இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவந்மண் -அன்று சிந்திய ரத்தம்

படம்
ஸ்ரீதர் நடத்திய பத்திரிக்கை சித்ரலாயா.அதில் ஒரு வாசகர் இப்படி கேள்வி  கேட்டிருந்தார்.சிவாஜியை வெச்சே படங்க எடுத்துட்டு வந்திருக்கீங்க.எப்போ 'இவரை' வெச்சு படமெடுக்க போறீங்க ?இவரைன்னா சிவாஜிக்கு போட்டியா இருந்த நடிகர். கூட  இருந்த கோபு இப்போதைக்கு இல்லைன்னு பதில் போட்டறவான்னு ஸ்ரீதர் கிட்டே கேட்டார். ஸ்ரீதருக்கு அப்பத்தான் அந்த எண்ணமே வந்துச்சு. 'விரைவில் எதிர்பாருங்கள்னு' பத்திரிக்கையிலே பதில் போட்டுட்டார்.கூட இருந்த கோபுவுக்கே இது அதிர்ச்சியா இருந்துச்சு. அந்த நேரத்துலே நடந்த விஷயம் இது.. 1968 ஆம் வருசம் வந்த படம் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்துக்குத்தான் கண்டிப்பா தமிழக அரசு விருது கொடுக்கும்னு சிவாஜி உள்பட எல்லாரும் நெனச்சுட்டு இருந்தாங்க. ஆனா அப்போ இருந்த திமுக அரசு மாற்று முகாமோட'கோயில் ' படத்துக்கு விருது கொடுத்துருச்சு. அந்தப்படம் எப்படி? இந்த படம் எப்படி ..  தமிழ் கலாச்சாரம்னு வாய் கிழிய பேசறாங்களே..பரதத்தையும் நாதஸ்வரத்தையும் பத்துன அந்த படத்தை விடவா ... என்ன பண்றது .. எல்லாமே அரசியல்தான்.. தமிழ் சினிமாலே சிவாஜி குரூப் ,எதிர் முகாம் குரூப்னு இருக்கு.  ...

ஒரே ஷாட் பாடல்

படம்
நடிகர்திலகம் சிவாஜியே ஒரு பெரிய டெக்னாலாஜி மனுசனா தான் இருந்திருக்கார்.நடிப்புலே எத்தனையோ புது விதமான நடிப்பை செஞ்சிருக்கார்.அவர்தான் அப்படின்னா அவரோட பல படங்கள்லயும் ஒவ்வொரு புதுமைகள் நடந்துட்டுதான் வந்திருக்கு.  அந்த மாதிரி ஒரு புது முயற்சியா ஒரே ஷாட்டுலே ஒரு நாலரை நிமிஷ பாட்டை சிவாஜி நடிச்ச படத்துலே எடுத்திருக்காங்க. இந்த புதுமை நடந்தது 1974 லே.அதுக்கு முன்னாலே இந்த மாதிரி எதுவும் நடக்கலே. இந்த ஒரே ஷாட் விஷயத்தை பேசறதுக்கு முன்னாலே அதுக்கு முன்னாலேயே நடந்த இது மாதிரி நடந்த வேற ஒரு விஷயத்தையும் நினைச்சு பாக்கணும்.அது என்னான்னா ஒரே ஷாட்டுலே எடுத்த ஒரு வசனக் காட்சி .அதுவும் சிவாஜி படம் தான்.சுமார் 8 நிமிஷ வசன காட்சி .ராஜா ராணி படத்துலே வர்ற சேரன் செங்குட்டுவன் நாடக வசன காட்சிதான் அது .கலைஞர் எழுதுனது.கஷ்டமான இலக்கிய வார்த்தைகள் அமைஞ்ச வசனகாட்சி அது. இப்படி ஒரே ஷாட்டுலே எடுத்த வசன காட்சியாகட்டும்,ஒரே ஷாட்டுலே எடுத்த பாடல் காட்சியாகட்டும் சிவாஜி நடிச்ச படத்துலேதான் ரிஸ்க் எடுத்து பண்ணியிருக்காங்க. சிவாஜியை வெச்சு எந்த ரிஸ்க்கும் எடுக்கலாம்னு டைரக்டர்கள் வெச்ச நம்பிக்கை தான் காரணம். ஒ...

சிவாஜி அப்படித்தான்

படம்
சிவாஜி தானே! அவர் அப்படித்தாம்பா .ஒண்ணும் சொல்ல முடியாது.பத்து படத்துலே நடிக்க வேண்டியதை ஒரு படத்துலேயே நடிச்சு முடிச்சுருவார். இதுலே இன்னும் ஏதாவது செய்யணுமா , பண்ணனுமான்னு வேற கேப்பார். இது மட்டுமா ..இன்னும் சில வேடிக்கையும் அவர் படங்களாலே நடக்கும்யா.. ஒரு படம் ஓடிட்டு இருக்கும். அது ஓடி கொஞ்ச நாள் கூட ஆகியிருக்காது. அடுத்த படம் தியேட்டர்லே வந்து உக்காந்துக்கும்.100 நாள் ஓடறதுக்குள்ளேயே மூணு படம் வந்துரும் .இதை என்னய்யா சொல்லறது. அவரென்ன மெஷினாப்பா... ரெண்டு மாசம் நடிக்க வேண்டிய படத்தை 13 நாள்லே நடிச்சுட்டு போயிட்டாரு. மெஷினா இருந்தா கூட கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கணும். புல் சார்ஜ் போட்ட பேட்டரி கணக்கா ஸ்விட்ச் ஆன் கணக்காவே வேலை ஓடிட்டு இருந்துச்சு. அவங்கவங்க பொழப்பை கவனிக்கவே இங்கே அவனவனுக்கு நேரமும் பத்தறதில்லே.கவனமும் இல்லே. இதுலே இவர் என்னடான்னா ,கூட நடிக்கறவங்களை கவனிச்சு ,இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு டீச்சிங் கிளாஸ் எடுப்பாராம். சம்பளம் வாங்காத மாஸ்டரா இருப்பார்.. இதெல்லாம் என்னாப்பா? நேரத்தையே நடுங்க வைக்கற விஷயமெல்லாம் தினம் தினம் நடக்கறதுதான்.கூட வேலை செய்யறவங்க துண்டை காணோம் து...

திருவள்ளுவர் சிலை - சிவாஜி

படம்
தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சிலைகளை அமைத்த தந்த தனிநபர் ஒருவர்  உண்டு என்றால் நடிகர்திலகம் சிவாஜியாகத்தான் இருப்பார்.எந்த ஊருக்கு சென்றாலும் ஏதாவது ஒரு சிலையை சிவாஜியவர்கள் திறந்து வைத்திருப்பார்.கட்டபொம்மன் பாரதியார்அம்பேத்கார் வீரசிவாஜி பசும்பொன் தேவர் வஉசி என இவர்களுக்கு மட்டுமல்லாது இன்னும் பல தலைவர்களின் சிலை அமைப்புகளுக்கு உதவி செய்தவர் சிவாஜி.ஒரு தனிநபர் இவ்வளவு சிலைகளை திறந்து வைத்திருக்கிறார்,சிலைகள் அமைக்க நிதியுதவி செய்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தியாகும்.சிவாஜி அவர்களின் நாட்டுப்பற்று , தேசத்தின் மேல் கொண்ட பக்தியே இதற்கு முழுமுதல் காரணமாகும்.பெருந்தலைவர் காமராஜரின் சிலைகளை அதிகமாக திறந்து வைத்தவரும் சிவாஜிதான். சென்னையில் கடற்கரை சாலையில் இருக்கும் திருவள்ளுவர் சிலை சிவாஜியின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட சிலையாகும். இந்த சிலை எப்போது எதனால் அமைக்கப்பட்டது என்பது பற்றி இனிமேல் பார்க்கலாம். 1968 ஆம் ஆண்டு இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்துவதாக அறிவித்தார் அண்ணா. கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு தமிழ்மொழிக்கு சிறப்பு செய்ய வேண்டி இந்த மாநாட்டை நடத்த...

மனைவியை வர்ணிக்கும்சிவாஜி 10 பாடல்கள்

படம்
மனைவியை வர்ணித்து சிவாஜி பாடிய டாப் 10 பாடல்கள்: காதலியை வர்ணிச்சு பாடற பாட்டுகள் தான் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே அதிகமா இருக்கு.அதோட ஒப்பிட்டா மனைவியை வர்ணிச்சு பாடப்பட்ட பாட்டுகள் குறைவுதான்.காதல் பாட்டுகள்ளே இளைமையும் உணர்ச்சியும் கலந்த ஒரு வேக உணர்ச்சி இருக்கும். மனைவியை வர்ணிச்சா கண்டிப்பா அது ஒரு பரிபூரண மன நிறைவா இருக்கும்.அதைவிட உரிமையும்  அதிகந்தான். மனைவியை பற்றி ஒருவர் சொன்னது: காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும்.  சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும். அந்த தின முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகும் முன்பு நீங்கள் கடைசியாக பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கி விட்டப் பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள்தான் உங்கள் முழு உலகம், நீங்கள்தான் அவளது முழு உலகம். கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆ...

தர்மம் எங்கே

படம்
தர்மம் எங்கே இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில '1972ன் திருஷ்டிப்பொட்டு'ன்னு செல்லப்பெயர் உண்டு. காரணம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரைக்கும்  நடிகர்திலகத்தின் வெற்றி தொடர்ந்தது (அதுலே பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நாலும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). இந்த 7 படங்கள்லே 72 ஆம் வருசம் நடுவுலே வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதுக்கு முதல் காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் செகண்ட் ஆப்லே ஓட்டை விழுந்த திரைக்கதை இதுதான் காரணம். கதாநாயகன் படம் முழுவதும் வில்லனோட  போராடி, கடைசியிலே அவன்கிட்டே இருந்து ஆட்சியை மீட்பது மாதிரி இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்.  ஆனால் இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் 'மாப்பிள்ளை - மை...

ஞானஒளி நாடகம் Vs திரைப்படம்

படம்
மேஜர் சுந்தரராஜன் நடித்த அதிரடி நாடகம் ஞானஒளி. மேஜரே டைரக்சன் செய்த நாடகம் இது.கதை வசனம் வியட்நாம் வீடு சுந்தரம். நாடகத்தை பார்த்த சிவாஜி நாடகத்தின் அதிரடி அட்டகாசத்தை பார்த்து வியந்து போனார்.நாடகத்தை பார்க்க ,பார்க்கவே ஆண்டனியாகவும் அருணாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.பிறகென்ன ஞானஒளி திரைப்படமாக நம்மை மிரட்சி அடைய வைத்தது.திரைப்பட தயாரிப்பை ஜேயார் மூவீசார் எடுத்துக் கொண்டனர். திரைப்படத்தில் இடம் பெற்ற  ஆண்டனியின் ஆரம்ப காதல் போர்ஷன் காட்சிகள் நாடகத்தில் இல்லை. திரைப்படத்துக்காக இணைக்கப்பட்ட காட்சிகள் அவை. நாடகத்தில் ஆண்டனியின் மகள் கல்லூரி படிப்பு முடிந்து தேவாலயத்தில் வந்து பாதரை சந்திக்கும் காட்சியில் இருந்து தான் ஆரம்பிக்கும்.திரைப்படத்தில் வரும் ஸ்ரீகாந்த் சாரதா காதல் காட்சிகள் ,பெட்டி மாற்றம்,ஆண்டனி அணியும் பேன்ட் சட்டை காட்சிகள் நாடகத்தில் இல்லை. திரைப்படத்தில் ஆண்டனி சவப்பெட்டி செய்யும் தொழிலாளியாக இருப்பார். நாடகத்தில் மேஜர் புதைகுழி தோண்டுபவர் ,ஊருக்கு சின்ன சின்ன  வேலைகள் செய்து தருபவராக நடித்திருப்பார்.இதற்கான காட்சிகள் எல்லாம் நாடகத்தில் இல்லை.சில வசனங்கள் மூலமாக த...

சௌகார் ஜானகி சர்ச்சை பேச்சு

படம்
அவன்தான் மனிதன் படத்துலே சிவாஜி ஒரு டயலாக் பேசுவார். என்னை சுத்தி இருக்கறவங்க எல்லாம் நல்லா இருக்கணும்.இதுதான் என்னோட ஆசைன்னு அந்த டயலாக் இருக்கும். இது படத்துக்காக எழுதுன வசனமா இருந்தாலும் ,சிவாஜியோட இயல்பான நிஜ குணத்துக்காக எழுதுன வசனம் தான்னு சொல்லணும். சிவாஜி இப்படி ஒரு எண்ணத்துலே வாழ்ந்துட்டு இருந்தாலும் பல நேரங்கள்லே பல பேரு சிவாஜிக்கு எதிராவே நடந்திருக்காங்க.தன்னை பத்தி சொல்லப்படற எந்த எதிர்மறை விமர்சனம் கருத்துக்களை சிவாஜி சட்டை செய்யாததும் பதில் சொல்லாததும் செய்தி பரவலுக்கு காரணமாகவும் அமைஞ்சடுது.பிரபலமா இருந்தாலே விமர்சனங்கள் வராமே இருக்காது. விமர்சனம் பண்றது தப்பில்லேன்னாலும் உண்மை என்னன்னு தெரியாமே விமர்சனம் பண்றதுதான் தப்பு. இந்த டைப் விமர்சனத்தைதான் சௌகார்ஜானகியும் சிவாஜியை பத்தி  ஒரு சமயம் பண்ணியிருக்கார். 1981 ஆம் வருஷம் நடந்த விஷயம் இது. 1981 ஆம் வருஷம் கல்கி இதழ்லே சௌகார்ஜானகியோட பேட்டி ஒண்ணு வந்துச்சு.அந்த பேட்டிலே சிவாஜியோட சகாப்தம் முடிஞ்சு போச்சுன்னு ஒரு கருத்தை சொல்லி இருந்தார் சௌகார்ஜானகி. இது எல்லாருக்கும் அதிர்ச்சியா இருந்துச்சு.சிவாஜியை பத்தி நல்லா தெரிஞ்...

சிவாஜி வாங்கிய சொத்துக்கள்

படம்
பரராசக்தி படத்தில சிவாஜி நடிச்சுட்டு இருந்த  போதும் சரி ,அந்த படம் ரிலிசாகி சிவாஜி உச்ச நிலைக்கு வந்த போதும் சரி  ஒரு வாடகை  வீட்டில் தான் குடி இருந்தார். அந்த வீட்டுல தான் சிவாஜி ஒரே குடும்பமா வசிச்சுட்டு இருந்தார். பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ,கூட நடித்த விகே ராமசாமியிடம் சிவாஜி சொன்ன ஒரு விஷயம்,இந்த படம் மட்டும் வெளி வரட்டும். பின்பு திரையுலகமே என்னை தேடி வரும் என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார். சிவாஜி திரைத்துறையில் நிலை பெற்று இரண்டு மூன்று வருசம் ஆகியும் சொந்த வீடு வாங்கற வாய்ப்பு வரலை. கலைவாணர் NS.கிருஷ்ணன் சிவாஜியோட ரெண்டாவது படமான பணம் படத்தை டைரக்சன் செஞ்சார். கலைவாணருக்கு ராயப்பேட்டை பெசண்ட்நகர்லே ஒரு வீடு இருந்துச்சு.அந்த வீட்டை சிவாஜி வாங்கற வாய்ப்பு வந்துச்சு. நிறைய தானங்கள் செஞ்சதாலும், ஒரு கொலை வழக்கில சிக்கி சிறைக்கு போனதாலும் சினிமாவில் நடிக்கறதை நிறுத்தியதாலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கடன் சுமை ஏற்பட்டுச்சு . அந்த சமயம், சென்னை ராயப்பேட்டை சண்முகமுதலி தெருவில் இருந்த தன்னோட  வீட்டை வித்துடலாம்னு என்.எஸ்.கிருஷ்ணன் முடிவெடுத்தார்.இந...

1968 ஆம் வருட சிவாஜி படங்கள்

படம்
திருவிளையாடல் படத்துலே கடைசி எபிசோட்லே  விறகுவெட்டியா நடிச்ச சிவாஜி ஒரு வசனம் பேசுவார் . ஒரு விறகை எரிச்சா சந்தனவாசனை , இன்னொரு விறகை எரிச்சா  சாம்பிராணி வாசனை, அடுத்த விறகை எரிச்சா ஜவ்வாது வாசனை வரும்பார். இப்ப எதுக்கு இந்த வசனத்தை நான் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம். 1968 ஆம் வருஷம் வந்த சிவாஜி படங்களை நெனச்சா இந்த வசனம் தான் ஞாபகத்துக்கு வருது. ஒரு படம் புராணக்கதையை சொன்னது. அடுத்த படம் சரித்திரத்தை கொண்டது. மூணாவது படம் குடும்ப சென்டிமென்ட். அடுத்ததை பாத்தா அது கலையை பத்தி. அடுத்தது ஒரு மனுசனோட வைராக்யத்தை பத்தி. அடுத்ததா இந்த சமூகத்தோட அவலத்தை பத்தி. கடைசியா ஒரு பெரிய மனுசனோட வாழ்க்கை பதிவையும் சொன்ன படம்.  வேற வேற ஊருக்கு போற பஸ்ஸோட வழித்தடம் மாதிரி வேற வேற ரூட்டுலே போற கதையமைப்பை கொண்ட படங்கள்.புது ஊரு புது அனுபவம்  மாதிரி எல்லாமே வேற வேற வெரைட்டி மீல்ஸ் படங்கள்.ஒவ்வொரு சாப்பாடு,ஒவ்வொரு ருசி. ரசிச்சி ரசிச்சு சாப்பிட வெச்சார் சிவாஜி. 1967 லே கடைசி படமா ஊட்டிலே போயி ஜில்லுன்னு ஊட்டி வரை உறவு படத்துலே நடிச்சுட்டு  1968 லே நெத்திலே நாமம்,பூணூல் போட்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற