இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

ஒரே சமயத்தில் ஓடிய சிவாஜியின் 20 படங்கள்

படம்
ஞான ஒளி வெகுஜன மக்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும்  படைப்பு ஞான ஒளி என்றால் அது நிஜம்தான். இந்தப் படம் விளைவித்த தாக்கம் மிகவும் அதிகமானது. ஞான ஒளி படம் வெளிவந்த ஆண்டு 1972. . ஞானஒளி  வெளிவந்த சமயத்தில் சென்னையில் சிவாஜியின் படங்கள் ஒரு மகத்தான சாதனை செய்தது.அந்த சாதனை ஒரு சாதாரணமான சாதனை கிடையாது.  ஞான ஒளி 1972 ஆம் ஆண்டு சென்னையில் நான்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.அந்தத் திரையரங்குகள் பிளாசா பிராட்வே சயானி கமலா . அந்தக் காலத்தில் ஒரு நடிகரின் ஒரு படம் ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும்போது சில சமயங்களில் அந்த நடிகரின் அதற்கு முன் வெளியான பழைய திரைப்படங்கள் இரண்டு அல்லது மூன்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும். மிகவும் பிரபலமான நடிகர் என்றால் நான்கு அல்லது ஐந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.இது அந்த காலத்தில் வழக்கமான ஒன்றுதான்.  எல்லா நடிகர்களுக்கும் எப்போதாவது நிகழும் ஒரு விஷயம் தான். ஆனால் நடிகர் திலகத்தின் ஞான ஒளி திரைப்படம் வெளிவந்த அந்த 1972 ஆம் காலகட்டத்தில் ஒரே சமயத்தில் சென்னை நகரில் மட்டும் 20 திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் 20 திரைப்படங்கள...

சிவாஜியின் குதிரை சவாரிகள்

படம்
குதிரை சவாரியிலும் மன்னர் நடிகர்திலகம் .. நடிகர்திலகம் நடிப்பில் மட்டுமல்ல வேறு பல சிறப்பான கலைகளையும் தெரிந்து வைத்திருந்தார். ஆடல் கலைகள் ,பாடல் பாடுவது என்று அந்த கலைகளையும் தெரிந்து வைத்திருந்தார். அது போக குதிரை சவாரி செய்வதிலும் நிகரற்றவராக இருந்தார். 70 வயதுகளில் அவர் அமெரிக்கா சென்ற போது நீல நிற ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் ,கௌபாய் கேட் அணிந்து குதிரையில் அமர்ந்தபடி அவர் போஸ் கொடுத்தார். அந்தப் புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது. குதிரையில் அமர்ந்து அவர் போஸ் கொடுத்த அந்தப் புகைப்படம் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. திரைப்படங்களில் குதிரையில் அமர்ந்து அவர் நடித்த காட்சிகள், குதிரைசவாரி செய்து கொண்டே  பாடும் காட்சிகள், ஆக்சன் காட்சிகள், குதிரை சவாரி காட்சிகள் என்னென்ன  படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.அந்த இரட்டை வேடத்திலும் அவர் குதிரை சவாரி செய்வது போல காட்சிகள் இருக்கும். படத்தின் இறுதி கட்ட காட்சியில் ரதத்தில் செல்லும் விக்கிரமனை புயல் வேகத்தில் துரத்துவார் பார்த்திபன். இது ஒரு அட்டகாசமான...

71 வயதிலும் சபரிமலைக்கு சென்ற சிவாஜி

படம்
71 வயதிலும் சபரிமலைக்கு சென்று வந்த சிவாஜி... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1999 ஆம் வருடம் சபரிமலை சென்றார். அப்போது தன் மனைவி கமலா அம்மாவையும் சபரிமலைக்கு அழைத்துச் சென்றார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கமலா அம்மாவோடு சபரிமலைக்கு சென்றது அதுதான் முதலும் கடைசியுமான நிகழ்ச்சியாகும். சிவாஜி அவர்கள் அதற்கு  முன்பு 1987 ஆம் வருடம் தான் சபரிமலைக்கு சென்று இருந்தார்.கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து 1999 ஆம் வருடம் தான் சபரிமலைக்கு சென்றார். சிவாஜி அவர்கள் சபரிமலைக்கு சென்றது 20 தடவைகளுக்கு மேல் இருக்கும். இதற்கு முன்பு பல தடவை சபரிமலை சென்ற போது நம்பியார் தலைமையில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று இருக்கிறார். 1999 ஆம் வருடம் அவர் சபரிமலைக்கு சென்ற போது அவருடன் அவரது மனைவி கமலம்மாள் மகன் நடிகர் பிரபு தம்பி மகன் கிரி தங்கை மகன் குமார் பேரன் ஆகியோரும் சென்றார்கள். அன்னை இல்லத்திலேயே விசேஷ பூஜை நடத்தி இருமுடி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் சிவாஜி கணேசனும் அவரது மனைவி கமலாமாலும் மகன் பிரபுவும்  மற்றவர்களும் ரயில் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார்கள். கோட்டயத்தில் இறங்கி அ...

சிவாஜி படம் ஓடுச்சா உங்க படம் ஓடுச்சா

படம்
சிவாஜி படம் ஓடுச்சா  ? உங்க படம் ஓடுச்சா? சிவாஜி படங்கள் ஓடியதையும் எதிர்முகாம் நடிகரின் படங்கள் ஓடியதையும் கம்பேர் பண்ணி குறை சொல்லி கருத்துக்கள் சொல்லி வெளியிடுவது இன்று வரை ஓய்ந்தபாடில்லை.சிவாஜியின் அசுர நடிப்பு சாதனைக்கு முன் வேறு எந்த ஒப்பீடுகளையும் முன் வைப்பது ஏற்புடை ஆகாது,  நமக்கும் உடன்பாடு இல்லை. நம் கோணத்தில் ஒரு பார்வை இப் பதிவு. சிவாஜி கணேசன் தன்னுடைய படங்களை எப்படி வெளியிட்டார் அவை எப்படி எல்லாம் ஓடியது என்பது எல்லாம் அவர்களுக்கு தெரியாதது அல்ல. அதை சொல்லக்கூடாது என்பது தான் அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. இல்லை மறந்து விட்டார்களா ? மறந்ததை நினைவூட்டுகிறேன் என்று மனோகரா பாணியில் சொல்கிறேன் .. 1961 இரண்டு வெள்ளிவிழா படங்களை கொடுத்தார் ஒரே ஆண்டில். பாசமலர் பாவமன்னிப்பு என்று. இதில் பாலும் பழமும் வெள்ளி விழாவை தவறவிட்ட படம். சிவாஜி நினைத்திருந்தால் இப்படி செய்திருக்கலாம்.பாசமலர் தான் சக்கை போடு போடுகின்றதே என்று அந்த வருடத்தில் எந்த படத்தையும் வெளியிடாமல், இல்லையென்றால் மேலும் ஒரு படத்தோடு நிறுத்தி இருக்கலாம். அப்படி அவர் மற்ற நடிகர்கள் போல் செய்திருந்தால் பாசமலர...

சிவாஜியின் எந்த படங்களை டிஜிட்டல் செய்யலாம்?

படம்
சிவாஜியின் எந்தெந்த படங்களை டிஜிட்டல் செய்யலாம் ? தமிழில் வெளியான பழைய திரைப்படங்கள் டிஜிட்டலில் செய்து வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெறும் என்பதற்கு அடித்தளமிட்ட படம் கர்ணன். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்த திரைப்படம் அமோக வரவேற்பு பெற்றது. பல சாதனைகளைப் புரிந்த கர்ணன் படத்தை தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் பாசமலர் திருவிளையாடல் வசந்த மாளிகை  வீரபாண்டிய கட்டபொம்மன் சிவகாமியின் செல்வன் ராஜா அவன்தான்மனிதன் ராஜபார்ட் ரங்கதுரை வியட்நாம் வீடு முதல் மரியாதை என்று வரிசையாக வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றதுடன் வசூலையும் அள்ளி தந்தது. இவற்றில் கர்ணன் வசந்த மாளிகை சிவகாமியின் செல்வன் ராஜபார்ட் ரங்கதுரை முதல் மரியாதை ஆகிய திரைப்படங்கள் பெரும் சவால்களுக்கு இடையில் 100 நாட்கள் ஓடி எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. நடிகர்திலகத்தின்  இந்த இந்த படங்களை  டிஜிட்டல் செய்து வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் . நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தியிலிருந்து தொடங்குகின்றன பெரும்பாலான விருப்பங்கள். பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக உத்தமப...

சந்திரமுகி உருவானதின் பிண்ணனி

ரஜினிக்கு கை கொடுத்த அன்னை இல்லம்..சந்திரமுகி... சந்திரமுகிக்கு எப்ப பூஜை போட்டாங்களோ அப்ப இருந்து இதே பேச்சு வந்துகிட்டே இருக்கு. அன்னை  இல்லம்  ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கிறதாகவும் அந்த டயத்துல ரஜினி கால் சீட் கொடுத்ததுனால சிவாஜி புரொடக்ஷன்ஸ் சந்திரமுகி படத்தை தயாரிச்சு அந்தக் கஷ்டத்தை எல்லாம் போக்கிட்டதாகவும்  பேச்சு வந்துகிட்டே இருக்கு.இப்ப கூட யூடியூப் சேனல்ல செய்யார் பாலு அப்படிங்கறவரு ரஜினி கால் சீட் கொடுத்ததாலே தான் அன்னை  இல்லம்  கஷ்டத்திலிருந்து மீண்டு வந்துருச்சு அப்படின்னு பேட்டி கொடுத்து இருந்தார். ஏதோ அந்த ஒரு படத்தை தயாரிச்சு வெளியிட்டு அதுல வந்த லாபத்தில் தான் அன்னை இல்லம் ரொம்ப செழிப்பா வளர்ந்துருச்சு அப்படிங்கிற அர்த்தத்திலேயே அந்த சைடு இருக்கிறவங்க பேசிக்கிட்டே இருக்காங்க. இத பேசறதுக்கு முன்னால ரஜினி அதுக்கு முன்னால நடிச்ச பட சங்கதியை கொஞ்சம் நினைச்சு பாக்கணும். அந்தப் படம் பாபா ...அது எப்படி ஓடுச்சு.. அதுக்கு என்னவெல்லாம் பிரச்சனை வந்துச்சு ,அப்படிங்கறத அவங்க பேச மாட்டேங்குறாங்க!  அந்த கால கட்டத்துல நடந்த ஒரு சம்பவம்.கர்நாடகாவில் நடந்த ...

சிவாஜி புரொடக்சன்சின் 100 நாள் வெள்ளிவிழா படங்கள்

படம்
சிவாஜி பிலிம்ஸ்  சிவாஜி புரொடக்சன் தயாரித்து 100 நாள் வெள்ளிவிழா ஓடிய திரைப்படங்கள் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல திரைப்படங்கள் சிவாஜிபிலிம்சால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது போக ,ராஜா மணிபிச்சர்ஸ், சாந்தி பிலிம்ஸ் ,பிரபு ராம் பிக்சர்ஸ் ,ராம்குமார் பிக்சர்ஸ் என்ற பெயர்களில் நடிகர் திலகம் நடித்த பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  இந்தப் பதிவில் சிவாஜி பிலிம்ஸ் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்த படங்களை மட்டும் நாம் பார்க்கலாம்  1956 இல் சிவாஜி நடித்த படம் அமரதீபம். ஸ்ரீதர் கதை வசனத்தில் டி பிரகாஸ்ராவ் இயக்கிய படம் இது .தமிழில் வெற்றி அடைந்த இந்த படத்தை  இந்தியில் தயாரிக்க சிவாஜி கணேசன்  முடிவு செய்தார்.சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு தேவானந்த் ,வைஜெயந்தி மாலா நடிக்க இந்தப் படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டது. அமர்தீப் என்பது இந்தி பட தலைப்பாகும் . சிவாஜி ப்ரொடக்சன் தயாரித்த முதல் படம் இது .இந்தியிலும் இது நல்ல வெற்றி பெற்றது. தமிழ் அமரதீபம் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படம். 1964ல் நடிகர் திலகம் தனது சிவாஜி பிலிம்ஸ் என்ற பேனரில் மிகுந்த பொருட்...

சிவாஜியோடு நடித்து பெயர் வாங்கிய குழந்தை நட்சத்திரங்கள்

படம்
குழந்தைகளோடு நடிப்பதென்றால் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும்.மிகப் பெரும்பான்மையான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு இணைந்து நடித்திருக்கிறார்கள். மாஸ்டர் ஸ்ரீதர் குட்டி பத்மினி கமலஹாசன் பேபிஇந்திரா ஸ்ரீதேவி பப்லு நடிகை மீனா நடிகை ஷாலினி பேபி வினோதினி என்று இன்னும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு நடித்திருக்கிறார்கள் . குழந்தை பட்டாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகர் திலகம் நடித்த படங்கள் என்றால் குழந்தைகள் கண்ட குடியரசு எங்க மாமா படங்களை சொல்லலாம் .. அதிலும் குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் சிறுவர் சிறுமிகளே  கதாநாயக வேடங்களில் நடித்திருப்பார்கள். குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் நடிகர்திலகத்துக்கு கௌரவ வேடம் தான் . விஞ்ஞானியாக நடித்திருப்பார் . இது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படமும் கூட. நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் பாடல்  பாபு படத்தில் இடம் பெற்ற  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடல்  என் தம்பி படத்தில் இடம்பெற்ற முத்து நகையே  உன்னை நான் அறிவேன்  உத்தமன் படத்தில் இடம்பெற்ற கேளாய் மகனே கேள் ஒரு வார்த்த...

ஜெயிலர் பேசியது சரியா?

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பேச்சில் நடிகர்திலகத்தை பற்றி கூறியது : இப்ப பார்த்தீங்கன்னா சிவாஜி சார்க்கு   ஒரு   ஏ.பீம்சிங்,  ஒரு ஏ.பி.நாகராஜன்,  ஒரு பி.மாதவன்,  ஒரு ஏ.சி.திருலோகசந்தர்   அந்த மாதிரி டைரக்டர்ஸ்ங்க இல்லைன்ன  சொன்னா   சிவாஜி சாருக்கு வந்து   "நடிகர் திலகம்னு" பேரு வந்திருக்குமான்னு  சந்தேகம் தான்னு  பேசியிருக்கிறார்.. ரஜினி குறிப்பிட்ட இந்த டைரக்டர்கள் எல்லாம் மிகச் சிறந்த டைரக்டர்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இவர்கள் படங்களில் நடித்ததால்தான் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் சென்ற பட்டம் கிடைத்தது என்ற பேச்சு தான் இங்கு விவாதத்துக்கு உள்ளாகிறது. நடிகர் திலகம் பட்டம் பெறுவதற்கு முன்பு சிவாஜி என்ற பட்டத்தை பெற்றவர் வி சி கணேசன். விசி கணேசனுக்கு சிவாஜி என்ற பட்டத்தை கொடுத்தது ஒரு சாதாரண மனிதர் அல்ல. யாரையும் அவ்வளவு எளிதில் புகழ்ந்து பேசக்கூடியவர் அல்ல. சிவாஜி என்ற பட்டத்தை விசி .கணேசனுக்கு கொடுத்தது பராசக்தி படத்தில் நட...

சிவாஜியின் முதல் 10 வருட சாதனைகள்

சிவாஜி கணேசன் முதல் 100 படங்களில் செய்த சாதனைகள். சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி .வெளிவந்த ஆண்டு 1952. 100;வது படமான நவராத்திரி வெளிவந்த வருடம் 1964.  சிவாஜி கணேசன் முதல் 100 படங்களை12 வருடங்களில் நடித்து முடித்தார். தமிழ் சினிமா திரையுலகில் முதல் நூறு படங்களை பன்னிரண்டு வருடங்களில் நடித்து முடித்த முதல் நடிகர் சிவாஜி கணேசன் தான். 1952 ஆம் வருடம் நடிகர் திலகம் நடித்த வெளிவந்த படங்கள் இரண்டு .முதல் படமே வருடக் கடைசி அக்டோபர் மாதத்தில் தான் வெளியானது. மீதம் 98 படங்களை 11 வருடங்களில் நடித்து முடித்தார். வருடத்திற்கு சராசரியாக எட்டு படங்களில் நடித்து சாதனை புரிந்திருக்கிறார் சிவாஜி கணேசன். இந்த நூறு படங்களில் வெள்ளிவிழா ஓடிய திரைப்படங்கள் ; பராசக்தி சம்பூர்ண ராமாயணம் வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை இரும்புத்திரை பாவ மன்னிப்பு  பாசமலர்   100 படங்களில் நடிகர்திலகம் நடித்து வெள்ளி விழா ஓடிய படங்கள் ஏழு.. 100 நாள் ஓடிய திரைப்படங்கள் : திரும்பிப் பார் ,மனோகரா ,கல்யாணம் பண்ணியும்      ,,"பிரம்மச்சாரி ,தூக்குத்தூக்கி ,எதிர்பாராதது, காவேரி ,மங்கையர்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற