இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் முதல் 10 வருட சாதனைகள்

சிவாஜி கணேசன் முதல் 100 படங்களில் செய்த சாதனைகள். சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி .வெளிவந்த ஆண்டு 1952. 100;வது படமான நவராத்திரி வெளிவந்த வருடம் 1964.  சிவாஜி கணேசன் முதல் 100 படங்களை12 வருடங்களில் நடித்து முடித்தார். தமிழ் சினிமா திரையுலகில் முதல் நூறு படங்களை பன்னிரண்டு வருடங்களில் நடித்து முடித்த முதல் நடிகர் சிவாஜி கணேசன் தான். 1952 ஆம் வருடம் நடிகர் திலகம் நடித்த வெளிவந்த படங்கள் இரண்டு .முதல் படமே வருடக் கடைசி அக்டோபர் மாதத்தில் தான் வெளியானது. மீதம் 98 படங்களை 11 வருடங்களில் நடித்து முடித்தார். வருடத்திற்கு சராசரியாக எட்டு படங்களில் நடித்து சாதனை புரிந்திருக்கிறார் சிவாஜி கணேசன். இந்த நூறு படங்களில் வெள்ளிவிழா ஓடிய திரைப்படங்கள் ; பராசக்தி சம்பூர்ண ராமாயணம் வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை இரும்புத்திரை பாவ மன்னிப்பு  பாசமலர்   100 படங்களில் நடிகர்திலகம் நடித்து வெள்ளி விழா ஓடிய படங்கள் ஏழு.. 100 நாள் ஓடிய திரைப்படங்கள் : திரும்பிப் பார் ,மனோகரா ,கல்யாணம் பண்ணியும்      ,,"பிரம்மச்சாரி ,தூக்குத்தூக்கி ,எதிர்பாராதது, காவேரி ,மங்கையர்...

நான் பெற்ற செல்வம் VS திருவிளையாடல்

திருவிளையாடல் படம் பத்தி பேச ஆரம்பிச்சாலே சிவன் நக்கீரன் தருமி காட்சிகள் தான் எல்லோருடைய நினைவுக்கும் வரும்.எப்படி எடுத்திருக்காங்க. இந்த காட்சியை, அப்பிடீன்னு ஒரு வியப்பு யாருக்கும் வராம போகாது.அந்த காட்சியோட வசனங்களை சொல்லாத ஆளுகளும் இருக்க முடியாது.திருவிளையாடல் படத்துல சிவனாக சிவாஜியும் தருமியாக நாகேசும் அதை ஒரு பகுதியாக செஞ்சிருப்பாங்க.அந்த காட்சியோட  அடுத்த பகுதியா நக்கீரனாக  ஏபி நாகராஜனும் சிவனா சிவாஜியும் செஞ்சு இருப்பாங்க .இந்த காட்சியில் வரும் ஒவ்வொரு வசனமும் தமிழ் மக்களுக்கு  மனசுல பதிஞ்சு இருக்கும். இந்த காட்சி  இப்படி சிறப்பாக அமைஞ்சதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.இந்த  காட்சி  ஏற்கனவே   நான் பெற்ற செல்வம் படத்துலே காட்சிகளாக எடுத்திருப்பாங்க .இந்த  நக்கீரன் சிவன் தருமி காட்சிகள் எல்லாம் ஏற்கனவே ஒரு படத்துல வந்திருக்கா அப்படிங்கறது பல பேருக்கு தெரியாது. நான் பெற்ற செல்வம் படத்துல இந்தக் காட்சிகளை அப்படியே அமைச்சு இருப்பார் ஏபி நாகராஜன் .அந்தப் படத்துல வர்ற சில வசனங்கள கொஞ்சம் மாத்தி, இன்னும் கொஞ்சம் அற்புதமான வார்த்தைகளை போட்டு த...

சிவாஜியின் பிறப்பு

சிவாஜியை ஏன் அவதரிக்க வைத்தான்  இறைவன்? அதுவும் தமிழகத்தில் .. ஏன் ஏன் ஏன் ? தமிழகம் சித்தர்கள் விளையாடிய பூமி. அதிகமான மகான்கள் அவதரித்த பூமி .. ஏராளமான அடியார்கள் நடமாடிய பூமி .. வீரத்தோடு தியாகத்தையும் கொண்ட மன்னர்கள் ஆண்ட பூமி ... பிற தேசத்து மக்களும் சுதந்திரமாக உலாவிய பூமி ... குன்றாத  இயற்கை வளங்களும், வற்றாத ஜீவ நதிகளும், செல்வத்தைக் கொட்டும் நில தனங்களும் , பொய்க்காத பூ மழையும் , கொண்டது தான் தமிழக பூமி .. நிறைவர  குறைவற்ற அமைந்த தமிழக பூமிக்கு, அதில் வாழும் மக்களுக்கு அதில் ஒரு குறை வைக்கலாமோ? அதற்காகவே படைக்கப்பட்டவன் தான் நெற்றி பொட்டாய் வந்த திலகமான  சிவாஜி ... கடவுளர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஓவியங்களாய் பார்த்ததுண்டு உணர்வுகளால் தெரிந்தது உண்டு .. சிலைகளாய் கண்டதுண்டு .. சிறுமதியில் பரவசமாய் அறிந்ததுண்டு.. ஓர் உயிர் அசைவாய், கண் பார்க்க ஓர் உருவ அசைவாய் கண் பார்க்க முடியுமா கடவுளின் நிஜத்தை?  என ஏங்காத மனிதர் உண்டோ  ? எப்படித்தான் காண முடியுமோ கடவுளின் சுய ரூபத்தை? சிவனென்ன?   திருமால் என்ன?  முருகனென்ன? எத்தனை கடவுள்கள்? எப்படித...

சிவாஜியின் டிஜிட்டல் திரைப்படங்கள்

படம்
நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வெளியீட்டு திரைப்படங்கள் .. முதல் வெளியீட்டிலும் மறு வெளியீட்டிலும்... பழைய தமிழ் படங்களை புதிய டிஜிட்டல் முறையில் மெருகேற்றி வெளியிடும் முறை 2012 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்று சொல்லலாம். அப்படி டிஜிட்டல் வெளியிட்டில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் கர்ணன் ஆகும். இந்தப் படம் அதிக லாபத்தை விநியோகஸ்தருக்கு சம்பாதித்து கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியைப் பார்த்து பல தமிழ் படங்கள் டிஜிட்டல் முறையில் மெருகேற்றி வெளிவர தொடங்கின.டிஜிட்டல் படங்களுக்கு அடித்தளமாகவும் முன்னோடியாகவும் அமைந்தது கர்ணன் திரைப்படம் .. கர்ணன் , பாசமலர் , வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜபார்ட் ரங்கதுரை , சிவகாமியின் செல்வன்,  ராஜா,  வியட்நாம் வீடு,  திருவிளையாடல்,  வசந்த மாளிகை,  அவன் தான் மனிதன்,  முதல் மரியாதை  ஆகிய படங்கள் புதிய படங்களை விட நல்ல வசூலை அள்ளிக் கொடுத்தது... கர்ணன்.. கர்ணன் 1964 ஆம் ஆண்டு வெளியான படம் ஆகும். படம் வெளியான சமயத்தில் நான்கு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் கர்ணன். முதன் முதலாக டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீடு...

காலம் மாறலாம், சிவாஜியின் கௌரவம் மாறுமா?

படம்
காலம் மாறலாம்  சிவாஜியின் கௌரவம் மாறுமா? எத்தனை காலம் ஆனாலும் எத்தனை நடிப்பு வந்தாலும் அத்தனை அடியும் முடியும் அவர் கொடுத்ததில் தானே? காலம் மாறலாம்  சிவாஜியின் கௌரவம் மாறுமா?  எங்கே என்று நடிப்பை எங்கே என்று தேடதேட அது ஊற்றாய் காட்டுமே  பார்க்க பார்க்க அதை பார்க்க பார்க்க நெஞ்சம் பூவாய் மலருமே  காலம் மாறலாம் சிவாஜியின் கௌரவம் மாறுமா? திலகமெல்லாம் நெற்றியில் இட்ட திலகமெல்லாம் வட்டப் பொட்டாக முகத்தில் வட்டப் பொட்டாக பொலிவாக ஒரு சிறப்பாகுமே  நடிப்புக்கெல்லாம் அவர் தான் திலகமே  அவர் போல் இல்லை எவருமே  காலம் மாறலாம்  சிவாஜியின் கௌரவம் மாறுமா  நடிப்பினிலே  சிவாஜியின் நடிப்பினிலே வேடத்திலே போட்ட வேடத்திலே  நெஞ்சத்திலே மக்கள் நெஞ்சத்திலே  மறக்குமா உயிருள்ளவரை மறக்குமா  காலம் மாறலாம் சிவாஜியின் கௌரவம் மாறுமா?  கொடுத்ததெல்லாம் அவர் கொடுத்ததெல்லாம் அது ஓர் உயர்ந்த வரமே பார்த்தவருக்கு அதை பார்த்தவருக்கு அது ஓர் பிச்சை வரமே எல்லாம் வல்ல கடவுளே அவரில் கலந்தது தெளிவுடனே  காலம் மாறலாம் சிவாஜியின் கௌரவம் மாறுமா?...

நம்ப முடியாத சிவாஜி பட வெளியீடுகள்

படம்
நம்ப முடியாத சிவாஜி பட வெளியீடுகள்.. நடிகர் திலகத்தைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசும் போது அவர் கர்ணனாக நடித்தார்,கட்டபொம்மன் ஆக நடித்தார், கப்பலோட்டிய தமிழனாக நடித்தார் என்று சொல்லி விடுவார்கள்.   ஆனால் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களும் எப்படிப்பட்டது, ஒரு படத்துக்கும் அடுத்தபடியாக வெளியாகும் படத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் காட்டி நடித்துள்ளார் என்பதை பார்க்கும்போது அது ஆச்சரியமாக மட்டுமல்ல, அதிசயமாகவும் உள்ளது. அது பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 3.2.56 இல் வெளிவந்தது தெனாலிராமன் திரைப்படம்.  17 .2. 56-ல் வெளியான படம் பெண்ணின் பெருமை .தெனாலிராமன் ஒரு நகைச்சுவை விதூஷகன்.அதே சமயம் ஒரு ராஜதந்திரியும் கூட. நகைச்சுவை கலந்த இந்த தெனாலிராமன் பாத்திரத்தை செய்த நடிகர் திலகத்தின் அடுத்த படத்தைப் பார்த்தால் அது பெரிய பிரமிப்பை உண்டாக்கும் .ஆமாம், நடிகர் திலகம் தெனாலிராமனுக்கு அடுத்து செய்த படம் பெண்ணின் பெருமை. இந்தப் பெண்ணின் பெருமை படத்தில் நடிகர் திலகம் ஏற்ற வேடம் கிட்டத்தட்ட வில்லன் வேடமே.கூட பிறந்த சகோதரனையே துன்புறுத்தும் தம்பியாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன் ...

அம்பென பாய்ந்த கலைஞன்..சிவாஜி

படம்
 சிவாஜி ... ஏழு கலர் தான் அடிப்படை.பக்கத்துல பாக்கையில. எல்லாக் கலரும் ஜோராத்தான் இருக்கும்.ஆனா தூரமா போனா மஞ்சள் கலருதா மின்னும்.உதாரணமா இருட்டுல ஆகாசத்த பாருங்க.நட்சத்திரம் எல்லாம் மஞ்சள் கலருல பளீர்னு இருக்கும்.அது மாதிரிதான் சிவாஜி படங்களும்.காலமாக ஆக ரொம்ப வியப்பா இருக்கும். நாலு தலைமுறைக்கு முன்னால நடிக்க வந்தாரு.அப்ப இருந்தவங்களும் ரசிச்சாங்க. ரசிகனா மாறுனாங்க.இப்பவும் நாலு தலைமுறை தாண்டியாச்சு. இப்ப இருக்கற சின்ன பசங்க கூட சிவாஜி நடிப்புல மயங்கறாங்க.5 ஆம் வகுப்பு படிக்கிற பையன் சிவாஜியோட 300 படத்த அப்படியே சொல்லுறான்.மேடையில, டிவில எல்லாம்  சிவாஜி செஞ்ச வேஷத்த, நடிப்பை எல்லாம் சின்ன பசங்க செய்யறாங்க.இதெல்லாம் சில உதாரணங்கதான். தனுர் வேதமானது அசாத்திய வில் வித்தையை சொல்லறது.யுத்த வித்தைகளில் ரொம்ப  மேலானது.குறிப்பிட்ட இலக்கை வீழ்த்த துணை புரியறது .வில் வித்தையில துரோணாச்சாரியாரை அடிச்சுக்க யாருமில்ல.அந்த துரோணாச்சாரியார் மாதிரித்தான் நடிப்புல சிவாஜி. ஒரு கேரக்டரை கொடுத்து நடிக்கச் சொன்னா அவர் நடிக்கறப்போ அந்த நடிப்போட இலக்கு குறி தவறாத தனுர் வித்தை போலத்தான். தமிழ்...

புனர் ஜென்மம்

படம்
புனர் ஜென்மம் இந்தப் படத்துக்கு முன் வெளியான நடிகர் திலகத்தின் படம் பாவமன்னிப்பு. புனர் ஜென்மம் படத்தை அடுத்து நடிகர் திலகம் நடித்து வெளியான படம் பாசமலர் . பாவமன்னிப்பு ,பாசமலர் இரண்டுக்கும் இடையில் வெளியான படம் தான் புனர்ஜென்மம். இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் உலகின் மகோன்னத நடிகராக இருந்தார் நடிகர்திலகம். உலகத்தின் பாதியைக் கொண்ட ஆசிய ஐரோப்பா கண்டங்களின் மிகச் சிறந்த விருதை பெற்றிருந்தார் அந்த உலக மகா நடிகன். இதற்கடுத்த காலகட்டங்களில் தான் நடிகர்திலகத்திடம் சொல்லப்பட்ட கதை புனர்ஜென்மம். எந்த தைரியத்தில் நடிகர் திலகத்திடம் கதை சொல்லி இருப்பார்கள்?  கதாசிரியர் நடிகர்திலகத்திடம் கதை சொன்ன விதத்தை சற்று ஊகித்து பார்க்கலாம் . கதை விவாதம்: நடிகர்திலகம், கதாசிரியர் (புனர்ஜென்மம் குழு) நடிகர்திலகம் :என்ன புதுசா ஒரு கதை இருக்குன்னீங்களே! கதையை சொல்லுங்க. கதாசிரியர்: படம் ஆரம்பிக்குது.மழை கொட்டி தள்ளுது.அப்ப ஒரு தெருவை காட்டறோம்.அந்த தெருவுல ,மழைத்தண்ணியில ஒரு உருவம் படுத்திருக்குது.அளவுக்கு அதிகமான. குடி .போதை. எழுந்திருக்கவே முடியல.மழை வேற கொட்டித் தள்ளுது.அந்த மழையிலும் தெளியாத குடி ...

நடிகர் திலகத்தின் 1983 ஆம் ஆண்டு சாதனைகள்

படம்
நடிகர் திலகத்தின் 1983 ஆம் ஆண்டு சாதனைகள்.... நடிகர்திலகம்  சிவாஜிகணேசன் அவர்கள் ஒரே வருடத்தில்  இரண்டு வெள்ளி விழா படங்களையும்  மூன்று நூறு நாள் வெற்றி  விழா படங்களையும் கொடுத்து சாதனை புரிந்திருக்கிறார்.அதிகம் தெரியப்படாத நடிகர் திலகத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று.இந்த சாதனையானது நடிகர் திலகம் தன் இளமைப் பருவத்தில் நடித்து வெளியிட்ட படங்களில் இருந்து அல்ல .இப்போது நான் குறிப்பிடும் இந்த சாதனையானது நடிகர் திலகம் தன்னுடைய 55 ஆவது வயதில் செய்த சாதனையை . நடிகர் திலகம் இந்த சாதனையை செய்த ஆண்டு 1983. 1983 ஆம் ஆண்டு நடிகர் திலகம் நடித்த வெளியான படங்கள் மொத்தமே ஏழு தான்.இந்த ஏழு படங்களிலும் ஒன்று தெலுங்கு படம். மற்ற ஆறு படங்கள் தான் தமிழ் படங்கள். இந்த 1983 ஆம் ஆண்டு ஆண்டின் தொடக்கமாக முதலில் வெளியான படம் தெலுங்கு படம் . படத்தின் பெயர் பெஜவாடா பெப்புலி.வெளியான தேதி  14. 1 .1983 . இதற்கு அடுத்ததாக வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படம் நீதிபதி .வெளியான தேதி  26 1 1983.இந்த ஆண்டில் தொடக்கத்தில் வெளியான முதல் படத்திற்கும் இந்த இரண்டாவது படத்துக்கும் இடைப்பட்ட நாட்கள் ...

சிவாஜிக்காக TMS சிரமப்பட்டு பாடிய பாடல்கள்

படம்
டி எம் எஸ் ,சிவாஜிக்காக கஷ்டப்பட்டு பாடிய பாடல்கள் ... பராசக்தி படம் வந்ததிலிருந்து தூக்கு தூக்கி படம் வரைக்கும் சிவாஜிக்கு எத்தனையோ பேர் பாடி இருப்பார்கள்.. எல்லா பாடகர் குரலையும் தன்னுடைய  நடிப்பால்  மேட்ச் செய்து  இருப்பார் சிவாஜி .தூக்கு தூக்கி படத்துக்கு பின்னால் சிவாஜிக்கு ,சிவாஜியே  பாடுவது மாதிரி ஒரு வாய்ஸ் கிடைத்தது.அதுதான்  டி எம் எஸ் குரல். டிஎம்எஸ் இன் குரல் நல்ல கம்பீரமான குரல் என்றாலும்  ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி பாடி இருப்பார் . சிவாஜியை தவிர மற்ற நடிகர்களுக்கு பாடிய டிஎம்எஸ்ஸின் குரல் ஆனது அதிகம் கம்பீரத்தை காட்டாத ஒரு மிருது தன்மையுடன் இருக்கும். சிவாஜிக்கும் TMS எத்தனையோ மிருதுவான சாந்தமான பாடல்களை பாடி இருந்தார்.சிவாஜிக்கு பாடிய சில கடினமான பாடல்களை  அடிவயிற்றில் இருந்து காற்றை நெஞ்சுக்கு கொண்டு வந்து அடித்தொண்டையிலிருந்து கஷ்டப்பட்டு பாடி இருப்பார். அவ்வாறு சிவாஜிக்கு பாடிய சில கடினமான பாடல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வசந்த மாளிகை படத்தில் அவர் பாடிய" யாருக்காக இது யாருக்காக "என்ற பாடலை தியேட்டரில்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற