இடுகைகள்

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ஜெனரல் சக்கரவர்த்தி

படம்
ஹேய் மக்களே! எப்படி இருக்கீங்க? ​இன்னைக்கு நாம பார்க்கப் போறது... நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாரோட ஒன் ஆஃப் தி மோஸ்ட் எமோஷனல் அண்ட் கௌரவமான திரைப்படம்... 'ஜெனரல் சக்கரவர்த்தி' (1978)! இந்தப் படத்துக்கு  ஜெனரல் சக்கரவர்த்தி அப்படின்னு ஏன் தலைப்பு வச்சாங்கன்னு  தெரியுமா நண்பர்களே " "ஜெனரல்" ங்கறது இராணுவத்திலே பெரிய பதவியைக் குறிக்கும். கதைப்படி ஹீரோ ஒரு ராணுவஅதிகாரி . "சக்கரவர்த்தி"ங்கறது சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்பவரை  குறிக்கும்.  சிவாஜி நடிப்புலே சக்கரவர்த்தி.அதனாலே  கதைக்கு  பொருந்தற மாதிரியும் ,நடிகர்திலகத்துக்கும் கௌரவம் செய்யற மாதிரியும் இருக்கணும் அப்படிங்கறதுக்காக  இத்திரைப்படத்தோட  தலைப்பை  ஜெனரல் சக்கரவர்த்தின்னு வெச்சாங்க.  ஒரு வலிமையான மற்றும் சக்திவாஞ்ச கதாபாத்திரத்தைக் குறிக்கவே இப்படி தலைப்பு.  தலைப்பு: கௌரவம் VS குடும்ப ரகசியம்! ​நம்ம சிவாஜி சாரோட ஒரு சில படங்கள்ல, அவருடைய கம்பீரம் வேற லெவல்ல இருக்கும். அந்த லிஸ்ட்ல கண்டிப்பா இந்தப் படத்துக்கு ஒரு இடம் இருக்கு! ஜெனரல் சக்கரவர்த்தியா அவர் போட்ட  கெட்டப்பும், ...

மனோகரா

படம்
1954 ஆம் வருசம் சிவாஜிகணேசன் நடிச்சு வெளிவந்த படம் மனோகரா. சிவாஜி நடிக்க வந்து ரெண்டாவது வருசம் வெளியான படம் இது. இந்த பட வசனம் எவ்வளவு பிரபலமாச்சுதுன்னு எல்லாருக்கும் தெரியும். சிவாஜி சினிமாலே நடிச்ச முதல் சரித்திர கற்பனை படம் இது. தமிழ்லே வசனம் பேசி நடிச்சது ஒரு சிறப்புன்னா அதை விட ஒரு ஆச்சர்ய சாதனையா இன்னொரு விஷயமும் இருக்கு. இது அதிகமா யாருக்கும் தெரியாத விஷயம். மனோகரா படத்தோட டைரக்டர் L.V.பிரசாத்.இந்த படத்தை இவர் தமிழ் தெலுங்கு இந்தின்னு மூணு மொழிலே படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுனார்.அதனாலே இந்த படத்தை 1954 லிலேயே வெளியான பான் இந்தியா படம்னு சொல்லலாம். மனோகரா படத்துலே தர்பார் வசன காட்சி தமிழ் சினிமாலே ஒரு புயல் போலே அமைஞ்ச காட்சி.சிவாஜியை சங்கிலியாலே கட்டி இழுத்து அரச சபைக்கு இழுத்து வர்ற காட்சி இருக்கும்.  படத்துலே ரொம்ப முக்கியமான காட்சி இது. இந்த காட்சிக்கான படப்பிடிப்பை ஷூட்டிங் பண்ண பிரசாத்தும் யூனிட்டும் தயாரா இருக்காங்க. இந்த காட்சிலே சிவாஜி மட்டும் இல்லாமே மன்னர் புருசோத்தமரா  நடிச்ச சதாசிவராவ் , TR.ராஜகுமாரி ,அமைச்சர் சத்யசீலன் கேரக்டர்  , ஜாவர்சீதாராமன் ,SSR க...

sivajiganesan and AS.பிரகாசம்

படம்
1978 ஆம் வருசம் .. அந்தமான் காதலி படத்தை எடுக்க யூனிட் எல்லாத்தையும் அழைச்சுக்கிட்டு  முக்தா சீனிவாசன் அந்தமான் தீவுக்கு போனார். நடிகர் திலகம் சிவாஜி மனைவி கமலாம்மாவை கூட கூட்டிட்டு போனார். அவங்க பிரயாணம் செஞ்ச கப்பலோட பேரு ஹர்ஷவர்த்தனா. ஒரு பெரிய நட்சத்திர ஓட்டல் கடலில் நீந்தி போற மாதிரி அந்தக் கப்பலோட அமைப்பு இருந்துச்சி. அந்தப் படத்தோட வசனகர்த்தா பேராசிரியர் ஏஎஸ் பிரகாசம். கப்பல் போயிட்டு இருக்கு. சிவாஜி மேல் தளத்துலே இருந்து கடலை ரசிச்சு பார்த்துட்டு இருக்கிறார். சிவாஜி கூடவே பிரகாசமும் இருக்கிறார். அப்ப சிவாஜி சொன்னார். 'அந்தமானுக்கு தியாகிகள் கைதிகளாக போனாங்க. இந்த திரைப்படக் குழு காதலிக்கப் போகுது '. அந்தமானுக்கு போன ரொம்ப தியாகிகள் நாடு திரும்பாமலே அங்கேயே இறந்து போன பல உருக்கமான நினைவுகளை சிவாஜி அவர் கிட்ட அப்போ பகிர்ந்துகிட்டார் . அந்தமான் காதலி படத்துக்கு சூட்டிங்குக்காக சிவாஜி அந்தமான் வர்றார் அப்படிங்கிற செய்தி அந்தமான் தமிழர்கள் கிட்ட பரவியிருந்துச்சு.அந்தமான் துறைமுகம் போர்ட் பிளேயர் போய் சேந்தது கப்பல். அந்தமான் தீவுகள்லே இருந்த ஏராளமான தமிழ்மக்கள் திரண்டு வந்து...

சிவாஜியின் நடைகள்

படம்
மண்ணைத் தொட்டு வணங்கிச் செல்லும் ராஜநடை! ​சினிமாவில் ஒரு நடிகர், ஒரு கதாபாத்திரம் என்றால், அதில் உணர்வு இருக்கும்; வசனம் இருக்கும்; நடிப்பு இருக்கும். ஆனால், தான் நடந்து வரும் நடையிலேயே அத்தனை உணர்வுகளையும், அத்தனை அர்த்தங்களையும் பொதிந்து வைத்தவர் என்றால், அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது! ​ வேறெந்த நடிகரின் நடையையும் இத்தனை உன்னிப்பாக, இத்தனை வியப்புடன் நாம் பார்த்திருக்க மாட்டோம். மற்றவர்கள் நடிப்பை மட்டும் காட்டினார்கள்; ஆனால் சிவாஜி, நடிப்பைத் தாண்டி, வெறும் தன் கால்களின் அசைவாலேயே ரசிகர்களின் இதயங்களை அதிரச் செய்தவர். ​அத்தனை நடைகளும் ஒருவருக்கே சொந்தம்! ​சிவாஜியின் நடையைப் பற்றிப் பேசத் தொடங்கினால், அது முடிவே இல்லாத ஒரு பயணமாக நீளும். ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு தனி நடையை அவர் கையாண்ட விதம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ​கந்தன் கருணையில் வீரபாகுத் தேவன் வரும் நடையை இன்றுவரை நம்மால் மறக்க முடியாது. அந்த கம்பீரமும், நடையில் அவர் காட்டும் வேகமும், "எப்படா இந்தக் காட்சி வரும்?" என்று ரசிகர்களை ஏங்க வை...

சிவாஜி கணேசன் மனோரமா

படம்
இவங்க கூட நடிக்கறப்போ ஜாக்கிரதையா இருக்கணும். இப்படி நடிகர்திலகம் சொன்னது நடிகைகள்லே ரெண்டு பேர்.ஒருத்தர் பானுமதி. இன்னொருத்தர் மனோரமா. மனோரமாவை சிவாஜி 'மனோ'ன்னு கூப்பிடுவார்.  சிவாஜி வீட்டு எதிர் வீதிலே பக்கந்தான் மனோரமா வீடும் இருந்துச்சு. சிவாஜியை மனோரமா முதன்முதலா சந்திச்சது எப்போன்னா ... 1954 ஆம் வருசம் சிவாஜி எதிர்பாராதது படத்துலே நடிச்சுட்டு இருந்தார்.மனோரமா அப்போ வைரம் நாடக சபா நாடகத்துலே நடிச்சுட்டு இருந்தார்.அப்போ நடந்த ஒரு  நாடகத்துக்கு தலை தாங்குனவர் சிவாஜி.இந்த நாடகம் திண்டிவனத்துலே நடந்துட்டு இருந்துச்சு. மனோரமா அந்த நாடகத்துலேயே ' டபுள் ஆக்ட்'பண்ணினார்.அந்த காலகட்டத்துலே அஞ்சலிதேவி பெரிய ஹீரோயினா இருந்தார்.அவங்களை உதாரணமா வெச்சு ,அஞ்சலிதேவி மாதிரி நடிச்சாங்கன்னு  பாராட்டுனார் சிவாஜி. மனோரமாவுக்கு ரொம்ப சந்தோசம்.மனோரமா சிவாஜியை   முதன்முதலா சந்திச்சது இந்த நேரத்துலேதான். சிவாஜியோட மனோரமா நடிச்ச முதல் படம்னா ஜீவபூமிதான்.ஆனா அந்த படம் பாதிலே நின்னு போச்சு.அந்த படத்துலே வொர்க் பண்ணியிருந்தார் A.P.நாகராஜன். அந்த நேரத்துலேயே சிவாஜி பாவை விளக்கு படத்துலய...

சிவாஜியின் இந்த ரீமேக் படங்கள்

படம்
எந்த இந்தி படங்கள் நடிகர்திலகம்  நடிக்க தமிழில் ரீமேக்செய்யப்பட்டது என்கிறஇதுவரை யாரும் பதிவிடாத விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 1.முதலில் தாகேஜ் என்ற இந்திப்படம்.இதில் நடித்தவர்கபிரிதிவி ராஜ்கபூர் ,ஜெயஸ்ரீ ,கரண் தவான் ,லலிதா பவார்.இந்த படம் 1950 ல் வெளியான படம்.தமிழில் இது பொம்மை கல்யாணம் என்ற பெயரில் நடிகர்திலகம் நடிக்க உருவாக்கப்பட்டது. படத்தின் டைட்டில் கூட இந்தி படத்தில் வருவது போலவே ,அதாவது கொலு பொம்மைகள் வரிசையாக வருவது போலேவே தமிழிலும் இடம் பெற்றது. வரதட்சணை கொடுமையை மையமாக வைத்து  உருவான இப்படத்தில் நடிகர்திலகத்துடன் ஜமுனா மைனாவதி நாகையா ரங்காராவ் சாந்தகுமாரியும் நடித்தார்கள். இது தெலுங்கிலும் உருவான திரைப்படம்.படப்பெயர் பொம்மளபெள்ளி. 2.1952 ல் வெளியான இந்தி படம் தாக். திலீப்குமார் லலிதாபவார் நிம்மி ஆகியோர் நடித்த படம் இது .தமிழில் இது புனர்ஜென்மம் என்ற பெயரில் தயாரானது.புனர்ஜென்மம் படத்தில் முதல் காட்சியிலேயே சிவாஜி குடித்து விட்டு குப்பை கூளங்களில் படுத்து கிடப்பது போல காட்சி இருக்கும் ஆனால் இந்தியில் அப்படி தொடங்காது.சிவாஜி பத்மினி காண்ணாம்பா நடித்த நடித்தார்கள...

97 bday

படம்
சிவாஜியோட நடையழகை பாத்து யாரு தான் மயங்கலே.300 படம் நடிச்சாரு. அவரோட நடை ஸ்டைலை இதுக்கு மேலே எப்படி சொல்லறது.ஒரு ஆராய்ச்சியாளர் சொன்னது இது.ரெண்டு காலுலே 300  நடையை காட்டுனவர்னு சிவாஜி நடையை சொன்னார். கோல்ப் விளையாட்டெல்லாம் சிவாஜிக்கு விளையாண்டு பழக்கமா இருக்கு. ?கோல்ப் விளையாடறவங்களே அப்படி ஒரு ஷாட் பிரசண்டேசன் கொடுப்பாங்களான்னு தெரியலே. கௌரவம் படத்துலே பாருங்க.கோல்ப் ஸ்டிக்கை தூக்கி விசிறி அடிப்பார் பாருங்க. அந்த ஷாட்டுலே அப்படி ஒரு ஸ்டைல். ஆனா படத்துலே இது இருபது செகண்ட் கூட வராத காட்சி. ஏழு  சிவாஜியை ஒரே பிரேமுலே காட்டணும் நவராத்திரி க்ளைமேக்ஸ் காட்சிலே .படம் முழுதும் நடிச்சது வேற.ஒவ்வொரு கேரக்டருக்கும் வேற வேற நடை பாடி லாங்குவேஜ்.ஆனா மொத்தப்படத்தையும் முடிச்ச பின்னாலே அந்த க்ளைமேக்ஸ் காட்சி எடுத்தாகணும்.ஒவ்வொரு கேரக்டரா டிரஸ் மேக்கப் மாத்தி மாத்தி வந்து நடிச்சாகணும்.அந்த காட்சிலே ஒவ்வொரு வேஷமும் நடந்து வர்றப்போ படத்துலே முதல்லே பண்ணுன கேரக்டருக்கு என்ன நடை காட்டியிருப்பாரோ ,என்ன பாடி லாங்குவேஜ் காட்டி செஞ்சிருப்பாரோ அதை அப்படியே மாறாமே அந்த நாலஞ்சு செகண்ட் வர்ற காட்சிக்க...

ஓம் லே இருந்து அத்திக்காய் வரை

படம்
சும்மா போகிற போக்கிலே கொடுத்த ட்யூனுக்கு வார்த்தைகளை அடிச்சு விடற வேலையெல்லாம் கண்ணதாசன் கிட்டே கிடையாது. ஒரு சாதாரண சிச்சுவேஷசனுக்கு கூட  அதிகம்  தெரியாத விஷயத்தை வார்த்தைகளா போட்டு காவிய பாட்டுகளா மாத்திருவார். இப்படி இவர் செஞ்ச பாட்டு வித்தைகள் ரொம்ப அதிகம். அந்த மாதிரி வித்தைகளை  சிவாஜி பட படங்கள்லே  இந்த பெரிய வேலைக்காரர் செஞ்ச பாட்டுகளை கொஞ்சம் பாக்கலாம். 'ஓம்' அப்படின்னு ஒரு வார்த்தை . சிவாய மந்திர வார்த்தை. இந்த வார்த்தையை வெச்சு ஒரு சாகசம் பண்ணியிருப்பார் ஒரு பாட்டுலே.அதுவும் என்ன டைப் பாட்டுலேன்னு பாத்தா ஆச்சர்யம்  தாங்காது . இது நமச்சிவாய மந்திரம். இதை படத்துலே பாடறது ஒரு முஸ்லீம் கேரக்டர்.அதுவும் எப்படி வெச்சார் பாருங்க அந்த வார்த்தையை. யாருமே யோசிக்க முடியாத படி. பாட்டு இதுதான். எல்லோரும் கொண்டாடுவோம்னு பாவ மன்னிப்பு பாட்டு. இதுலே எங்கப்பா ஓம் வருதுன்னு கேக்கத் தோணும். கொண்டாடுவோம்னு ஒரு வார்த்தை வருதில்லே.அதுலே கடைசியா அந்த ஓமைச் சேத்து முடிச்சிருப்பார்.இந்த ஒரு வரியை வெச்சு மட்டும் இத சொல்லலே..வந்ததை வரவில் வைப்போம்.வருவதை செலவில் வைப்போம்னு ...

sivajiganesan Manjula films

படம்
மஞ்சுளாதேவி என்ற இயற்பெயரை  "மஞ்சுளா" என்று திரையுலகுக்காக மாற்றி கொண்டவர் நடிகை மஞ்சுளா.  அவரது பள்ளிக் காலத்தில் ஒரு போட்டியில் மஞ்சுளாவின் ஆங்கிலப் புலமை பேச்சாற்றாலை ஒரு முறை திரைப்பட கதாசிரியர் சித்ராலயா கோபு பார்த்துவிட்டு அப்போது அவர் கதை வசனம் எழுதிய சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.. திரைப்படங்களில் சிறு பெண்ணாக சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். பிரபலமான கதாநாயகியாக ஆன  பின் ,அன்றைய பிரபல கதாநாயகர்கள் பெரும்பாலும் எல்லோருடனும் நடிக்கும் வாய்ப்பு பெற்றார் .. நடிகர் திலகம் சிவாஜியுடன் 11 படங்களில் நடித்திருக்கிறார் மஞ்சுளா. அந்த திரைப்படங்கள்: எங்கள் தங்க ராஜா என் மகன் அவன் தான் மனிதன் மன்னவன் வந்தானடி அன்பே ஆருயிரே டாக்டர் சிவா சத்தியம் உத்தமன் அவன் ஒரு சரித்திரம் நெஞ்சங்கள் .. முதல்குரல்.. இந்த படங்கள் போக நடிகர்திலகத்துடன் மேடை நாடகத்திலும் நடித்திருக்கிறார் நடிகை மஞ்சுளா.  ஸ்டைல் சக்கரவர்த்தியாக விளங்கிய நடிகர் திலகம் நடித்த எங்கள் தங்க ராஜா திரைப்படத்தில் தான் மஞ்சுளா முதல் முதலாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். ...

நவராத்திரி

படம்
நடிகர்திலகம் 1952 லே நடிக்க வந்தார்.எத்தனையோ கேரக்டர்கள் பண்ணிட்டாரு.ஆனா அவரோட மனசுக்குள்ளே தணியாத ஆசையா அவர் நெனச்ச மாதிரி ஒரு படம் பண்ண முடியலேங்கற எண்ணமும் ஓடிட்டேதான் இருந்துச்சு. ஒரு வருசம் ரெண்டு வருசம் இல்லே. 12 வருசம்  நெனச்சுட்டு இருந்தார்.அதுக்குண்டான வாய்ப்பே வரலை.சிவாஜியோட பிஸி சுழ்நிலையாலே அப்படி ஒரு கதை ரெடி பண்ணுங்கன்னு சிவாஜியும் சொல்லலே.தானா அமையும்னு காத்திருந்தார்.இப்படி எந்த மாதிரியான படத்துக்கு சிவாஜி காத்திருந்தார்னு சொல்லறதுக்கு முன்னாலே பழைய விஷயம் ஒண்ணை சொல்லணும். சிவாஜி சினிமாக்கு வர்றதுக்கு முன்னாலயே நாடகங்கள்லே நடிச்சுட்டு இருந்த காலங்கள்லே அவர் பாத்த நாடகம் டம்பாச்சாரி. இந்த நாடகத்துலே சாமி அய்யர் என்ற நடிகர் ஒன்பதுக்கும் அதிகமான வேஷங்கள்லே நடிச்சிருந்தார்.ஒரே நாடகத்துலே இவ்வளவு வேஷமான்னு சிவாஜிக்கு ஆச்சர்யம் .அதுவும் மேடை நாடகத்துலயே.சிவாஜி ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டார் நாடகத்தை பாத்து. அது மனசுக்குள்ளே ஒரு ஆசையா நின்னுடுச்சு. அதுக்கு பின்னாலே சினிமாக்கு வந்து 100 படம் தொடப் போற நேரம். இடையிலே கட்டபொம்மன் படத்துலே எல்லாம்  நடிச்சு உலக அளவுலே சிறந்த ந...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்