால் வேறு யார்? வாழ்ந்து மரணித்த காதலை  மனதில் ஓரமாய் புதைத்து  சோகத்தை மனதிலும்,  கம்பீரத்தை கண்களிலும்  காட்டி உயர்ந்த மனிதராய் வாழ்ந்த  சரித்திரத்தை சொல்ல  உங்களை விட்டால் வேறு யார்? உதட்டில் புன்னகையையும் முகத்தில் சாந்தத்தையும்  கொண்ட இளைஞன்  ரஹீமாக பாத்திரமேற்றீர்கள். மதத்தை தாண்டியது மனிதம் என்பதை அழகாக சொன்னீர்கள். எம்மதமும் இப்படியோர் இளைஞன்  நமக்கும் கிடைப்பானா என ஏங்க வைத்தீர்கள். ரசிக்க வைத்த ரஹீமாக செய்ய உங்களை விட்டால் வேறு யார்? வான் பொழியும் பூமி தேன் சொறியும் காடு மான் துள்ளும் பூமி  சோழமண்டலம். நீதியின் பரிபாலனம்  நீர்த்து போகாத தேசம். அரசே அநீதிக்கு தலை வணங...

சிம்மக் குரலோனின் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்

படம்
சிலிர்க்க வைக்கும் சிம்மக்குரலோனின் சில பாடல்கள் .. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? என்று பெண் பெருமையை பேசுவதாகத்தான் பாடல் அமைந்திருக்கும்.அந்த பாடலில் அவர் வேட்டி கட்டி நடந்து வருவதை திரையில் பார்த்தவர்களுக்கு பாவாடை தாவணி மறைந்து வேட்டி கட்டிய நடிகர்திலகத்தின்  அழகு தான் கண் முன் நிற்கும்.எதை மையப்படுத்தி காட்சிகளை நகர்த்திக் கொண்டு போனாலும் அதை தன்னை நோக்கி ஈர்த்து விடும் ஆற்றல் பெற்றவர் நடிகர்திலகம்.அது இயல்பாகவே அமையப் பெறுவது தான் அவரின் ஒரு சிறப்பு என்றால் மிகையில்லை. இது பற்றி சில விஷயங்களை நாம் நடிகர்கள், நடிகைகள் பேட்டிகள், கட்டுரைகள் மூலம்  கேள்விப்பட்டிருக்கலாம். நடிகர்திலகம் ஊக்குவித்து தாங்கள்  நடித்தோம், எங்களின் சிறப்பளிப்புக்கு அதுவும் முக்கிய காரணம் என்று பலர் சொல்லி கேட்டிருக்கலாம். ஆனால் இது போன்ற விஷயங்களையே அவருக்கு எதிராக திருப்பும் கையாலாகதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இந்தக்  காட்சியில் அவரை மிஞ்சி விட்டார் என்றெல்லாம் சில அரைவேக்காட்டு  விவாதங்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு   தெரியும்  தாங்கள் வாலியின் முன் நிற்கிற...

பாட்டு புத்தகங்களும் பழைய வரலாறும்

படம்
Thanks to Mr Senthilvel Sivaraj பாட்டு புத்தகங்களும் ,பழைய வரலாறும்... பத்து பைசா கொடுத்து பாட்டு புத்தகத்தை வாங்கும் போதே அந்த பாடல்கள் இனி எனக்கே சொந்தம் என்பது போன்ற பரவசம் கிடைக்கும்.ஆளில்லா இடம் தேடி பாட்டு புத்தகத்தை  விரித்து ஒவ்வொரு பாடலாய் வாய்விட்டு உரக்க பாடி சந்தோசம் கொள்ளும் மனம்.இதெல்லாம் 1970 களில்.நடிகர்திலகத்தின் பாட்டு புத்தகங்களை தவிர வேறெந்த பாட்டுப் புத்தகங்களின் மீதும்  என் விரல் ஸ்பரிசங்கள் பட்டதேயில்லை.ஒன்று முடித்தவுடன் அடுத்த புத்தகத்தை வாங்குவதும் படிப்பதும் தொடரும்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில்தான். நண்பர் குழாமில் அடிக்கடி போட்டிகள் கூட நடக்கும்.நான் பாடுவது போலே முழுவதுமாய் உன்னால் பிசகாமல் பாட முடியுமா? என்று மார்தட்டி சவால் விடுவார்கள் எல்லோரும்.பெரிய பாகவதர்கள் போலும் நினைத்துக் கொள்வார்கள் தங்களை. பின்னாட்களில் இதையெல்லாம் நினைத்து பார்க்கையில் எவனுக்குமே பாடவே வரவில்லையே! அப்படி இருந்தும் எப்படி சவடால் விட்டு பாட்டுப் பாடினோம்? அதுவே சிறப்பென எந்த நினைப்பில் பாடித் திரிந்தோம்! இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்து ,சேர்ந்த பல புத்தகங்களை ஊசிய...

எப்படி எல்லாம் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்பவர்களுக்கு ...

படம்
எப்படி எல்லாம் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்பவர்களுக்கு. எங்களுக்கு சிவாஜி பிடித்திருக்கிறார். நல்ல விஷயங்களை எப்படி சொல்கிறார். அம்மாவை பூஜிக்கிறார். அண்ணனிடம் எப்படி பழக வேண்டும் தம்பியிடம் எப்படி பாசம் காட்ட வேண்டும் என்று சொல்லித் தருகிறார் ,படக் காட்சிகளில். அந்த நல்ல விஷயங்கள் மனதில் ஆழமாக இறங்குகின்றன. அடடே  !  இது நன்றாக இருக்கிறதே என்று வியப்பதோடு நின்று விடுவதில்லை மனம்.அவர் சொன்னதை நாமும் நம் குடும்பத்தாரிடம் செய்து காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அம்மாவை வணங்க தோன்றுகிறது .அண்ணனை நேசிக்க தோன்றுகிறது. குடும்பத்தை அரவணைத்து செல்ல தூண்டுகிறது. அட இது நல்ல விஷயங்கள் தானே! அவருடைய நடிப்பும் படக் காட்சிகளும் இதைத்தானே சொல்கின்றன. அதை தானே நம்மை செய்ய தூண்டுகின்றன. நல்ல விஷயம் தானே!இந்த நல்ல விஷயங்களை சொல்லும்போது தான் இதை மனதில் வைக்காமல் எடக்காக ஒரு கேள்வி வருகின்றது. ஏன் சிவாஜி குடிப்பது போல் நடிக்கிறாரே ,அப்படி செய்கிறாரே இப்படி செய்கிறார் என்று .. குடிப்பதாக நடித்தாலும் சரி, வேறு பல நடிப்பாக இருந்தாலும் அப்படி செய்வதால் ஏற்படும் வினைகளையும் அவர் ...

சிவாஜி தவிர வேறு எதையும் விரும்பாத கூட்டம்

படம்
1956ல் புயல் நிவாரணத்திற்காக பலர் நிதி வசூல் செய்து கொடுத்தனர்.  அதிக  வசூல் செய்தவர் சிவாஜிதான். அதிகமாக வசூலித்துக் கொடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சிவாஜி  அழைக்கப்படவில்லை. எம்.ஜி.ஆரை மேடையில் கௌரவித்தனர். அண்ணாதுரை அவர்கள் சிவாஜியை பற்றி கேட்கும் போது " கணேசனால் வர முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்கள். வஞ்சகர்களுக்கு சிவாஜியின் பதில்.... பீம்சிங் வருகிறார்.சிவாஜியின் மன கிலேசம் தீர திருப்பதி அழைத்தார். சிவாஜி போனார். திருப்பதி சாமியை  பார்த்தார். சாந்தி அடைந்தார். திருப்பதியை பார்த்தால் பசி தீரும். கணேசா! உனக்கொரு நல்ல தலைவன் தேவை! இங்கேயும் ஒரு காந்தி இருக்கின்றார்.அதோ கர்மவீரர் காமராஜர். நீ ஒரு உத்தம தொண்டன் காமராஜ் ஒரு உத்தம தலைவன் காமராஜர் ஏற்றார் உன் சேவையை. கலைச்சேவை ஒரு புறம் காங்கிரஸ் வளர்ப்பு ஒரு புறம் காங்கிரஸிலும் புல்லுருவிகள். அங்கேயும் தடைகள் தானே உன் பணிக்கு.. பெருந்தலைவரின் பின்னால் சிவாஜியின் பயணம்.எங்கேயெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அங்கேயெல்லாம் கர்மவீரருக்காக கட்சியை வளர்த்தாய்.கடமையை செய்தாய் ..பலனுக்காக அல்ல.. 1975 அக்டோபர் 2. அணைந்த...

- பட்டிக்காடா பட்டணமா

படம்
பட்டிக்காடா பட்டணமா? அவன் வேட்டி கட்டிய சிங்கம்  குணத்திலோ தங்கம். பிறந்தது ஒரு சிற்றூரு சோழவந்தான் என்பதே அதன் பேரு அந்த மண்  அவனுக்கு கண். ஏரை மதிப்பவன் ஊரை காப்பவன் ஊருசனம் அவன் நடந்தால் நிற்கும் பேசினால் கை கட்டும். மூக்கையாத் தேவன் அவன் பேரு அவன் சொல்லை மதிக்கும் ஊரு. தேவனுக்கு ஒரு மாமன் உண்டு  மாமன் பேச்சு எப்போதும் கல்கண்டு அவருக்கு ஓர் மகள் உண்டு. மாமன் மகள் மெத்தப்படித்தவள்  மேலை நாகரீகத்தில் திளைத்தவள் ஆனால் தமிழ்க்கலாச்சாரத்தில் இளைத்தவள். கல்பனா என்பது அவள் நாமம் அம்மாவே அவளுக்கு வேதம். மகளின் மணம்... மூக்கையாவே வேண்டும் இதுவே மாமனின் குணம். அத்தையோஆணவக்காரி அந்தஸ்தில் மாப்பிள்ளை  பிடிக்கிறாள்முறைமாறி முறைமாமன் தானிருக்க வேறொருவன் தாலியெடுக்க.. மாமன் மூலம்வருகிறது சேதி மூக்கையாவே பார்த்துக்கொள்வான் மீதி முறைப்பெண் கல்பனாவிற்கு அவனே நாதி ஏறி நிற்கிறான் மூகூர்த்த மேடை எதிர்த்து நிற்கிறது மாமியாரின் படை கேட்கிறான் நியாயம் அத்தைக்கோ அது அநியாயம். செய்கின்றனர் வாதம் இனியும் ஆகாது தாமதம் என மூக்கையா யோசிக்கிறான்இக்கணம்  முடிவெடுக்கிறான் அக்கணம். தூக்க...

பள்ளி படிப்புடன் சிவாஜியின் நடிப்பும்

படம்
பள்ளி படிப்புடன்  சிவாஜியின் நடிப்பும்... மலை போல குவிஞ்சிருக்கய்யா வீட்டுக்குள்ளே போட்டோ மலைபோல குவிஞ்சிருந்த போட்டோவெல்லாம் அண்ணனுக்குத்தான் சொந்தம் மனசெல்லாம் நிறஞ்ச போட்டோவா எனக்கு புடிச்ச போட்டோ  வைரமோதிரம் போட்டிருந்த சிவாஜி போட்டோ அந்த அண்ணன் அப்பால போகயிலே நான் எடுத்து ஒளிச்சு வச்சேன் அஞ்சாங்கிளாஸ் தமிழ் புக்குலே ஆசை ஆசையாய் எடுத்து வச்ச போட்டோவ அஞ்சாங்கிளாசெல்லாம் புடுங்கி புடுங்கி  பாத்தாங்க! அப்புறமா மூணு நாளும்  பத்திரமாதான்  இருந்துச்சு  அடுத்த நாளு தமிழ் புக்கே தொலஞ்சு போச்சு! பாவிப்பய யாருன்னு தெரியாம இன்ன வரைக்கும் திட்டிட்டே இருக்கேன். ஆறாங்கிளாசு வேற ஸ்கூலு  அறிவு கொஞ்சம் ஏறிடுச்சு போல  அப்பிடின்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். இப்ப நான் எடுத்துகிட்டு போனது நெறைய படம் போட்ட சிவாஜி புத்தகம் ஒவ்வொருத்தனுக்கும் நானே புரட்டி புரட்டி காமிச்சேன் பாத்தவங்க வாயெல்லாம் பல்லு ஒருத்தன் கண்ணுல மட்டும் முள்ளு! எவன்டா எடுப்பான் என் புக்க!  கண் கொத்தி பாம்பா நான் இருக்க , மறுநாளே காணாமப் போச்சே ஆச வச்ச புக்க!  கண்ணுல முள்ளுன்னு சொன்னே...

லட்சுமி கல்யாணம் யாரடா மனிதன் இங்கே?

படம்
யாரடா மனிதன் இங்கே பாடல். (லட்சுமி கல்யாணம்) நல்ல  குணங்களுக்கு விலங்குகளின் குணத்தை  உவமை கூறி பாராட்டுவது உலக இயல்பு. மான் விழி சிங்ககர்ஜனை புலிப்பாய்ச்சல் குதிரை ஓட்டம். இப்படி சில.மிருகங்களை உவமையாக்கி பாராட்டும் அதே சமயம் ,தீய குணம் கொண்டோரின் குணங்களுக்கும் அதே மிருகங்களின் குணத்தையே உவமை யாக பயன்படுத்துகின்றான்.  இது ஒரு முரண் ?என்றுசிலர் கூறுவதும் உண்டு. கவியரசரும் தன் பங்கிற்கு  லட்சுமி கல்யாணம் படத்திற்காக மிருகங்களை உவமையாக்கி  இந்தப்பாடலை கொடுத்துள்ளார்.அந்த விவாதங்கள் நமக்கெதற்கு. நமக்கு நம் நடிகர்திலகத்தின் நடிப்பு ஒன்று போதுமே. கதைமாந்தர்களின் வஞ்சக எண்ணங்களால் பாதிக்கப்படும் கதையின் நாயகன் அம்மனிதர்களின் குணங்கள் கண்டு கொந்தளித்து பாடுவதாக அமைந்த பாடல் இது. அதை நம் தலைவர் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.நல்ல மனிதர்கள்யாராவது  நடந்து போகிறார்களா என்று தீப்பந்தத்தைதூக்கி ஒவ்வொரு மனித முகமாகப் பார்த்து  சலித்துப்போய் தீப்பந்தத்தை தூக்கி எறியும் அந்த முதல் ஷாட்டிலேயே அந்த விரக்தியை எப்படி அருமையாகக் காட்டுவார் பாருங்கள்.முகத்தில் வந்து...

தஞ்சை மைந்தனும் ராஜராஜனும்

படம்
ஆண்டு 950 கால கட்டம். குந்தவை நாச்சியார்: தம்பி ராஜராஜா,உன் எண்ணப்படிதான் மகாகோவில் வளர்ந்து கொண்டிருக்கிறதே!உன் முகத்தில் சற்று மாற்றம் தெரிகிறதே.என்ன விஷயம்? ராஜராஜன்: தமக்கையே!ராஜராஜன் மகா கோயிலை கட்டிக்கொண்டிருக்கின்றான் என்று ஊரே சொன்னாலும் அதைச் செய்தவன் என்னை ஆட்கொண்ட அந்த சிவனல்லவா.உலகையே ஆளும் சக்கரவர்த்தி என்றாலும் வாழ்நாள் சக்திகள் எல்லா மனிதர்களைப் போலத்தானே! குந்தவை நாச்சியார்: அப்படியல்ல ராஜராஜனே.செயற்கரிய காரியங்களை எல்லோராலும் செய்துவிடமுடியாது.உன் கடின உழைப்பும் விடாமுயற்சியும் திறமையுமே காரணம்.உன் போன்று சரித்திரத்தில் பெயர் சொல்ல ஒருவன் பிறப்பது அரிது. ராஜராஜன் : !!! ***** 1973 மார்ச் 31 தமிழ் திரையரங்குகளில் ஒலித்த குரல்களும்,அந்த காலகட்டத்தில் வந்த ஏடுகளும்... தலைவா!உண்மையான ராஜராஜனே உன்னைப்போல இருந்திருக்கமாட்டான். ராஜராஜ சோழனை யாரும்பார்த்திருக்க முடியாது.அவன் எப்படி இருந்திருப்பான் என்று கண்முன் நிறுத்தி விட்டாரே நடிகர்திலகம். ராஜராஜன் கூட இப்படி கம்பீரமாய் இருந்திருப்பானா? ஒருவேளை அந்த ராஜராஜன்தான் இப்போது பிறந்து வந்துள்ளானோ? இப்படி ஒரு தேஜஸ் அந்த மன்னனிடம் கூ...

வெட்கப்படவோ செல்லக்கிளி என வட்டமிடவோ... ரயிலில் ஒரு பாட்டு

படம்
பச்சைப்பசேல் என்று எங்கும் மரம் செடிகள் நிறைந்த பகுதி.கண்களுக்கு ரம்மியமான காட்சி. கூட்ஸ் ரயில் வண்டி ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அதிக பெட்டிகளை கொண்டதாய் நீளமாய் அந்த ரயில் வண்டி வளைந்து செல்லும் அழகு எல்லோரையும் கவரும்.மேலே இந்தப் பிரபஞ்சத்தை நினைக்க வைக்கும் நீல நிற ஆகாயம்.ரயில் வண்டி செல்லும் இருபுறமும் பசுமை நிறைந்த காட்டுப்பகுதி.இப்போது கூரையில்லாத அந்த திறந்த நிலைப்பெட்டிகளில் பயணம் செய்ய விரும்பாத மனமும் உண்டோ இப்பூவுலகில்?ஒரு ஆணும் பெண்ணும்ஆடிக்கொண்டு அந்த இன்பத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.அது மேலும் உற்சாகத்தை கூட்டுகிறதே. இப்போது அவர்கள் பாடத்தொடங்குவார்கள் போல் தெரிகிறது.அவர்கள் பாடும் அந்த பாட்டை சற்று கேட்போமா? இப்போது அந்த மங்கைஹம்மிங் செய்கிறாள். ஹாஹாஹாஹாஆகாகாகாகேகேகே குரலிலே குயில் போலும்.இவ்வளவு நேரம் அதிசயித்த அந்த இயற்கையையே மறக்கசெய்து விட்டதே.சில நேரங்களில் இயற்கையையும் மீறி ரசிக்க வைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கும் இருப்பதும் இயற்கைதானோ? இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை. மேலே ஆகாயம்,இடையி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற