இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சந்திரமுகி உருவானதின் பிண்ணனி

ரஜினிக்கு கை கொடுத்த அன்னை இல்லம்..சந்திரமுகி... சந்திரமுகிக்கு எப்ப பூஜை போட்டாங்களோ அப்ப இருந்து இதே பேச்சு வந்துகிட்டே இருக்கு. அன்னை  இல்லம்  ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கிறதாகவும் அந்த டயத்துல ரஜினி கால் சீட் கொடுத்ததுனால சிவாஜி புரொடக்ஷன்ஸ் சந்திரமுகி படத்தை தயாரிச்சு அந்தக் கஷ்டத்தை எல்லாம் போக்கிட்டதாகவும்  பேச்சு வந்துகிட்டே இருக்கு.இப்ப கூட யூடியூப் சேனல்ல செய்யார் பாலு அப்படிங்கறவரு ரஜினி கால் சீட் கொடுத்ததாலே தான் அன்னை  இல்லம்  கஷ்டத்திலிருந்து மீண்டு வந்துருச்சு அப்படின்னு பேட்டி கொடுத்து இருந்தார். ஏதோ அந்த ஒரு படத்தை தயாரிச்சு வெளியிட்டு அதுல வந்த லாபத்தில் தான் அன்னை இல்லம் ரொம்ப செழிப்பா வளர்ந்துருச்சு அப்படிங்கிற அர்த்தத்திலேயே அந்த சைடு இருக்கிறவங்க பேசிக்கிட்டே இருக்காங்க. இத பேசறதுக்கு முன்னால ரஜினி அதுக்கு முன்னால நடிச்ச பட சங்கதியை கொஞ்சம் நினைச்சு பாக்கணும். அந்தப் படம் பாபா ...அது எப்படி ஓடுச்சு.. அதுக்கு என்னவெல்லாம் பிரச்சனை வந்துச்சு ,அப்படிங்கறத அவங்க பேச மாட்டேங்குறாங்க!  அந்த கால கட்டத்துல நடந்த ஒரு சம்பவம்.கர்நாடகாவில் நடந்த ...

சிவாஜி புரொடக்சன்சின் 100 நாள் வெள்ளிவிழா படங்கள்

படம்
சிவாஜி பிலிம்ஸ்  சிவாஜி புரொடக்சன் தயாரித்து 100 நாள் வெள்ளிவிழா ஓடிய திரைப்படங்கள் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல திரைப்படங்கள் சிவாஜிபிலிம்சால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது போக ,ராஜா மணிபிச்சர்ஸ், சாந்தி பிலிம்ஸ் ,பிரபு ராம் பிக்சர்ஸ் ,ராம்குமார் பிக்சர்ஸ் என்ற பெயர்களில் நடிகர் திலகம் நடித்த பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  இந்தப் பதிவில் சிவாஜி பிலிம்ஸ் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்த படங்களை மட்டும் நாம் பார்க்கலாம்  1956 இல் சிவாஜி நடித்த படம் அமரதீபம். ஸ்ரீதர் கதை வசனத்தில் டி பிரகாஸ்ராவ் இயக்கிய படம் இது .தமிழில் வெற்றி அடைந்த இந்த படத்தை  இந்தியில் தயாரிக்க சிவாஜி கணேசன்  முடிவு செய்தார்.சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு தேவானந்த் ,வைஜெயந்தி மாலா நடிக்க இந்தப் படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டது. அமர்தீப் என்பது இந்தி பட தலைப்பாகும் . சிவாஜி ப்ரொடக்சன் தயாரித்த முதல் படம் இது .இந்தியிலும் இது நல்ல வெற்றி பெற்றது. தமிழ் அமரதீபம் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படம். 1964ல் நடிகர் திலகம் தனது சிவாஜி பிலிம்ஸ் என்ற பேனரில் மிகுந்த பொருட்...

சிவாஜியோடு நடித்து பெயர் வாங்கிய குழந்தை நட்சத்திரங்கள்

படம்
குழந்தைகளோடு நடிப்பதென்றால் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும்.மிகப் பெரும்பான்மையான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு இணைந்து நடித்திருக்கிறார்கள். மாஸ்டர் ஸ்ரீதர் குட்டி பத்மினி கமலஹாசன் பேபிஇந்திரா ஸ்ரீதேவி பப்லு நடிகை மீனா நடிகை ஷாலினி பேபி வினோதினி என்று இன்னும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு நடித்திருக்கிறார்கள் . குழந்தை பட்டாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகர் திலகம் நடித்த படங்கள் என்றால் குழந்தைகள் கண்ட குடியரசு எங்க மாமா படங்களை சொல்லலாம் .. அதிலும் குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் சிறுவர் சிறுமிகளே  கதாநாயக வேடங்களில் நடித்திருப்பார்கள். குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் நடிகர்திலகத்துக்கு கௌரவ வேடம் தான் . விஞ்ஞானியாக நடித்திருப்பார் . இது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படமும் கூட. நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் பாடல்  பாபு படத்தில் இடம் பெற்ற  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடல்  என் தம்பி படத்தில் இடம்பெற்ற முத்து நகையே  உன்னை நான் அறிவேன்  உத்தமன் படத்தில் இடம்பெற்ற கேளாய் மகனே கேள் ஒரு வார்த்த...

ஜெயிலர் பேசியது சரியா?

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பேச்சில் நடிகர்திலகத்தை பற்றி கூறியது : இப்ப பார்த்தீங்கன்னா சிவாஜி சார்க்கு   ஒரு   ஏ.பீம்சிங்,  ஒரு ஏ.பி.நாகராஜன்,  ஒரு பி.மாதவன்,  ஒரு ஏ.சி.திருலோகசந்தர்   அந்த மாதிரி டைரக்டர்ஸ்ங்க இல்லைன்ன  சொன்னா   சிவாஜி சாருக்கு வந்து   "நடிகர் திலகம்னு" பேரு வந்திருக்குமான்னு  சந்தேகம் தான்னு  பேசியிருக்கிறார்.. ரஜினி குறிப்பிட்ட இந்த டைரக்டர்கள் எல்லாம் மிகச் சிறந்த டைரக்டர்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இவர்கள் படங்களில் நடித்ததால்தான் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் சென்ற பட்டம் கிடைத்தது என்ற பேச்சு தான் இங்கு விவாதத்துக்கு உள்ளாகிறது. நடிகர் திலகம் பட்டம் பெறுவதற்கு முன்பு சிவாஜி என்ற பட்டத்தை பெற்றவர் வி சி கணேசன். விசி கணேசனுக்கு சிவாஜி என்ற பட்டத்தை கொடுத்தது ஒரு சாதாரண மனிதர் அல்ல. யாரையும் அவ்வளவு எளிதில் புகழ்ந்து பேசக்கூடியவர் அல்ல. சிவாஜி என்ற பட்டத்தை விசி .கணேசனுக்கு கொடுத்தது பராசக்தி படத்தில் நட...

சிவாஜியின் முதல் 10 வருட சாதனைகள்

சிவாஜி கணேசன் முதல் 100 படங்களில் செய்த சாதனைகள். சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி .வெளிவந்த ஆண்டு 1952. 100;வது படமான நவராத்திரி வெளிவந்த வருடம் 1964.  சிவாஜி கணேசன் முதல் 100 படங்களை12 வருடங்களில் நடித்து முடித்தார். தமிழ் சினிமா திரையுலகில் முதல் நூறு படங்களை பன்னிரண்டு வருடங்களில் நடித்து முடித்த முதல் நடிகர் சிவாஜி கணேசன் தான். 1952 ஆம் வருடம் நடிகர் திலகம் நடித்த வெளிவந்த படங்கள் இரண்டு .முதல் படமே வருடக் கடைசி அக்டோபர் மாதத்தில் தான் வெளியானது. மீதம் 98 படங்களை 11 வருடங்களில் நடித்து முடித்தார். வருடத்திற்கு சராசரியாக எட்டு படங்களில் நடித்து சாதனை புரிந்திருக்கிறார் சிவாஜி கணேசன். இந்த நூறு படங்களில் வெள்ளிவிழா ஓடிய திரைப்படங்கள் ; பராசக்தி சம்பூர்ண ராமாயணம் வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை இரும்புத்திரை பாவ மன்னிப்பு  பாசமலர்   100 படங்களில் நடிகர்திலகம் நடித்து வெள்ளி விழா ஓடிய படங்கள் ஏழு.. 100 நாள் ஓடிய திரைப்படங்கள் : திரும்பிப் பார் ,மனோகரா ,கல்யாணம் பண்ணியும்      ,,"பிரம்மச்சாரி ,தூக்குத்தூக்கி ,எதிர்பாராதது, காவேரி ,மங்கையர்...

நான் பெற்ற செல்வம் VS திருவிளையாடல்

திருவிளையாடல் படம் பத்தி பேச ஆரம்பிச்சாலே சிவன் நக்கீரன் தருமி காட்சிகள் தான் எல்லோருடைய நினைவுக்கும் வரும்.எப்படி எடுத்திருக்காங்க. இந்த காட்சியை, அப்பிடீன்னு ஒரு வியப்பு யாருக்கும் வராம போகாது.அந்த காட்சியோட வசனங்களை சொல்லாத ஆளுகளும் இருக்க முடியாது.திருவிளையாடல் படத்துல சிவனாக சிவாஜியும் தருமியாக நாகேசும் அதை ஒரு பகுதியாக செஞ்சிருப்பாங்க.அந்த காட்சியோட  அடுத்த பகுதியா நக்கீரனாக  ஏபி நாகராஜனும் சிவனா சிவாஜியும் செஞ்சு இருப்பாங்க .இந்த காட்சியில் வரும் ஒவ்வொரு வசனமும் தமிழ் மக்களுக்கு  மனசுல பதிஞ்சு இருக்கும். இந்த காட்சி  இப்படி சிறப்பாக அமைஞ்சதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.இந்த  காட்சி  ஏற்கனவே   நான் பெற்ற செல்வம் படத்துலே காட்சிகளாக எடுத்திருப்பாங்க .இந்த  நக்கீரன் சிவன் தருமி காட்சிகள் எல்லாம் ஏற்கனவே ஒரு படத்துல வந்திருக்கா அப்படிங்கறது பல பேருக்கு தெரியாது. நான் பெற்ற செல்வம் படத்துல இந்தக் காட்சிகளை அப்படியே அமைச்சு இருப்பார் ஏபி நாகராஜன் .அந்தப் படத்துல வர்ற சில வசனங்கள கொஞ்சம் மாத்தி, இன்னும் கொஞ்சம் அற்புதமான வார்த்தைகளை போட்டு த...

சிவாஜியின் பிறப்பு

சிவாஜியை ஏன் அவதரிக்க வைத்தான்  இறைவன்? அதுவும் தமிழகத்தில் .. ஏன் ஏன் ஏன் ? தமிழகம் சித்தர்கள் விளையாடிய பூமி. அதிகமான மகான்கள் அவதரித்த பூமி .. ஏராளமான அடியார்கள் நடமாடிய பூமி .. வீரத்தோடு தியாகத்தையும் கொண்ட மன்னர்கள் ஆண்ட பூமி ... பிற தேசத்து மக்களும் சுதந்திரமாக உலாவிய பூமி ... குன்றாத  இயற்கை வளங்களும், வற்றாத ஜீவ நதிகளும், செல்வத்தைக் கொட்டும் நில தனங்களும் , பொய்க்காத பூ மழையும் , கொண்டது தான் தமிழக பூமி .. நிறைவர  குறைவற்ற அமைந்த தமிழக பூமிக்கு, அதில் வாழும் மக்களுக்கு அதில் ஒரு குறை வைக்கலாமோ? அதற்காகவே படைக்கப்பட்டவன் தான் நெற்றி பொட்டாய் வந்த திலகமான  சிவாஜி ... கடவுளர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஓவியங்களாய் பார்த்ததுண்டு உணர்வுகளால் தெரிந்தது உண்டு .. சிலைகளாய் கண்டதுண்டு .. சிறுமதியில் பரவசமாய் அறிந்ததுண்டு.. ஓர் உயிர் அசைவாய், கண் பார்க்க ஓர் உருவ அசைவாய் கண் பார்க்க முடியுமா கடவுளின் நிஜத்தை?  என ஏங்காத மனிதர் உண்டோ  ? எப்படித்தான் காண முடியுமோ கடவுளின் சுய ரூபத்தை? சிவனென்ன?   திருமால் என்ன?  முருகனென்ன? எத்தனை கடவுள்கள்? எப்படித...

சிவாஜியின் டிஜிட்டல் திரைப்படங்கள்

படம்
நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வெளியீட்டு திரைப்படங்கள் .. முதல் வெளியீட்டிலும் மறு வெளியீட்டிலும்... பழைய தமிழ் படங்களை புதிய டிஜிட்டல் முறையில் மெருகேற்றி வெளியிடும் முறை 2012 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்று சொல்லலாம். அப்படி டிஜிட்டல் வெளியிட்டில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் கர்ணன் ஆகும். இந்தப் படம் அதிக லாபத்தை விநியோகஸ்தருக்கு சம்பாதித்து கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியைப் பார்த்து பல தமிழ் படங்கள் டிஜிட்டல் முறையில் மெருகேற்றி வெளிவர தொடங்கின.டிஜிட்டல் படங்களுக்கு அடித்தளமாகவும் முன்னோடியாகவும் அமைந்தது கர்ணன் திரைப்படம் .. கர்ணன் , பாசமலர் , வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜபார்ட் ரங்கதுரை , சிவகாமியின் செல்வன்,  ராஜா,  வியட்நாம் வீடு,  திருவிளையாடல்,  வசந்த மாளிகை,  அவன் தான் மனிதன்,  முதல் மரியாதை  ஆகிய படங்கள் புதிய படங்களை விட நல்ல வசூலை அள்ளிக் கொடுத்தது... கர்ணன்.. கர்ணன் 1964 ஆம் ஆண்டு வெளியான படம் ஆகும். படம் வெளியான சமயத்தில் நான்கு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் கர்ணன். முதன் முதலாக டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீடு...

காலம் மாறலாம், சிவாஜியின் கௌரவம் மாறுமா?

படம்
காலம் மாறலாம்  சிவாஜியின் கௌரவம் மாறுமா? எத்தனை காலம் ஆனாலும் எத்தனை நடிப்பு வந்தாலும் அத்தனை அடியும் முடியும் அவர் கொடுத்ததில் தானே? காலம் மாறலாம்  சிவாஜியின் கௌரவம் மாறுமா?  எங்கே என்று நடிப்பை எங்கே என்று தேடதேட அது ஊற்றாய் காட்டுமே  பார்க்க பார்க்க அதை பார்க்க பார்க்க நெஞ்சம் பூவாய் மலருமே  காலம் மாறலாம் சிவாஜியின் கௌரவம் மாறுமா? திலகமெல்லாம் நெற்றியில் இட்ட திலகமெல்லாம் வட்டப் பொட்டாக முகத்தில் வட்டப் பொட்டாக பொலிவாக ஒரு சிறப்பாகுமே  நடிப்புக்கெல்லாம் அவர் தான் திலகமே  அவர் போல் இல்லை எவருமே  காலம் மாறலாம்  சிவாஜியின் கௌரவம் மாறுமா  நடிப்பினிலே  சிவாஜியின் நடிப்பினிலே வேடத்திலே போட்ட வேடத்திலே  நெஞ்சத்திலே மக்கள் நெஞ்சத்திலே  மறக்குமா உயிருள்ளவரை மறக்குமா  காலம் மாறலாம் சிவாஜியின் கௌரவம் மாறுமா?  கொடுத்ததெல்லாம் அவர் கொடுத்ததெல்லாம் அது ஓர் உயர்ந்த வரமே பார்த்தவருக்கு அதை பார்த்தவருக்கு அது ஓர் பிச்சை வரமே எல்லாம் வல்ல கடவுளே அவரில் கலந்தது தெளிவுடனே  காலம் மாறலாம் சிவாஜியின் கௌரவம் மாறுமா?...

நம்ப முடியாத சிவாஜி பட வெளியீடுகள்

படம்
நம்ப முடியாத சிவாஜி பட வெளியீடுகள்.. நடிகர் திலகத்தைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசும் போது அவர் கர்ணனாக நடித்தார்,கட்டபொம்மன் ஆக நடித்தார், கப்பலோட்டிய தமிழனாக நடித்தார் என்று சொல்லி விடுவார்கள்.   ஆனால் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களும் எப்படிப்பட்டது, ஒரு படத்துக்கும் அடுத்தபடியாக வெளியாகும் படத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் காட்டி நடித்துள்ளார் என்பதை பார்க்கும்போது அது ஆச்சரியமாக மட்டுமல்ல, அதிசயமாகவும் உள்ளது. அது பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 3.2.56 இல் வெளிவந்தது தெனாலிராமன் திரைப்படம்.  17 .2. 56-ல் வெளியான படம் பெண்ணின் பெருமை .தெனாலிராமன் ஒரு நகைச்சுவை விதூஷகன்.அதே சமயம் ஒரு ராஜதந்திரியும் கூட. நகைச்சுவை கலந்த இந்த தெனாலிராமன் பாத்திரத்தை செய்த நடிகர் திலகத்தின் அடுத்த படத்தைப் பார்த்தால் அது பெரிய பிரமிப்பை உண்டாக்கும் .ஆமாம், நடிகர் திலகம் தெனாலிராமனுக்கு அடுத்து செய்த படம் பெண்ணின் பெருமை. இந்தப் பெண்ணின் பெருமை படத்தில் நடிகர் திலகம் ஏற்ற வேடம் கிட்டத்தட்ட வில்லன் வேடமே.கூட பிறந்த சகோதரனையே துன்புறுத்தும் தம்பியாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன் ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற