இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

3 டைரக்டர் -3 தெரியாத விஷயம்

படம்
கிருஷ்ணன்-பஞ்சு இந்த இரட்டை இயக்குனர்களில் இயக்கத்தில் முதல் படமான பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் நடித்து கொண்டிருக்கும் போது சிவாஜியை ஏளனமாக பலர் பேசியபோது ... சிவாஜி கணேசனை அரவணைத்து நெஞ்சார தைரியம் கொடுத்தது இயக்குனர்களில் பெரியவர் கிருஷ்ணன் அண்ணன் மட்டுமே மேலும் பராசக்தி படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு நாடகத்தில் நடித்த அனுபவம் மட்டுமே இருந்ததாலே படங்களில் கேமரா கோணங்களை அரிய செய்து ஆங்கில போஸ் முறையில் நடிக்க யோசனைகள் சொன்னார் கிருஷ்ணன் அவர்கள் .மேலும் அதனாலே அவரது திரைப்படங்களில் நான் நடிக்கும் போது எனக்கொரு தனி உற்சாகம் சந்தோஷம் இனம் தெறியாத நட்பு மேலும் எனக்கும், அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வயது ஆனால் என்னை அவர் கடைசி காலம் வரை மிஸ்டர் கணேஷ் அல்லது சிவா அதிகபட்சமாக வாங்க போங்க என்று மரியாதை நிமித்தமாகவே என்னை அழைப்பார்.  என்னிடம் ஒரு போதும் அதிர்ந்து கூட பேசாத வயதில் பெரிய இயக்குனர்களில் ஒருவர் கிருஷ்ணன் அவர்கள் . சிவாஜி தன்  தாயார் பெயரில் ராஜாமணி பிக்சர்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பாசமலர் படத்தை வெளியிட்ட பின் , சிவாஜி கணேசன் அவர்கள் மனதில் ஒரு கு...

உலகம் வியந்த நவ சிவாஜி

படம்
நவ சிவாஜி - 9 அற்புதங்கள் அதிசயமாகத்தான் இருக்கு.நம்பாமயும் இருக்க முடியலேயே.சிவாஜி செஞ்ச 9 வேஷந்தான்.ஒரு வேஷத்துக்கும் இன்னொரு வேஷத்துக்கும் சென்டிமீட்டர் மில்லி மீட்டர் அளவுல ஆராய்ச்சி பண்ணினாலும் ஏதும் கண்டு பிடிக்க முடியலேயே.எல்லாமே ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமாத்தானே இருக்கு. அந்த 9 வேஷத்தையும் சிவாஜியாலே நாம பாத்துட்டோம்.சிவாஜி எதைப் பாத்து செஞ்சிருப்பாரு.இந்த ஆச்சர்யம் பாக்குற யாருக்கும் வராம போகாது. அற்புதம்,பயம்,கருணை , கோபம்,சாந்தம்,அருவருப்பு,, சிங்காரம்,வீரம்,ஆனந்தம் இந்த 9 ரசங்களையும் அவர் நடிச்சப்போ நாமும் அந்த குணங்களுக்கு மாறுகிற உணர்வுகளுக்கு அடிமை படுத்திவிடுவார் பாருங்க  இந்த நவ சிவாஜி. அற்புதராஜ் இந்த அற்புதராஜை பாருங்க.அந்த காலத்துலே இங்கிலீஸ் படங்கள பாத்தப்போ அட இவங்க எல்லாம் எவ்வளவு ஸ்டைலிசா இருக்காங்க ,நடிக்கிறாங்க அப்பிடின்னு எல்லாம் பேசிக்குவாங்க.நம்ம ஊர் நடிகர்கள் நம்ம கலாச்சார படி தான் இருப்பங்க ,நடிப்பாங்க.  ஆனா இந்த அற்புதராஜ் நடிப்பை பாக்கையிலே சிவாஜி மேல் நாட்டுல இருந்து வந்தவரோ ,அங்கேயே படிச்சு வளந்தவரோ அப்பிடீன்னு நெனப்பு வந்து போகும்.தோளை மெல்ல த...

சிவாஜி ரசிகன் VS மற்ற ரசிகன்

படம்
சிவாஜி ரசிகர்களுக்கும் மத்த  ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.அப்படி என்ன வித்தியாசம்  ? பேஸ்புக்க்குல பல நாளுக்கு முன்னாலே ஒரு பதிவ பார்த்தேன்.அந்த பதிவுலே இருந்ததை முதல்ல உங்களுக்கு சொல்றேன் .அப்புறம் என்ன வித்தியாசம் என்பதை கடைசியிலே பாக்கலாம். பதிவு இதுதான். அந்த நண்பர் இட்ட பதிவு... சிவாஜி கணேசன் இறந்து விட்டாரா ..? . யார் சொன்னது..? . கடந்த வாரத்தில் ஒரு நாள் காலை ... ... சுமார் ஒன்பது மணி இருக்கும். . எனது ஃபேஸ்புக் நண்பர்  அவர்கள் ‘திடீர்’ என ஒரு பதிவு இட்டார்.. என் பெயரை டேக் செய்து..! . அது இதுதான்...! . “நண்பரே உங்களுக்கு ஒரு சேலஞ்ச் . சும்மா வெளையாட்டுக்குத்தான். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துல , இந்தக் காட்சில வர்ற பாட்டுக்கும் , நடிகர் திலகத்திற்கும் ஒரு சிறப்பான ஸ்பெஷாலிடி உண்டு. யார் மொதல்ல கண்டு புடிக்கிறாங்களோ அவங்களுக்கு ஒரு புத்தகம் பரிசு. அவங்களுக்குப் புடிச்ச புத்தகம். வாங்கி அனுப்புவேன். பரிசுத் தொகை ரூ 500/-“ . இப்படி எழுதி “தில்லானா மோகனாம்பாள்” காட்சி ஒன்றை ஸ்க்ரீன் ஷாட் ஆகப் போட்டிருந்தார் அவருடைய  நண்பர். . காட்சியைப் பார்த்தேன்..! ...

திருலோகசந்தர் இயக்கிய சிவாஜி படங்கள்

படம்
ஏசி திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்து வெளிவந்த படங்கள்: 1.தங்கை. திருலோகசந்தர் சிவாஜியை வச்சு டைரக்ஷன் பண்ணுன முதல்படம் இது.குடும்ப படம் சரித்திர புராண படங்கள்ல விருப்பப்பட்டு நடிச்சுகிட்டு இருந்த சிவாஜிய இதுல ஒரு ஆக்ஷன் ஹீரோவா அறிமுகம் செஞ்சாரு திருலோகசந்தர்.சிவாஜி ஆக்ஷன் காட்சிகள்ல தன்னோட ஸ்டைல் நடிப்பையும் காட்டி அசத்த வெச்சாரு.இந்தப் படம் நல்லா வசூல் செஞ்சு பாலாஜிக்கு ரொம்ப திருப்திய கொடுத்துருச்சு. 19.5.67  வெளியான படம் தங்கை.  2. இரு மலர்கள். திருலோக சந்தரோட ஸ்பெஷாலிட்டியே ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் எடுக்கிறது தான். முதல் படத்துல ஆக்சன் ஹீரோவ காட்டுன சிவாஜிய இதில் அப்படியே மாத்தி இருப்பார்.வழக்கமான முக்கோண காதல் கதை படமா இருந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே படத்தை ரொம்ப  ரசிச்சு ரசிச்சு பாக்க வெச்சிருப்பார் திருலோக சந்தர்.சிவாஜி அந்தகால கட்டத்துல இளைச்சு போய் ரொம்ப ஹேண்ட்சம்மா இருப்பார்.இரு மலர்கள் படத்தோட ஊட்டி வரை உறவும் ஒரே நாள்ல ரிலீசாச்சு.ரெண்டும்  100 நாள் ஓடி சாதனை செஞ்ச படங்கள். இருமலர்கள் 1.11.67லே வெள...

சிவாஜி அண்ணன் வி.சி.தங்கவேல் அவர்கள் பற்றிய தகவல்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அண்ணன் வி. சி. தங்கவேல் அவர்கள் பற்றியான தகவல்கள்  :- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூன்றாவது அண்ணனான வி. சி. தங்கவேல் அவர்கள் நாகப்பட்டிணத்தில் அவரது தந்தை சின்னையா மன்றாயர் ரயில்வே பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது விழுப்புரத்தில் பிறந்தார்.   சின்னையா மன்றாயர் ஆரம்பகாலத்தில் ரயில்வேயில் கேங்க் மேனாக இருந்த போது அதாவது ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு வேலையில் இருந்த போது முதலில் சீர்காழியில் பணிபுரிந்து வந்தார் அங்கு அவர்களின் முதல் மகனான திருஞானசம்பந்தமூர்த்தி பிறந்தார்.  அவருக்கு திருஞானசம்பந்தமூர்த்தி என்று பெயரிடுவதற்கு காரணம் 63 நாயன்மார்களில் முதன்மையான குழந்தை பாலகனான திருஞானசம்பந்தமூர்த்தியின் பிறந்த ஊரான சீர்காழி ஸ்தலம் என்பதால் அப்பெயர் இடப்பட்டது.  அதன் பிறகு சீர்காழி அடுத்த சிதம்பரத்தில் பணியிடை மாற்றம் சின்னையா மன்றாயருக்கு ஏற்பட்டதால் அங்கு பிரசிதி பெற்ற நடராஜர் திருபெயரில் ஆதி கருவறை பெயரான கனகசபைநாதர் என்பதை இரண்டாவது மகனுக்கு  கனகசபைநாதன் என்று பெயரிட்டார்.  அதன் பிறகு இரண்டு பிள்ள...

ஜீவபூமி

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சாண்டில்யனின் ஜீவ பூமி ... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் & சரோஜாதேவி மற்றும் v.k.ராமசாமி, டி. எஸ். பாலையா, எம். ஆர். ராதா, T.k.பகவதி ,நாகேஷ் ஆகிய அன்றைய முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவராத சரித்திர திரைப்படம். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் அதற்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த வடநாட்டு  ராஜா கதைகளான தங்கமலை ரகசியம், ராஜ பக்தி, மருதநாட்டு வீரன், சித்தூர் ராணி பத்மினி போன்ற திரைப்படங்களின் கதை சாயலில் தான் இந்த திரைப்படமும்.  வடநாட்டு ராஜ வம்சத்தில் ஒன்றான ராஜ புத்திர வம்சத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படமானது சாண்டில்யன் எழுதிய ஜீவ பூமி புதினத்தையும் மேலும் இரண்டு புதினங்களின் கலவையாக  இயக்குனர் சோமு அவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவிவை வைத்து இயக்கினார்.  இந்த திரைப்படம் 1962 முதல் வெகு நாட்கள் தயாரிப்பில் இருந்து 1965ல் வெளி வருவதாக இருந்தது.படத்தின் காட்சிகள் எல்லாம் வடநாடுகளிலே படமாக்கப்பட்டது.  அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் கர்ணன், புதிய பறவை போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்...

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்

படம்
தொலைக்காட்சியில் சில தினங்களுக்கு முன்பு  சேனலை மாற்றிக் கொண்டே வந்தபோது ஜெயா டிவியில் தெய்வமகன் ஓடிக்கொண்டிருந்தது. ரிமோட்டை அப்படியே நிறுத்தி விட்டேன். அப்போதிருந்தே இதன் காட்சிகள் நெஞ்சை பிசைந்து கொண்டேயிருக்க இந்தபதிவு. சின்ன மகன் விஜய்  அப்பா சிவாஜியிடம் பணம் கேட்டு வரும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. சிவாஜியின் நடிப்பை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும். ஓவர் ஆக்டிங்கா ,அண்டர் ஆக்டிங்கா ,அப்பர் ஆக்டிங்கா லோயர் ஆக்டிங்கா, மிடில் ஆக்டிங்கா  இன்னும் என்னென்ன இருக்கின்றதோ அப்படி எல்லாம் சொல்லிக் கொள்வோர் சொல்லிக் கொள்ளட்டும். இந்தக் காட்சி பார்த்தும் விமர்சனம் செய்பவன் எவனாவது இருக்கிறான் என்றால் அவன் சினிமா என்னவென்றே தெரியாதவன். சினிமா பார்க்கவே லாயக்கு இல்லாதவன் . கிருஷ்ணா நடித்து தெலுங்கில் எடுக்கப்பட்ட தெய்வமகன் ரீமேக்கின் இதே காட்சியைத் தான் சென்ற வாரம் ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டு இருந்தார். தெய்வமகன் படத்தில் இடம்பெற்ற அதே காட்சி தான் தெலுங்கு ரீமேக்கிலும் படம் ஆக்கப்பட்டு இருந்தது.ரசிப்பதற்கு பதில் இகழ்ச்சியை  தந்த காட்சி...

சிவாஜி நடித்த தெலுங்கு திரைப்படங்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெலுங்கு திரைப்படங்கள் : 1.சிவாஜி கணேசன் நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் பரதேசி. இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 14. 1. 1953 . நடிகை அஞ்சலி தேவி தயாரித்த திரைப்படம் இது.சிவாஜியுடன் நாகேஸ்வரராவும் நடித்திருந்தார் .இந்தப் படத்தை இயக்கியவர் எல் வி பிரசாத் நடிகர் திலகத்துக்கு ஜோடி வசந்தா.  2.நடிகர் திலகத்தின் அடுத்த தெலுங்கு திரைப்படம் பெம்புடு கொடுகு.இந்தத் திரைப்படம் வெளிவந்த ஆண்டு 11.11.1953  . சிவாஜிகணேசனுடன் சாவித்திரி நடித்த முதல்  திரைப்படம் இது.இந்தப் படத்தின் இயக்குனர்  எல் வி பிரசாத். ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு சிவாஜி நடித்து வந்த பெற்ற மனம் படத்தின் கதை தான் இது.இந்தப் படத்தில் நடிக்க சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்தால்தான் தெலுங்கில் தயாரிக்க அனுமதிப்பேன் என்று P.A.பெருமாள் அவர்கள் தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்தார்.  3.அடுத்து நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் வெளியான படம் மனோகரா.இப்படம் வெளிவந்த  தேதி 3.6.1954.இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் கிரிஜா. இயக்கம் எல் வி பிரசாத். இந்தப் படத்தின் தெலுங்கு வசனங்க...

சிவாஜி படங்களில் திருஷ்டி பரிகாரங்களாய் அமைந்த பாடல்கள்

படம்
சிவாஜி படங்களில் திருஷ்டி பரிகாரங்களாய் அமைந்த பாடல்கள் .. ரோடு நல்லா இருக்கும் .வண்டிகளில் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருப்போம்.ஒரு  அலுங்கலில்லை .குலுங்கல் இல்லை.அப்படி போய்க் கொண்டிருக்கும் வண்டி ஸ்பீடு  பிரேக்கர் வந்தால் சடாரென தடுமாறுமே ,அதே போல்தான் நன்றாக போய்க் கொண்டிருக்கும் திரைப்படத்தில் தேவையில்லாமல் ஒரு பாடல் வந்து அந்த திரைப்படத்தை நாம் ரசித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வெறுப்பேற்றும். பெரும்பாலும் சிவாஜி படங்களில் தேவையில்லாத ,சம்பந்தம் இல்லாத பாடல்கள் இருக்காது. சில படங்களில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும் அந்தப் படத்துக்கு அது தேவையில்லாத பாடலாக கூட இருக்கும்.  அப்படி நடிகர் திலகத்தின் சில படங்களில் தேவையில்லாமலும், சில படங்களில் திருஷ்டி பரிகாரங்களாகவும் அமைந்த பாடல்கள் என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் சாகசத்தையும்   நடிகர் திலகம் தன் நடிப்பால் நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்  படம் முழுவதும்.வைத்த கண் வாங்காமல் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து  ரசித்து நாம் பார்த்துக் கொண்டிருக்க...

பின்னியெடுத்த பளார் காட்சிகள்

படம்
சிவாஜி அடிப்பது போன்ற காட்சிகளில்  நடிக்கும் போது உடன் நடிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .சிவாஜியிடம் பாவ்லா நடிப்பெல்லாம் இருக்காது .இது போன்ற காட்சிகளை எடுப்பதற்கு முன்பே சிவாஜி உடன் நடிப்பவர்களிடம் அந்தக் காட்சிகள் எப்படி நடிக்க வேண்டும், நான் அடிக்கும்போது நீங்கள் எவ்வாறு விலகிக் கொள்ள வேண்டும் என்று விபரமாகவே சொல்லிவிட்டே அந்தக் காட்சியில் நடிக்க தொடங்குவார். படத்தில் சிவாஜி அடிப்பதை பார்த்தால் உண்மையாகவே அடித்து விட்டாரோ என்று நினைக்க தோன்றும். அந்த காலத்தில் நடிகர் திலகத்துடன் நடித்த நடிகர் நடிகர்கள் எல்லாம் திறமையானவர்களாக இருந்ததால் இதுபோன்ற படத்தில் இடம் பெற்ற காட்சிகள் தத்ருபமாக அமைந்து இருக்கும்.என்னதான் உஷாராக இருந்தாலும் அதையும் மீறி சில சமயங்களில் அடிகள் நிஜமாகவே உடம்பின் மீது விழுந்துவிட்ட பல சம்பவங்களும் இருந்துள்ளன. அப்படி நடைபெற்ற சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் மிக முக்கியமானவை. இந்த மூன்று சம்பவங்களில் மூன்று முக்கிய பிரபல கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்கள் பத்மினி சாவித்திரி சரோஜாதேவி. இந்த மூன்று சம்பவங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.  த...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற