இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி படங்களில் திருஷ்டி பரிகாரங்களாய் அமைந்த பாடல்கள்

படம்
சிவாஜி படங்களில் திருஷ்டி பரிகாரங்களாய் அமைந்த பாடல்கள் .. ரோடு நல்லா இருக்கும் .வண்டிகளில் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருப்போம்.ஒரு  அலுங்கலில்லை .குலுங்கல் இல்லை.அப்படி போய்க் கொண்டிருக்கும் வண்டி ஸ்பீடு  பிரேக்கர் வந்தால் சடாரென தடுமாறுமே ,அதே போல்தான் நன்றாக போய்க் கொண்டிருக்கும் திரைப்படத்தில் தேவையில்லாமல் ஒரு பாடல் வந்து அந்த திரைப்படத்தை நாம் ரசித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வெறுப்பேற்றும். பெரும்பாலும் சிவாஜி படங்களில் தேவையில்லாத ,சம்பந்தம் இல்லாத பாடல்கள் இருக்காது. சில படங்களில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும் அந்தப் படத்துக்கு அது தேவையில்லாத பாடலாக கூட இருக்கும்.  அப்படி நடிகர் திலகத்தின் சில படங்களில் தேவையில்லாமலும், சில படங்களில் திருஷ்டி பரிகாரங்களாகவும் அமைந்த பாடல்கள் என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் சாகசத்தையும்   நடிகர் திலகம் தன் நடிப்பால் நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்  படம் முழுவதும்.வைத்த கண் வாங்காமல் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து  ரசித்து நாம் பார்த்துக் கொண்டிருக்க...

பின்னியெடுத்த பளார் காட்சிகள்

படம்
சிவாஜி அடிப்பது போன்ற காட்சிகளில்  நடிக்கும் போது உடன் நடிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .சிவாஜியிடம் பாவ்லா நடிப்பெல்லாம் இருக்காது .இது போன்ற காட்சிகளை எடுப்பதற்கு முன்பே சிவாஜி உடன் நடிப்பவர்களிடம் அந்தக் காட்சிகள் எப்படி நடிக்க வேண்டும், நான் அடிக்கும்போது நீங்கள் எவ்வாறு விலகிக் கொள்ள வேண்டும் என்று விபரமாகவே சொல்லிவிட்டே அந்தக் காட்சியில் நடிக்க தொடங்குவார். படத்தில் சிவாஜி அடிப்பதை பார்த்தால் உண்மையாகவே அடித்து விட்டாரோ என்று நினைக்க தோன்றும். அந்த காலத்தில் நடிகர் திலகத்துடன் நடித்த நடிகர் நடிகர்கள் எல்லாம் திறமையானவர்களாக இருந்ததால் இதுபோன்ற படத்தில் இடம் பெற்ற காட்சிகள் தத்ருபமாக அமைந்து இருக்கும்.என்னதான் உஷாராக இருந்தாலும் அதையும் மீறி சில சமயங்களில் அடிகள் நிஜமாகவே உடம்பின் மீது விழுந்துவிட்ட பல சம்பவங்களும் இருந்துள்ளன. அப்படி நடைபெற்ற சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் மிக முக்கியமானவை. இந்த மூன்று சம்பவங்களில் மூன்று முக்கிய பிரபல கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்கள் பத்மினி சாவித்திரி சரோஜாதேவி. இந்த மூன்று சம்பவங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.  த...

அதிர வைத்த கோர்ட் காட்சிகள்

படம்
நடிகர் திலகம் திரைப்படங்களில் கோர்ட் காட்சிகள். கோர்ட் காட்சிகள் என்று பலரால் சொல்லப்படும் போது சிவாஜி கணேசன் முதலில் நடித்த பராசக்தி படத்தை சொல்வார்கள். நீதிமன்றம் பல விசித்திரம் நிறைந்த வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்று ஆரம்பித்து ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்று நடிகர் திலகம் பராசக்தியில் முழங்கிய போது  அந்தப் படமும் ஓடித் தள்ளியது. சிவாஜியின் அந்த பராசக்தி கோர்ட் சீன்களை வைத்து மழைக்காலங்களில் வைரலாக பரவும் அந்த மழை சம்பந்தப்பட்ட கோர்ட் காட்சிகள் கூட வைரலாக பரவுவதில் இருந்து அதன் தாக்கத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். பராசக்தியில் அந்த கோர்ட் காட்சியில்  சிவாஜி பேசிக் கொண்டிருக்கும்போது இடையே எழுந்து ஒரு குமாஸ்தா கேள்வி கேட்க,  கை நீட்டும் போது உனக்கேன் அக்கறை என்று பதில் சொல்லும் பாணி எல்லோரையும் கவர்ந்தது. ஒரு சிறு மழை தூரலாக ஆரம்பிக்கும் அந்த வசனம் சிவாஜி பேசி முடிக்கும் போது பெரும் புயலாக முடிந்திருக்கும் . யாரால் மறக்க முடியும் இந்த கோர்ட் காட்சியை. அடுத்து எல்லோராலும் ரசிக்கப்படும் அந்த கௌரவம் கோர்ட் காட்சிகள். எல்லா வக்கீல் வேடங்களுக்கும் கா...

அந்த காலத்திலேயே அசத்திய சிவாஜியின் மேக்கப்புகள்

படம்
அந்த காலத்திலேயே அசத்திய சிவாஜியின் மேக்கப் கலைகள். ஒரே மாதிரி முக தோற்றத்தில் நடிப்பை தருவது ரசிகனுக்கு ஒரு நடிகன் செய்யும் கைம்மாறு அல்ல.இன்றைய கால கட்டங்களில் எந்த நடிகனும் எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்றிக் கொள்ளலாம்.அந்த அளவுக்கு மேக்கப் கலைகளும் தொழில் நுட்பங்களும் வளர்ந்துள்ளன.நடிகர்திலகம் இருந்த காலகட்டத்தில் முக தோற்றதை மாற்றும் மேக்கப் , மற்றும் வித்தியாசமான முக தோற்ற மேக்கப் போடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.இதற்கு காரணம் ,இது போன்ற மேக்கப்பிற்காக பல வீரியம் கொண்ட ரசாயன கலைவைகள் மற்றும் பசை ஆகியவை பயன்படுத்தபட்டதுதான்.இந்த வகை மேக்கப் எல்லா ஒப்பனையாளர்களும் செய்யவும் முடியாது.அதற்கென்று சிலரே இருந்தார்கள்.மேக்கப் போடுவதை காட்டிலும் அதை கலைப்பது மிகவும் கடினமான ஒன்றாகவும் இருந்தது. முகத்தோல் கிழியும் ,வலி கொடுக்கும் ,நேரமாகும் என்பதெல்லாம் இந்த மேக்கப் கலையில் இருந்த சிரமங்கள். அதனால்தான் பெரிய நடிகர்களே  பெரும்பாலும் இந்த வகை மேக்கப் போடுவதை விரும்புவதில்லை. எதற்கு வீணான ரிஸ்க் என்று வித்தியாசமான முகத்தோற்றமா, மாறுவேடமா ... ஒட்டு தாடியை, இல்லை முகத்தில் ஒரு சிறு கரு...

சிவாஜியுட நடித்த கதாநாயகிகளுக்கு எத்தனை படங்கள் 100 நாள் ஓடியது

படம்
சிவாஜியுடன் ஜோடியாக  நடித்த கதாநாயகிகளின் திரைப்படங்களில்  100 நாள் ஓடிய  பட விபரங்களை இந்த பதிவில்  பார்க்கலாம்.சிவாஜியுடன்  கதாநாயகிகளாக நடித்த திரைப்படங்கள் மட்டும் இந்த பதிவில்  குறிப்பிடுகிறேன். சிவாஜியுடன் நடித்த முதல் கதாநாயகி பண்டரிபாய் . இவருடன் இணைந்து நடித்த பரராசக்தியான முதல்படமே 280 நாட்கள் ஓடியது.இதைத் தொடர்ந்து சிவாஜியுடன் பண்டரிபாய் நடித்த அன்னையின் ஆணை,தெய்வமகன், கௌரவம் ஆகிய நான்கு படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும். சிவாஜி கிரிஜா நடித்த இரண்டு படங்களில் மனோகரா  100 நாள் திரைப்படம் ஆகும். சிவாஜி பத்மினி நடித்த 100 நாள் படங்கள்:கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தூக்குத்தூக்கி எதிர்பாராதது அமரதீபம் புதையல் உத்தமபுத்திரன் தங்கப்பதுமை தெய்வப்பிறவி இரு மலர்கள் தில்லானா மோகனாம்பாள் வியட்நாம் வீடு குலமா குணமா  ஆகிய 12 படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும். சிவாஜி ஜி வரலட்சுமி நடித்த நான் பெற்ற செல்வம் 100 நாள் ஓடிய திரைப்படம். சிவாஜி ஜமுனா நடித்த தெனாலிராமன் தங்க மலை ரகசியம் ஆகிய 2 படங்கள் 100 நாள் திரைப்படங்கள் . சிவாஜி எம் என்...

சிவாஜி படங்களின் சாட்டையடி காட்சிகள்

படம்
சிவாஜி கணேசன் சாட்டையடி காட்சியில் நடித்தமிகவும் கடினமான காட்சிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்  . 1) காத்தவராயன் படத்தில் சிவாஜி கணேசன் மகாராணி ஆரியமாலாவான சாவித்திரியை காதலிப்பதை மன்னர் ஈ. வி. சகாதேவன் அறிந்து கொண்டு காத்தவராயனான சிவாஜி கணேசனுக்கு ராஜ தண்டனை கொடுக்கும் விதமாக படத்தின் இறுதி காட்சியில் யானையின் பின் பக்கம் சிவாஜி கணேசனை யானை சங்கிலியால் பிணைக்கப்பட்டு சாட்டையால் அடித்து கொலை களத்திற்கு கொண்டு செல்வதை போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்தகாட்சியில் சி. எஸ். ஜெயராமன் பாடிய  'விதியா சதியா 'பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் மேல் விழும் சட்டையடிகளை நாம் படத்தில் பார்க்கும்போது சாட்டையடிகள் உண்மையிலேயே அவர் உடம்பில் விழுந்து விட்டதா என்பது போல காட்சியில் சாட்டையடிகள் அனலடிக்கும் விதமாக எடுத்திருப்பார்கள்.ஆம் உண்மைதான்.இந்தகாட்சியில் சிவாஜியின் மேல் 12 சாட்டையடிகள் விழும்.இதில்  உண்மையாகவே 4/5 சாட்டையடிகள் அவர் உடலை பதம் பார்த்து விட்டது.முதுகில் விழுந்த அடிகள் எல்லாம் சிவாஜிக்கு மிகுந்த வலியை கொடுத்தன.அதையும் பொருட்படுத்தாது சி...

சிவாஜியின் 64 வகை முக பாவங்கள்

படம்
சிவாஜியின் 64 வகை முக பாவனைகள்  ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!இத்தகைய அரிய திறமை வாய்ந்த நடிகர் நடிகர்திலகம் மட்டுமே!  மனிதனின் முக உணர்ச்சி பாவங்கள் என்பது 8 வகை தான். அவை.. 1சிரிப்பு  2அழுகை 3பயம்  4மகிழ்ச்சி  5கோபம்  6வீரம்  இகழ்ச்சி  8வியப்பு .. இந்த எட்டு வகை பாவங்களை மெய்ப்பாடுகள் என்பார்கள். இப்படி எட்டு வகை பாவங்கள் தானே உள்ளது.பின் எப்படி 64 வகை பாவங்கள் என்ற கேள்வி பலருக்கும் வரலாம். அது பற்றிய விளக்கத்தை காண்போம். சிவாஜி  சிரித்துக் கொண்டே அழுவார்.அழுதுகொண்டே சிரிப்பார் பல படங்களில்.கண்ணதாசனே பாவமன்னிப்பு படத்தில் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் என்று பாடல் எழுதியிருப்பார். இதில் சிரிப்பும் அழுகையும் கலந்துள்ளது. இப்படித்தான் இந்த எட்டுவகை பாவங்களில் இன்னொரு பாவமும் கலந்து வெளிப்படுத்துவது. சிரிப்புடன் அழுகை  சிரிப்புடன் கோபம்  சிரிப்புடன் வியப்பு  ...

வெள்ளிவிழா கண்ட சிவாஜி படங்ளின் பார்முலா

படம்
இந்தப் பதிவில் சொல்லப்படும் சிவாஜியின் வெள்ளி விழா படங்களில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது ' பிரிவு ' என்பதை மையமாக வைத்து அமைந்த திரைப்படங்கள். அவை என்னென்ன படங்கள் என்னென்ன வகையில் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  சிவாஜியின் மூன்று வெள்ளி விழா படங்களில் நடித்த நடிகை K.R.விஜயா. தங்கப்பதக்கம் ,திரிசூலம், நீதிபதி.தங்கபதக்கம் படத்தில் சில காலம் மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.திரிசூலம் படத்தில் மனைவி மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.நீதிபதி படத்திலும் காதலி சுஜாதா ,மகன் பிரபுவை பிரிந்து இருப்பார் சிவாஜி.இந்த மூன்று படத்திலும் உள்ள ஒற்றுமை இது.தங்கபதக்கம் வெளியான போது அதுவரை வெளியான வசூல் சாதனைகளை முறியடித்தது.திரிசூலம் வெளியான போது அதற்கு  முன் வெளியான அத்தனை படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. இந்த மூன்று படங்களிலும் மனைவியோ அல்லது மகனோ பிரிந்திருக்கும் காட்சி அமைப்புகள் இடம் பெற்று இருக்கும்  பாவமன்னிப்பு. 177 நாட்கள் ஓடி வெள்ளிவிழா சாதனை செய்த படம் பாவ மன்னிப்பு. இந்தப் படத்தில் சிவாஜி ,அப்பா  எம் .ஆர். ராதா ,அம்மா எம் வி ராஜம்மா, தம்பி ஜெமினி கணேசன் ஆகியோரை சிறுவயதிலேயே...

சிவாஜிக்கு மகளாக நடித்த நடிகைகள்

படம்
நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மகளாக நடித்த நடிகைகள் பற்றிய விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம் . முதல் தேதி. 12 3 1955 இல் வெளியான படம் இது. சிவாஜி முதன்முதலாக வயதான தோற்றத்தில் நடித்த படம் இது.சிவாஜியின் 21வது திரைப்படம் இதுவாகும்.இந்தப் படத்தில் சிவாஜிக்கு மகளாக பேபி உமா என்பவர் நடித்திருந்தார். சிவாஜிக்கு மகளாக முதன் முதலில் நடித்த நடிகை என்று இவரை சொல்லலாம். 12 7 63 ல் வெளியான படம் பார் மகளே பார். இந்தப் படத்தில் சிவாஜியின் மகள்களாக விஜயகுமாரி புஷ்பலதா இருவரும் நடித்திருந்தார்கள்.  தனக்குப் பிறந்த இரு மகள்களில் ஒரு மகள் தனக்கு பிறந்தவர் இல்லை என்ற பிரச்சனை எழுவதும் அதற்குப் பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாகும். மோட்டார் சுந்தரம் பிள்ளை. 13 குழந்தைகளுக்கு தந்தையாக நடித்தார் சிவாஜி கணேசன் . ஜெயலலிதாவும் காஞ்சனாவும் அந்த 13 குழந்தைகளில் இரு மகள்களாக நடித்திருந்தார்கள்.  திருமால் பெருமை படத்தில்   பெரியாழ்வார் என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் திலகம்.  கே ஆர் விஜயாவின் வளர்ப்பு தந்தையாக சிவாஜி நடித்திருப்பார். சிறு வயது மகளாக குட்டிபத்மினி நடித...

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிவாஜியின் முக உடல் தோற்றங்கள்

படம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் வித விதமாக வடிவெடுத்த சிவாஜி கணேசனின் முக தோற்றம் மற்றும் உடற் தோற்றங்கள் : முதலில் 1952ல் வெளியான பராசக்தி திரைப்படத்தில் இருந்து 1956ல் சிவாஜி கணேசன் நடித்து வெளியான அனைத்து திரைப்படத்திலும் ஒரே மாதிரியாகவும் ஆனால் அதற்கு இடையே 1954ல் சிவாஜி கணேசன் லேசான திடகாத்திரமான உடற் தோற்றத்தில் கொஞ்சம் பூசினாற் போல் தோற்றத்தில் நடித்தார்.  அதன் பின் 1957 முதல் 1960 வரையிலான அனைத்து திரைப்படங்களிலும் சிவாஜி கணேசன் முக தோற்றமும், உடல் தோற்றமும் இன்னும் சற்று மாறி இருந்தது. ரசிக மக்களை தனது நடிப்பின் முக பாவத்தாலும், உடல் மொழியாலும் (பாடி லாங்வேஜ்)லும் வெளுத்து வாங்கியிருப்பார். அதன் பிறகு 1961 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் சிவாஜி கணேசன் ஒரு அழகான உடற்தோற்றத்தில் அமூல் பேபி என்று சொல்லமாக நமது குழந்தைகளை அழைப்பது போன்றான குண்டான உடற்தோற்றத்தில் சிவாஜி கணேசன் நடித்து அசத்தியிருப்பார். இன்னும் தெளிவாக சொல்ல போனால் அந்த காலகட்டத்தில் ரத்ததிலகம், புதிய பறவை, கர்ணன், ஆண்டவன் கட்டளை, பச்சை விளக்கு படங்களில் கொஞ்சும் முக தோற்றத்திலும் உடற் தோற்றாலும் நடித்திருப்பார்....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற