இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

தமிழ் சினிமாவின் பொற்காலம்

படம்
தமிழ் சினிமாவின் பொற்காலம்... 1000 கோடி என்ன?  5000கோடி என்ன ?எத்தனையோ  கோடிகளில் எந்த சரித்திர படமானாலும் இனி எடுக்கலாம்.ஆனால் 100 வருடங்கள் ஆனாலும் ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதலில்  பேசப்படுவான். அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை  ஆன்ட்ராட்ய்டு காலத்தில் என்ன? அடுத்த நூற்றாண்டில் தேடினாலும் பாசமலர் தான்  முதலில் வரும். உனக்கேன் அக்கறை? என்று ஆயிரம் பேனா முனைகள் சமுக சாடல்களை எழுதியிருந்தாலும் ,இனி எழுதினாலும் அதைப் பேசிய குணசேகரன் கதாபாத்திரம் தான் மின்னலாய் தெரியும். ஒரு படத்தின் 90 வேடங்களாயினும், அதை ஒருவரே ஏற்று செய்தாலும், ஒன்பது வேட  நவராத்திரி நடிப்புக்கு  ஈடு செய்ய எவராலும் முடியாது. அடுத்த நூற்றாண்டு அதி நவீன கணிணியும் , தெய்வமகனை  ஆராய்ச்சி செய்தால் , அது கூட " ERROR " என்று தான் காட்டும். இப்போது பிறக்கும் ஒரு குழந்தை அதன் 100 வது வயதில் தேசபக்தி காவியங்களை சொல்ல விரும்பினால் அப்போதும் நடிகர்திலகத்தின் படங்களைத்தான் அது  சொல்ல வேண்டியது வரும். எந்த வரிசையில் படங்கள் வந்தாலும் ஓர் வரிசையில் வந்த நடிகர்திலகத்தின்  "பா " வரிசை...

சிவாஜி சொந்த முடியுடன் நடித்த படங்கள்

படம்
உடலுக்கு உச்சம் தலை. தலைக்கு உச்சம் கேசம். அழகான அடர்த்தியான கேசம் கொண்டவர் நடிகர்திலகம். இறுதிவரை உதிராத நடிப்பு கொண்ட நடிகர் திலகத்துக்கு கடைசி வரை உதிராத முடியும் கூட. பாத்திரங்களுக்கு வித்தியாசமான ஒப்பனைகள் வேண்டும் என்பதற்காக அவர் நிறைய படங்களில் விக் அணிந்து நடித்தார்.நடிகர் திலகம்  'விக் 'அணியாமல் சொந்த முடியுடன் நடித்த சில திரைப்படங்களை பார்க்கும் போது  இவ்வளவு அழகான தலைக் கேசத்தை கொண்ட நடிகர்திலகம்  இவர் இப்படியே நடித்திருக்கலாமே பல படங்களில் என்ற ஆசை பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்தது. விக் வைத்து நடிக்கும் பழக்கம் அதிகமாக 1970 களுக்குப் பின் தான் அதிகம் இருந்தது.அதற்கு முந்தைய கால கட்டங்களில் விக் வைத்து நடித்திருந்தாலும் நடிகர்திலகம் அதற்கேற்ற வித்தியாசமான கதா பாத்திரங்கள், புராண சரித்திர படங்களுக்குத் தான் வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்கு உபயோகப்படுத்தினார். நடிகர் திலகம் ' விக் ' அணியாமல் தன் சொந்த முடியுடன் நடித்த திரைப்படங்கள் : நடிகர்திலகம் தான் நடித்த முதல் படத்திலேயே தன் ஒரிஜினல் முடியுடன் தான் நடித்தார்.அது படத்திற்கும் நன்றாக பொருந்தி விட்டது. அதற்...

தாய் திரைப்பட விமர்சனம்

படம்
 தாய் கதைச்சுருக்கம்  மேஜர் சுந்தராஜன் சூதாடி +குடிகாரர்.மனைவி வரலட்சுமி.கணவனின் குடிப்பழக்கம் எந்த  மனைவிக்கு பிடிக்கும்?   குடிப்பழக்கத்தை நிறுத்த கண்டிப்புடன் சத்தியம் வாங்குகிறார். அவர் அப்போது நிறைமாத கர்ப்பிணி. மீண்டும்  சூதாட்டம் ஆடி,  பிரச்சினை ஆக,  போலீஸ் தேட, மனைவி கண்டிக்க, ஆத்திரம் மேஜருக்கு... மனைவியை அடிக்க, இறந்து விட்டதாக பயந்து, சகோதரியிடம் அடைக்கலம்  ஆகிறார்  மேஜர். சிங்கப்பூரில் ... இறக்காத வரட்சுமி  இட்லி கடை நடத்தி  மகனையும், மகளையும் வளர்த்து ஆளாக்குகிறார். அவருக்கு ஆதரவு கொடுப்பவர் வி.கே.ராமசாமி. மகனாக நடிகர்திலகம். மகளாக குமாரி பத்மினி. தவறைக் கண்டால் தட்டிக்கேட்கும் சுபாவம்,  நேர்மையை எதிர்பார்ப்பதும், தாய்மையை போற்றுவதும் கொண்ட காரெக்டர் ஆனந்தன் (நடிகர்திலகம்) . பொழுது போக்குக்காக தாயம் விளையாடும் பழக்கம் உண்டு. சிங்கப்பூரில் இருந்து பெரும் பணக்காரராக மெட்ராஸ் வரும் மேஜர், தன் கடைசி காலத்தை நல்ல கிராமத்தில் கழிக்க விரும்பி வாடிப்பட்டி கிராமத்திற்கு வருகிறார்.ஊருக்கு நல்லது செய்ய விரும்பும் அவரிடம்...

சிவாஜியின் வெள்ளிவிழா படங்கள்

படம்
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த வெள்ளிவிழா திரைப்படங்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மொத்த நேரடி தமிழ் படங்கள் 288. 1952 ல் நடிக்க தொடங்கி 47 வருடங்களாக திரையுலகில் நடித்துக் கொண்டிருந்தார். 1988 வரை 36 வருடங்களாக ஓய்வில்லாமல் படங்களை நடித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார் நடிகர் திலகம்.  இந்த 36 வருடங்களில் நடிகர் திலகத்தின் பட சராசரியை எடுத்துக் கொண்டோமானால் வருடத்திற்கு எட்டு படங்கள் கணக்காகின்றது. ஆக 45 நாட்களுக்கு ஒரு படம் வெளியானது என்று கணக்காகின்றது . ஒரு படம் வெள்ளி விழா ஓட வேண்டும் என்றால் 175. நாட்கள் ஓடி இருக்க வேண்டும் . 175 நாட்கள் என்று கணக்கு வரும் போது கிட்டத்தட்ட நான்கு படங்கள் சிவாஜி படங்கள் வெளியாகி இருக்கும் .இப்படி வெளியானால் அது 100 நாள் ஓடுவதற்கே பெரும் தடையாக அல்லவா  இருக்கும் . இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நடிகர் திலகத்தின் படங்கள் வெள்ளிவிழா ஓடி வெற்றி வாகை சூடிய பட பட்டியலை  காணலாம் . 1.நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தியே நடிகர் திலகத்தின் வெள்ளி விழா பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுள்ளது . இலங்கை மைலன் திரையரங்கில் 266 நாட்கள் ஓடி வெள...

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சிவாஜி படங்கள்

படம்
சினிமாவுக்காக சிவாஜி சென்ற வெளிநாடுகள் ... இப்போதெல்லாம் பல தமிழ் படங்கள் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்படி இல்லையெனில் ஒரு பாடலுக்கு டூயட் பாடவாவது வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்கள். உண்மையாகவே படத்திற்கு அந்த வெளிநாட்டு காட்சிகள் தேவையா அல்லது படப்பிடிப்பை சாக்காக வைத்து ஊர் சுற்றி பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. சரி அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் சினிமாவில் வெளிநாடுகளில் சென்று படப்பிடிப்பு நடத்தும் கலாச்சாரம் எப்போது தோன்றியது என்று தெரியுமா? முதன் முதலில் எந்த தமிழ் படத்தை வெளிநாட்டில் சென்று படமாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த தகவலை தான் நாம் இதில் பார்க்க போகிறோம். அதன்படி இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான சிவந்த மண் என்ற தமிழ் படம் தான் முதன் முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது.இந்த படத்தில் சில காட்சிகளுக்காக யூரோப், ஈபிள் டவர் மற்றும் ஆல்ப்ஸ் மலைஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். இந்த படம் கிட்டத்தட்ட 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற வெளிநாட்...

சிவாஜியின் பாசிடிவ் பாடல்கள்

படம்
சிவாஜியின் பாசிடிவ் சாங்ஸ். பாட்ட கேட்டா அது மனதுக்குள்ள போயி அந்த டயத்துல ரசிச்சு முடிக்கிறதோட முடிஞ்சிரக்கூடாது .அது காலமெல்லாம் வரணும் நம்ம மனச மாத்தணும். நல்ல விஷயத்தை சொல்லணும்.சிவாஜியோட இந்த பாடல்களை கேட்டால் அது நாம சாகுற வரைக்கும் வரும்.அதுதான் பாசிடிவ் சாங்ஸ். பச்சை விளக்கு படத்துல வர்ற அந்த ஒளிமயமான எதிர்காலத்தை பாட்டை கேளுங்க. இந்த பாட்டோட பெருமையை பத்தி சிவாஜி ரசிகர் யாரு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் ஒரு தன்னம்பிக்கை ஒரு பாட்ட உதாரணமாக சொல்ல ஆரம்பிச்சாங்கன்னா இந்த பாட்ட தான் முதல்ல உதாரணமா சொல்லுவார்கள்.இந்த பாட்டுல ஒரே ஒரு விஷயம் மட்டும் சுத்தி சுத்தி வராது பலவகப்பட்ட விஷயத்தையும் இந்த பாட்டுல நம்ம பார்க்கலாம். பாட்டோட ஆரம்பம் எதிர்காலத்தை பத்தி பாடுற மாதிரி வரும். அப்புறம் ஒரு வீட்டுக்கு பெருமை சேர்க்கிற அந்த பெண் குலத்தோட பெருமையா பேசுற மாதிரி வரும்.  கூடவே இந்தியாவோட மதச்சார்பின்மை ,இந்தியாவோட மக்கள் பலம் எல்லாத்தையும் சேர்த்து எழுதி இருப்பார் கண்ணதாசன். வெறும் பாட்டா கேட்டுட்டு கடந்துட்டு போயிட முடியாது இந்த பாடலை கேட்டா. நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை எ...

சிவாஜி நாகேஷ் நடித்த திரைப்படங்கள்

படம்
சிவாஜி நாகேஷ் நடித்த திரைப்படங்கள் ... அவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. ஒரு நல்ல குணசித்திர நடிகரும் கூட. சிறந்த நடனக்காரர் கூட. நாகேஷ் என்றதும் சட்டென வந்து செல்பவர் தருமி. இது அவரே அடிக்கடி சொல்லும் பாத்திரம்.ஆனால் படத்தில் நாகேஷ் வந்து சென்றது கொஞ்ச நேரமே. அந்த கொஞ்ச நேரம் வந்து இருந்தாலும் அவருடைய வரலாற்றில் இது முதன்மையான பாத்திரம் . ஏராளமான படங்களில் நாகேஷ் நடித்திருந்தாலும் நாகேஷ் நடித்த நல்ல வேடங்கள் என்றால் இந்தப் படங்களை தான் முதலில் சொல்ல வேண்டியுள்ளது. தில்லானாவின் சவடால் வைத்தி, சவாலே சமாளி சின்னப்பண்ணை, நவராத்திரி பூசாரி, தியாகத்தில் அந்த முஸ்லிம் வேடம், இப்படி நடிப்புக்காக நாகேஷ் நடித்த சிவாஜி படங்கள் அதிகம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 65 படங்களில் நாகேஷ் நடித்துள்ளார். அந்தப் படங்கள் பின்வருமாறு ; நடிகர் திலகத்துடன் நாகேஷ் இணைந்த திரைப் படங்கள் 1. நான் வணங்கும் தெய்வம் 2. குங்குமம் 3. ரத்த திலகம் 4. அன்னை இல்லம் 5. பச்சை விளக்கு 6. புதிய பறவை 7. முரடன் முத்து 8. நவராத்திரி 9. பழநி 10.அன்புக்கரங்கள் 11.சாந்தி 12.திருவிளையாடல் 13.நீலவானம் 14.மோட்டார் சு...

நடிகர் திலகம் வெறும் நடிகர் மட்டும்தான்?

படம்
நடிகர்திலகம் வெறும் நடிகர் மட்டும்தானா?  சிவாஜி என்று பேச்சு ஆரம்பித்தாலே அது நடிப்பை பத்தி பேசுவதாகத்தான் எல்லா பேச்சும் இருக்கிறது.நடிகர்திலகத்தின் படங்கள் செய்த தாக்கம்தான் அது. அவரது படங்கள் பற்றி பேசும் அதே நேரத்தில், அந்த படங்கள் எல்லாம் எப்படி அமைந்தது, அவையெல்லாம் அவரது வாழ்க்கையிலும் எப்படி இணைந்திருந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இப்போது வரும் ஸ்டார் வேல்யூ படங்கள் எல்லாம் எப்படி வருகின்றன. ஒவ்வொரு படங்களும் 100 கோடியில் தயாரிப்பு, 200 கோடியில் தயாரிப்பு என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.ஆனால் எல்லாம் அடி தடி குத்து கொலை வெட்டு படங்கள்தான்.கடந்த சில ஆண்டுகளில் எத்தனை படங்களை சிறந்ததாக கொள்ள முடியும்? தமிழ் கலையுலகுக்கு பெருமை தரும் படி எந்த தயாரிப்பும் இல்லை.இதில் கதா நாயகனுக்கு வேறு 40 கோடி 50 கோடி சம்பளம் என்று பெருமைகள்? இதெல்லாம் தான் கதாநாயகர்களுக்கு பெருமையா என்றால் அப்படி மாறி விட்டது திரையுலகம்! என்ன செய்ய! பெரும்பாலோர் சமூகத்தில் வைத்திருக்கும் மதிப்பும், நாட்டுப்பற்றும் சொல்ல வேண்டியதில்லை.அவர்களின் பணப் பெட்டி நிறைந்தால் சரி என்றுதான் இருக்கி...

.சிவாஜி சிங்கமடா!

படம்
தமிழருக்கென்று ஒரு குணம் உண்டு.. (தலைப்பு இதுவல்ல இக் கட்டுரைக்கு)   பிறந்த வீடும் ,புகுந்த வீடும் இணைந்தது, என்று சிவாஜி கணேசன் கடற்கரைக் கூட்டத்திலே பேசினார் .இந்திரா காந்தியும், கருணாநிதியும் இணைந்து பேசிய கூட்டத்தில் சிவாஜிகணேசன் பேசிய பேச்சு இந்த நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது .ஆனால் எதிர்முகாம்  வட்டாரத்தில்,  அதை ஜீரணிக்க முடியாமல் சிலர் சிவாஜி மீது பாய்ந்து இருக்கிறார்கள் .சென்ற மாதம் வரை சிவாஜியை பற்றி ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்த எதிர்முகாம் ஏடுகள் இப்போது விஷத்தை கக்க ஆரம்பித்து இருக்கின்றன. "திரைஉலகம் " ஏட்டிலேயே மகா கேவலமாக சிவாஜியை தாக்கியிருக்கிறார்கள் . புகுந்த வீடு போகப் போற அண்ணே !சிவாஜி கண்ணே ! சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே !.. என்ற தலைப்பில் எழுதி சிவாஜி பிளாக் போட்டு அதன் கீழே ஆணா? பெண்ணா? என்று கேட்டிருக்கிறார்கள். புகுந்த வீட்டுக்குப் போகிறவர்கள் பெண்கள் தானே !சிவாஜி புகுந்த வீடு பற்றி பேசியதால் ஆணா ,பெண்ணா ?என்று கேட்டிருக்கிறார்கள். சிவாஜி பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது .அவர் ஆண்மகன் தான் என்பதற்கு சாட்சியாக நான்கு குழந்த...

புகழை கர்வமாக்கிக் கொள்ளாத சிவாஜி

படம்
சிவாஜியின் படங்கள்  தேன்கூடு  போலே அதிலும் தேனெடுத்தால் தேனீக்கள்  கொட்டாத  கூடு நாகரீகம் வளரும் போது கலாச்சார  சீர்கேடுகளும் உண்டாவது தான்.அதிலிலிருந்து மக்களை நல்வழிப்படுத்தவே கலைகள் தோற்றுவிக்கப்பட்டன. கலாச்சாரம்,பண்பாடு, கடமைகள் போன்றவை நல்வழிகள் சொல்லி மக்களை  பண்படுத்தவே கலைகள் பிறந்தன. கலைகளை பரப்ப நல்ல படைப்பாளிகள் இதிலிருந்தே  வந்திருக்க வேண்டும். அவர்களின் கலை அம்சம்  ஈர்க்கப்பட்டதால் மக்கள் அவர்களை கலைஞர்களாக மதித்து போற்றப்பட்டனர்.நல்ல கலைஞனின் வேலை சமூகத்திற்கு பயன்படும் கலைகளை பரப்புவது தான்.இப்படி தோன்றிய கலைகள் தான் இன்று எப்படி மாறியுள்ளது! இன்று நாகரீகம் எவ்வளவோ வளர்ந்திருக்கலாம்.அந்தளவு நல்ல கலைகள் உருவாக்கப்படுகிறதா? இங்கே தான் நடிகர்திலகத்தின் படங்களை நாம் சொல்ல வேண்டியுள்ளது. சமுகத்தை பண்படுத்தும் படங்களாகவே அவர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். நல்ல கலைஞனாக அவர் செய்ததை செய்துவிட்டார்.அதை பின்பற்றுவது மக்களின் கையில். கலைகள் வளர எதை எடுத்துச் சொல்வது? சமூகத்தில் நடந்த நல்ல நிகழ்வுகள் ,எழுதப்பட்ட காவியங்கள், சிறந்த மனிதர்களி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற