இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

அம்பென பாய்ந்த கலைஞன்..சிவாஜி

படம்
 சிவாஜி ... ஏழு கலர் தான் அடிப்படை.பக்கத்துல பாக்கையில. எல்லாக் கலரும் ஜோராத்தான் இருக்கும்.ஆனா தூரமா போனா மஞ்சள் கலருதா மின்னும்.உதாரணமா இருட்டுல ஆகாசத்த பாருங்க.நட்சத்திரம் எல்லாம் மஞ்சள் கலருல பளீர்னு இருக்கும்.அது மாதிரிதான் சிவாஜி படங்களும்.காலமாக ஆக ரொம்ப வியப்பா இருக்கும். நாலு தலைமுறைக்கு முன்னால நடிக்க வந்தாரு.அப்ப இருந்தவங்களும் ரசிச்சாங்க. ரசிகனா மாறுனாங்க.இப்பவும் நாலு தலைமுறை தாண்டியாச்சு. இப்ப இருக்கற சின்ன பசங்க கூட சிவாஜி நடிப்புல மயங்கறாங்க.5 ஆம் வகுப்பு படிக்கிற பையன் சிவாஜியோட 300 படத்த அப்படியே சொல்லுறான்.மேடையில, டிவில எல்லாம்  சிவாஜி செஞ்ச வேஷத்த, நடிப்பை எல்லாம் சின்ன பசங்க செய்யறாங்க.இதெல்லாம் சில உதாரணங்கதான். தனுர் வேதமானது அசாத்திய வில் வித்தையை சொல்லறது.யுத்த வித்தைகளில் ரொம்ப  மேலானது.குறிப்பிட்ட இலக்கை வீழ்த்த துணை புரியறது .வில் வித்தையில துரோணாச்சாரியாரை அடிச்சுக்க யாருமில்ல.அந்த துரோணாச்சாரியார் மாதிரித்தான் நடிப்புல சிவாஜி. ஒரு கேரக்டரை கொடுத்து நடிக்கச் சொன்னா அவர் நடிக்கறப்போ அந்த நடிப்போட இலக்கு குறி தவறாத தனுர் வித்தை போலத்தான். தமிழ்...

புனர் ஜென்மம்

படம்
புனர் ஜென்மம் இந்தப் படத்துக்கு முன் வெளியான நடிகர் திலகத்தின் படம் பாவமன்னிப்பு. புனர் ஜென்மம் படத்தை அடுத்து நடிகர் திலகம் நடித்து வெளியான படம் பாசமலர் . பாவமன்னிப்பு ,பாசமலர் இரண்டுக்கும் இடையில் வெளியான படம் தான் புனர்ஜென்மம். இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் உலகின் மகோன்னத நடிகராக இருந்தார் நடிகர்திலகம். உலகத்தின் பாதியைக் கொண்ட ஆசிய ஐரோப்பா கண்டங்களின் மிகச் சிறந்த விருதை பெற்றிருந்தார் அந்த உலக மகா நடிகன். இதற்கடுத்த காலகட்டங்களில் தான் நடிகர்திலகத்திடம் சொல்லப்பட்ட கதை புனர்ஜென்மம். எந்த தைரியத்தில் நடிகர் திலகத்திடம் கதை சொல்லி இருப்பார்கள்?  கதாசிரியர் நடிகர்திலகத்திடம் கதை சொன்ன விதத்தை சற்று ஊகித்து பார்க்கலாம் . கதை விவாதம்: நடிகர்திலகம், கதாசிரியர் (புனர்ஜென்மம் குழு) நடிகர்திலகம் :என்ன புதுசா ஒரு கதை இருக்குன்னீங்களே! கதையை சொல்லுங்க. கதாசிரியர்: படம் ஆரம்பிக்குது.மழை கொட்டி தள்ளுது.அப்ப ஒரு தெருவை காட்டறோம்.அந்த தெருவுல ,மழைத்தண்ணியில ஒரு உருவம் படுத்திருக்குது.அளவுக்கு அதிகமான. குடி .போதை. எழுந்திருக்கவே முடியல.மழை வேற கொட்டித் தள்ளுது.அந்த மழையிலும் தெளியாத குடி ...

நடிகர் திலகத்தின் 1983 ஆம் ஆண்டு சாதனைகள்

படம்
நடிகர் திலகத்தின் 1983 ஆம் ஆண்டு சாதனைகள்.... நடிகர்திலகம்  சிவாஜிகணேசன் அவர்கள் ஒரே வருடத்தில்  இரண்டு வெள்ளி விழா படங்களையும்  மூன்று நூறு நாள் வெற்றி  விழா படங்களையும் கொடுத்து சாதனை புரிந்திருக்கிறார்.அதிகம் தெரியப்படாத நடிகர் திலகத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று.இந்த சாதனையானது நடிகர் திலகம் தன் இளமைப் பருவத்தில் நடித்து வெளியிட்ட படங்களில் இருந்து அல்ல .இப்போது நான் குறிப்பிடும் இந்த சாதனையானது நடிகர் திலகம் தன்னுடைய 55 ஆவது வயதில் செய்த சாதனையை . நடிகர் திலகம் இந்த சாதனையை செய்த ஆண்டு 1983. 1983 ஆம் ஆண்டு நடிகர் திலகம் நடித்த வெளியான படங்கள் மொத்தமே ஏழு தான்.இந்த ஏழு படங்களிலும் ஒன்று தெலுங்கு படம். மற்ற ஆறு படங்கள் தான் தமிழ் படங்கள். இந்த 1983 ஆம் ஆண்டு ஆண்டின் தொடக்கமாக முதலில் வெளியான படம் தெலுங்கு படம் . படத்தின் பெயர் பெஜவாடா பெப்புலி.வெளியான தேதி  14. 1 .1983 . இதற்கு அடுத்ததாக வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படம் நீதிபதி .வெளியான தேதி  26 1 1983.இந்த ஆண்டில் தொடக்கத்தில் வெளியான முதல் படத்திற்கும் இந்த இரண்டாவது படத்துக்கும் இடைப்பட்ட நாட்கள் ...

சிவாஜிக்காக TMS சிரமப்பட்டு பாடிய பாடல்கள்

படம்
டி எம் எஸ் ,சிவாஜிக்காக கஷ்டப்பட்டு பாடிய பாடல்கள் ... பராசக்தி படம் வந்ததிலிருந்து தூக்கு தூக்கி படம் வரைக்கும் சிவாஜிக்கு எத்தனையோ பேர் பாடி இருப்பார்கள்.. எல்லா பாடகர் குரலையும் தன்னுடைய  நடிப்பால்  மேட்ச் செய்து  இருப்பார் சிவாஜி .தூக்கு தூக்கி படத்துக்கு பின்னால் சிவாஜிக்கு ,சிவாஜியே  பாடுவது மாதிரி ஒரு வாய்ஸ் கிடைத்தது.அதுதான்  டி எம் எஸ் குரல். டிஎம்எஸ் இன் குரல் நல்ல கம்பீரமான குரல் என்றாலும்  ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி பாடி இருப்பார் . சிவாஜியை தவிர மற்ற நடிகர்களுக்கு பாடிய டிஎம்எஸ்ஸின் குரல் ஆனது அதிகம் கம்பீரத்தை காட்டாத ஒரு மிருது தன்மையுடன் இருக்கும். சிவாஜிக்கும் TMS எத்தனையோ மிருதுவான சாந்தமான பாடல்களை பாடி இருந்தார்.சிவாஜிக்கு பாடிய சில கடினமான பாடல்களை  அடிவயிற்றில் இருந்து காற்றை நெஞ்சுக்கு கொண்டு வந்து அடித்தொண்டையிலிருந்து கஷ்டப்பட்டு பாடி இருப்பார். அவ்வாறு சிவாஜிக்கு பாடிய சில கடினமான பாடல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வசந்த மாளிகை படத்தில் அவர் பாடிய" யாருக்காக இது யாருக்காக "என்ற பாடலை தியேட்டரில்...

பொள்ளாச்சியும் சிவாஜியும்

படம்
சிவாஜியும் பொள்ளாச்சியும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பொள்ளாச்சிக்கும் உறவு முறை ஆரம்பத்தில் அது நட்பு முறையாகவும் ,அதுவே பின் உறவு முறையாகவும் ஆனது. எத்தனையோ வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்த மனுஷன், தமிழ்நாட்டுல அவருடைய காலடி படாத இடமே இல்லை, இந்தியாவோட எல்லா முக்கிய பிரபல நகரங்களுக்கும் போயிட்டு வந்தவர் நடிகர்திலகம்.இப்படி சிவாஜி பற்றின உண்மைகள் இருந்தாலும் சிவாஜிக்கு ரொம்ப பிடிச்ச இடம் உலகத்திலேயே சேர்த்து மடை தான் .சிவாஜி எங்க போனாலும் நடிகர் திலகம் பிரமிப்பா எல்லோரும் பார்க்கிறார்கள். பொள்ளாச்சிக்கு போனா எளிமையான மனுசனா இயல்பா இருக்கிற ஒரு சந்தோசத்தை அங்க அங்க கிடைக்குதுன்னு ரொம்ப பீல் பண்ணினாரு. 90களுக்கு பின்னால் தான் பொள்ளாச்சிக்கு அடிக்கடி சிவாஜி வந்துட்டு போயிட்டு இருந்தார்.  சிவாஜி பொள்ளாச்சி வந்தார்னா கோயம்புத்தூர் ஐஏபி ஸ்டுடியோவில் இருந்து கார் அனுப்புவாங்க .கோயமுத்தூரில் இருந்து  வேட்டைக்காரன் புதூர் வரைக்கும் கார்ல போவாரு.அவர் அடிக்கடி கார்ல போறத பாத்தவங்க எல்லாரும் சொல்லுவாங்க .அப்போ தலையில ஒரு துண்டை கட்டிட்டு சாதாரணமா கார்ல ஒக்காந்து போவார் என்று சொல்லுவாங்க....

ஒப்பீடற்ற சிவாஜி படங்கள்

படம்
நடிப்பு ,வேடங்கள், திரைப்படங்கள் ஒரு கலைஞனால் உருவாக்கப்படும் போது அது சமூகத்திற்க்கு என்ன பயன் அளிக்கும் ,அளிக்கப்படவேண்டும் ,என்பதுதான் முக்கியம்.அதிக நாட்கள் ஓடியது ,சாதனை செய்தது  என்பதை  சில படங்களை வைத்து சமூகத்திற்கு உபயோகமான பயன் தந்த, தந்து கொண்டிருக்கக்கூடிய படங்களுடன் ஒப்பிடக்கூடாது.தமிழில் ஏராளமான ஓடிய படங்களை பார்த்தோமானால் அது வெறும் குப்பைகளாக உள்ளது.ஒரு படத்திற்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு வியாபாரமும் ,லாபமும் கண்டிப்பாக அவசியம், தேவையும்  தான். இந்த வரைமுறைகளில் உருவானவை தான் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்.நடிகர்திலகத்தின் படங்களை வைத்தே சில விஷயங்களை பார்க்கலாம். உத்தமபுத்திரன் தெய்வமகன் சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் கௌரவம் .உதாரணத்திற்காக இந்த சில படங்கள்.தெய்வமகன் தில்லானா மோகனாம்பாள் படங்களின் பேச்சு வரும் போதெல்லாம் இந்த படங்களுக்கு இணையான படங்களை யாரும் சொல்ல முடியாது.வெள்ளிவிழா , வருடக்கணக்கில் ஓடிய படங்கள் தமிழில் நிறைய உண்டு.அந்த படங்கள் எல்லாம் இந்த படத்திற்கு இணையாகுமா ?இதில்  சிவாஜி ரசிகர்களின் கருத்துகளை ...

சிவாஜி -எதச் சொல்ல எத விட....

படம்
உச்சி பூரா உள்ளம் பூரா குளிச்சியா இருக்குதய்யா உன் நடிப்ப பாக்கையிலே வெச்ச பார்வைய  வெலக்கிடத்தான் தோணலய்யா உன் முகத்த பாக்கையிலே! நீ  பேசினாக்க நடந்தாக்க அத பாத்தாக்க நெஞ்சுக்குள்ளே ரத்தமா பாயுதய்யா  உன்ன பத்தி பேசத்தா உதடெல்லாம் துடிக்குதய்யா கொஞ்சமா செஞ்சீரு நீரெல்லாம் கொள்ளாம கொள்ளாம நெஞ்செல்லாம் திணறுதய்யா உன்னை மட்டுந்தா பாக்க வெச்சே அத கொள்கையா மாத்த வெச்சே! கற்பூரமா பத்திக்குது கண்ணெல்லாம் சொக்குது காலமெல்லாம் கூட வந்து கவலையெல்லாம் மறக்க வெச்சே எத பேச எப்படிப் பேச எடுத்துச் சொன்னா அம்புட்டு எழுத்தும் பத்தாதே! ரெண்டாயிரம் வருச சோழன ரெண்டு மணியிலே மறக்க வெச்சயே நூறு பேரு பாரதத்துல  ஒத்தையாளு கர்ணனைத்தா மனசுல நிக்க வெச்சேயே பாஞ்சால சிங்கத்த பாருங்கன்னு பாருக்கெல்லம் புரிய வெச்சயே  சிவனே என் சிவனேன்னு கையெடுத்து கும்பிட்டாக்க உன் முகத்தை நிலைக்க வெச்சயே  நீ வந்து என்பது வருஷமாச்சு எல்லாமே உன்னாலே மாறிப் போச்சு  ஓயாம உழச்சு ஓடா தேஞ்சேம்பாங்க ஆனா ஓயாம உழச்சு மலையா  வளந்தவனே மலையா வளந்தாலும்-அத பெரிசா நெனக்கலியே  அந்த குணத்துலே  உன்ன ம...

மக்களை பெற்ற மகராசி -செங்கோடனின் கொங்குத்தமிழ்

படம்
புதிய பதிவு.. மக்களை பெற்ற மகராசி... பேச்சுத் தமிழில் கொங்கு பாஷைக்கு தனி மரியாதை உண்டு.மற்ற வட்டார பாஷைகளை காட்டிலும் கொங்கு பாஷையில் மரியாதை அதிகம் கொட்டும்.தமிழ் திரைப்படங்களில் வட்டார பாஷைகளை முழுதும் காட்டிய படங்கள் விரல் எண்ணிக்கையில்தான்.கொங்கு பாஷையை சிலகாட்சிகள் தான் சில படங்கள் காட்டியிருந்தன.முழுவதும் காட்டிய படமாகவும், முத்தாய்ப்பான படமாகவும் மக்களைப் பெற்ற மகராசியை  சொல்லலாம். செந்தமிழ் வசனங்கள் , வீர வசனங்கள்  கர்ஜனை புரிந்த வசனங்கள், அடுக்கு மொழி வசனங்களில் மிரட்டிய நடிகர்திலகம் கொங்கு பாஷையையும் விட்டு வைக்கவில்லை.செந்தமிழ் வசனங்களையே பேசி வரும் எவருக்கும் வட்டார பாஷை சறுக்கவே செய்யும்.அந்த சறுக்கலில் விழாமலும், ஜெயித்தும் காட்டியவர் நடிகர்திலகம்.மக்களைப் பெற்ற மகராசி கொங்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த படம். செங்கோடன் என்ற பாத்திரத்தில் நடிகர்திலகம்.இந்த பாத்திரத்தின் தன்மையை கொண்ட இளைஞர்களை  இன்றும் கொங்கு மண்டல விவசாயம் செய்வோரிடம் காணலாம். அதிகம் படிக்காத, மூர்க்கத்தனமான வீரம்,  உறவுகளிடம் தோழமை, நேர்மையான உழைப்பு கலந்த குணங்களை கொண்டது தான் இப் பாத்த...

தமிழ் சினிமாவின் பொற்காலம்

படம்
தமிழ் சினிமாவின் பொற்காலம்... 1000 கோடி என்ன?  5000கோடி என்ன ?எத்தனையோ  கோடிகளில் எந்த சரித்திர படமானாலும் இனி எடுக்கலாம்.ஆனால் 100 வருடங்கள் ஆனாலும் ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதலில்  பேசப்படுவான். அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை  ஆன்ட்ராட்ய்டு காலத்தில் என்ன? அடுத்த நூற்றாண்டில் தேடினாலும் பாசமலர் தான்  முதலில் வரும். உனக்கேன் அக்கறை? என்று ஆயிரம் பேனா முனைகள் சமுக சாடல்களை எழுதியிருந்தாலும் ,இனி எழுதினாலும் அதைப் பேசிய குணசேகரன் கதாபாத்திரம் தான் மின்னலாய் தெரியும். ஒரு படத்தின் 90 வேடங்களாயினும், அதை ஒருவரே ஏற்று செய்தாலும், ஒன்பது வேட  நவராத்திரி நடிப்புக்கு  ஈடு செய்ய எவராலும் முடியாது. அடுத்த நூற்றாண்டு அதி நவீன கணிணியும் , தெய்வமகனை  ஆராய்ச்சி செய்தால் , அது கூட " ERROR " என்று தான் காட்டும். இப்போது பிறக்கும் ஒரு குழந்தை அதன் 100 வது வயதில் தேசபக்தி காவியங்களை சொல்ல விரும்பினால் அப்போதும் நடிகர்திலகத்தின் படங்களைத்தான் அது  சொல்ல வேண்டியது வரும். எந்த வரிசையில் படங்கள் வந்தாலும் ஓர் வரிசையில் வந்த நடிகர்திலகத்தின்  "பா " வரிசை...

சிவாஜி சொந்த முடியுடன் நடித்த படங்கள்

படம்
உடலுக்கு உச்சம் தலை. தலைக்கு உச்சம் கேசம். அழகான அடர்த்தியான கேசம் கொண்டவர் நடிகர்திலகம். இறுதிவரை உதிராத நடிப்பு கொண்ட நடிகர் திலகத்துக்கு கடைசி வரை உதிராத முடியும் கூட. பாத்திரங்களுக்கு வித்தியாசமான ஒப்பனைகள் வேண்டும் என்பதற்காக அவர் நிறைய படங்களில் விக் அணிந்து நடித்தார்.நடிகர் திலகம்  'விக் 'அணியாமல் சொந்த முடியுடன் நடித்த சில திரைப்படங்களை பார்க்கும் போது  இவ்வளவு அழகான தலைக் கேசத்தை கொண்ட நடிகர்திலகம்  இவர் இப்படியே நடித்திருக்கலாமே பல படங்களில் என்ற ஆசை பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்தது. விக் வைத்து நடிக்கும் பழக்கம் அதிகமாக 1970 களுக்குப் பின் தான் அதிகம் இருந்தது.அதற்கு முந்தைய கால கட்டங்களில் விக் வைத்து நடித்திருந்தாலும் நடிகர்திலகம் அதற்கேற்ற வித்தியாசமான கதா பாத்திரங்கள், புராண சரித்திர படங்களுக்குத் தான் வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்கு உபயோகப்படுத்தினார். நடிகர் திலகம் ' விக் ' அணியாமல் தன் சொந்த முடியுடன் நடித்த திரைப்படங்கள் : நடிகர்திலகம் தான் நடித்த முதல் படத்திலேயே தன் ஒரிஜினல் முடியுடன் தான் நடித்தார்.அது படத்திற்கும் நன்றாக பொருந்தி விட்டது. அதற்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற