இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி பத்மினி Top 10 விஷயங்கள்

படம்
நடிகர்திலகத்தோட முதல் காமெடி படம் எது தெரியுமா ? கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி… அந்த முதல் காமெடி படத்துல சிவாஜிக்கு ஜோடியா நடிச்சது பத்மினி சிவாஜியோட முதல் பட விநியோகம் எது தெரியுமா ?அமரதீபம்… இந்த படத்துலேயும் நடிச்சவர் பத்மினி சிவாஜியோட  முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்… இதுலயும் நடிச்சிருப்பார் பத்மினி. சிவாஜி செஞ்ச முதல் இரட்டை வேட படம் உத்தமபுத்திரன்… இதுலயும் பத்மினிதான் தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம் எதுன்னு தெரியுமா  ?வீரபாண்டிய கட்டபொம்மன்.இதுலயும் பத்மினி நடிச்சிருப்பாங்க. ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது வாங்குன படம் வீரபாண்டிய கட்டபொம்மன்…அப்ப சிவாஜியோட அயல்நாட்டுக்கு கூட போனவரும் பத்மினி. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிச்ச முதல் படம் எது தெரியுமா ? வியட்நாம் வீடு... இதுலயும் ஜோடியா நடிச்சிருப்பாங்க பத்மினி . இப்படி சிவாஜியோட  பல முதல் முதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல  பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு.  ஒவ்வோரு நடிகருக்கும் ஒரு நடிகை பொருத்தமான ஜோடியா அமைஞ்சிருக்கும்.இந்த காலத்துலே இதை கெமிஸ்ட்ரி அப்படிங்கறாங்க.சிவாஜ...

சிவாஜி அணிந்து நடித்த கூலிங்கிளாஸ்கள், கண் கண்ணாடிகள்

படம்
உலகை நோக்கும் உங்கள் விழிகளுக்கு ஓர் அலங்கார பொருளாகவும் இருப்பது கண்கண்ணாடிகள்,கூலிங் கிளாஸ்கள்.இந்த கண் கண்ணாடி மற்றும் கூலிங் கிளாஸ்களை டிசைன் டிசைனாக அணிந்து நடித்ததிலும் சிவாஜியே முன்னோடி .முதல் படமான  பராசக்தி படத்திலேயே கறுப்பு கலர் கூலிங்கிளாஸ் அணிந்து நடித்ததால் என்னவோ கண்கண்ணாடிகளை வித விதமாக அணிந்து படங்களில் நடித்திருப்பார் நடிகர்திலகம்.பராசக்தி படத்தில் பர்மாவில் இருந்து வந்து சென்னையில் கால் மிதித்ததும் அவர் பேசும் முதல் வசனம் 'தமிழ்நாட்டின் முதல்குரலே நன்றாயிருக்கிறதே' என்பதுதான்.இந்த வசனம் பிச்சை கேட்பவனைப் பார்த்து சிவாஜி பேசம் வசனம்.சிவாஜி காருக்குள் இருந்து காசுகளை போடுவார்.அப்போது அவர் அணிந்திருப்பார் கறுப்பு நிற கூலிங் கிளாஸ். புனர்ஜென்மம் படத்தில் என்றும் துன்பமில்லை பாட்டிலும் முழுக்க கூலிங்கிளாஸ் அணிந்து வருவார்.அன்றைய கால கட்டத்தில் பேன்சியாக விளங்கிய ஒரு கூலிங்கிளாஸ் அணிந்து வருவார் சிவாஜி. நவராத்திரி படத்தில் டாக்டராக வரும் வேடத்திற்கு 'ரிம்லெஸ்' கண்ணாடி அணிந்து வருவார்.இது புல் ரிம்லெஸ் கண்ணாடியாகும்.லென்ஸின் இரு புறமும் துளையிட்டு பிரேம் சைட...

TMS பாடலை விட ஹிட்டான ஜேசுதாஸ் பாடல்

படம்
பொதுவா சிவாஜி படத்துல Tms ஒரு பாட்டு பாடிட்டா அதுக்கு மேலே வேற மத்த பாடகர்கள் வேற எந்த பாட்டு பாடியிருந்தாலும் Tms பாடுன பாட்டுக்கு மேலே அந்த பாட்டு பிரபலம் ஆகாது .இது தான் சரித்திரம். இப்படி ஒரு விஷயம் இருந்தாலும் ஒரு சில படங்களில்ல மட்டும் விதி விலக்கா சில பாட்டுக அமைஞ்சிருக்கு .அப்படி ஒரு விஷயத்தை தான் இந்த பதிவுல நாம பாக்க போறோம். 1978 லே சிவாஜி நடிச்சு வெளியான படம் அந்தமான் காதலி.டைட்டில் எவ்வளவு அழகா இருக்கு பாருங்க.இந்த  படத்தோட டைரக்டர் தயாரிப்பாளர் முக்தாசீனிவாசன்.படம் முழுக்க முழுக்க அந்தமான்லேயே எடுக்கப்பட்ட படம். காதலர்களா இருக்கற சிவாஜி சுஜாதா, கல்யாணத்துக்கு முன்னாலேயே சுஜாதா கர்ப்பம் ஆக,பிரசவத்துக்கு சிவாஜி டாக்டரை கூப்பிட போக ,டாக்டரா வர்ற தேங்காய்சீனிவாசனுக்கும் சிவாஜிக்கும் ஒரு விவாதம் ஆரம்பிக்க ,கோபத்துல சிவாஜி தேங்காயை அடிக்க தேங்காய் மூச்சு பேச்சில்லாம போக ,அவரு செத்துட்டாருன்னு சிவாஜி பயந்து அந்தமானை விட்டு ஓடிப் போய் விடுவார். ஒரு செல்வந்தரோட சொத்தாலே பெரிய பணக்காரரா சிவாஜி ஆகி விட,இது முன் பாதி கதை.  பல வருஷம் கழிச்சு அந்தமானுக்கு வர்ற சூழ்நிலை சிவாஜிக்...

சிவாஜி குடும்பத்து நடிகர்கள்

படம்
சிவாஜி குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர்கள்: இதுவரை தோராயமாக தமிழில் 6000 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்கிறது ஒரு புள்ளி விபரகணக்கு. தமிழ்சினிமாவின் முதல் பேசும்திரைப்படம் காளிதாஸ். இந்ததிரைப்படம் வெளிவந்த ஆண்டு 1931. தமிழ் சினிமாவின் 6000 திரைப்படங்களில் சிவாஜி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடித்து வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 550 படங்கள் ஆகும். இதில் சிவாஜி நடித்த படங்களின் எண்ணிக்கை 300 க்கு மேலிருக்கும். தனக்கு பிறகு இந்த சினிமாவில் தன் குடும்பத்தில் இருந்து யாரும் நடிக்க வரக்கூடாது என்பதே சிவாஜியின் விருப்பமாக இருந்தது.காலத்தின் கட்டாயமாக பலரும் சிவாஜி குடும்பத்தில் இருந்து பலரும் நடிக்க வந்தனர்.சிவாஜியின் தம்பி வி.சி.சண்முகம் திரைப்பட தயாரிப்பு பட விநியோகம் மற்றும் சிவாஜியின் கால்ஷீட் ஆகியவற்றை கவனித்து கொண்டார்.சினிமா தொடர்பான அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தவர். சிவாஜி பட நிறுவனங்களை நல்ல முறையில் வழி நடத்தி சென்றவர்.சிவாஜி குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர்கள் யார் யார் என்பதை இதில் பார்க்கலாம். இளையதிலகம் பிரபு. பிரபுவை போலீஸ் ஆபிசர் ஆக்குவதே சிவாஜியின் விருப்பமாக ...

சிவந்தமண்ல நடிச்சதுக்கு 500 கோடி சம்பளம் கொடுக்கணும்

படம்
இப்ப வர்ற ஒண்ணுமில்லாத உருப்படி படத்துக்கு,க்ராபிக்ஸ்ல சண்டை போடற கதாநாயக நடிகனுக்கெல்லாம் 100  கோடி ரூபா சம்பளம் 150 கோடி ரூபா சம்பளம் அப்பிடின்னு கொடுக்கறாங்க.ரசிகர் கூட்டம் இருக்கறதால நாலஞ்சு நாளைக்கு வர்ற கூட்டத்தை வச்சுத்தான் இவங்க சினிமா பொழைப்பே ஓடிக்கிட்டிருக்கு. இப்ப உச்சத்துல இருக்கற கதாநாயகர்களை  வெச்சு அவங்க நடிச்சு வர்ற படங்கள வெச்சு அவங்க வாங்கற சம்பளத்தை வச்சு பாக்கறப்போ சிவாஜி நடிச்ச கர்ணன் ,திருவிளையாடல் படங்கள விடுங்க.இந்த  கால ஹீரோயிச படமா எடுத்துகிட்டா சிவந்த மண் படத்தை நினைச்சு பாருங்க. அந்த படத்துல சிவாஜி நடிச்ச காட்சிகளை நினச்சு பாருங்க.நடிகர்களை நினைச்சு பாருங்க.பாட்டுகளை நினச்சு பாருங்க.சிவாஜியோட நடிப்பை நினைச்சு பாருங்க. இப்படியெல்லாம் பாத்தா சிவாஜிக்கு இந்த கால கணக்குப் படி 500 கோடி சம்பளம் தான் கொடுக்கணும். இதே சம்பளத்தை இன்னைக்கு இருக்கற கதாநாயகனுக்கு கொடுத்தாலும் அந்த மதிரி நடிப்பை நாம எதிர்பாக்க முடியுமா ? நாம சும்மா ஒண்ணும் சொல்லலை.சிவாஜி சிவந்த மண் பட சீனுகளை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. புரட்சி செய்யற வீரர்களை அடக்கறதுக்காக ஹெலிகாப்டர்ல வந...

சிவாஜி இருக்கறப்போ எனக்கென்ன கவலை -பீம்சிங்

படம்
பாவமன்னிப்பு படத்துல சிலர் அழுவார்சிலர் சிரிப்பார் பாடலை அந்த பிளாக் அண்ட் படத்துலேயே பிரமாதமா எடுத்திருப்பாங்க.இந்த பாடலில சிரிப்பார் ஒரு உணர்ச்சி பாவம் அழுவார்ங்கற ஒரு உணர்ச்சி பாவம் இந்த ரெண்டும் சேந்த ஒரு உணர்ச்சி பாவம்னு வரிகளா விவரிச்சிருப்பார் கவிஞர் . கவிஞர் எழுதுன இந்த பாட்டை சாதாரணமா எடுத்தாலே பாட்டோட பெர்பார்மன்ஸால பாக்கறதுக்கு நல்லாவே இருக்கும். ஒரு ரிஸ்க் எடுக்க வேணுண்ணு எடுக்க வேண்டிய அவசியமும் இல்லே.ஆனா சிவாஜிய வெச்சுகிட்டு அப்படி இருக்க முடியாதுல்லே .பீம்சிங்குக்கு இப்படி பல யோசனைகள் வந்துச்சு.பாட்டை எப்படியாச்சும் டிபரெண்டா எடுக்கணும்னு அவருக்கு விருப்பம். பாவமன்னிப்பு படத்துலே பாட்டுக எல்லாம் பிரமாதமாக போட்டு கொடுத்திருப்பாரு மெல்லிசை மன்னர்.ஒவ்வொரு பாட்டையும் ரொம்ப பிரமாதமா எடுத்திருப்பாரு பீம்சிங். வந்தநாள்முதல் பாட்டை சிவாஜி சைக்கிள் ஓட்டிடிகிட்டே பாடிட்டு வர்றமாதிரியும் பேக்கிரவுண்டா இயற்கை காட்சிகளா ஆறு ஆகாயம் குளத்து மேடு அப்படியே ரம்மியமா எடுத்திருப்பாரு. காலங்களில் அவள் வசந்தம் பாட்டை ஒரு கார்டன்ல அழகா எடுத்திருப்பாரு.எல்லோரும் கொண்டாடுவோம் பாட்டை டேப்ங்கற வாத...

சிவாஜி படப்பிடிப்புகளில் நடந்த விபத்துக்கள்

படம்
சிவாஜிகணேசனுக்கு விபத்து ஏற்பட்ட திரைப்படங்கள். வணங்காமுடி திரைப்படத்திற்காக உயரமான மலைப்பகுதிகளில் படப்பிடிப்புநடைபெற்றது. படத்தின் கதைப்படி வேறு நாட்டுக்கு நாடு கடத்தப்படும் சிவாஜி ஒரு மலைநாட்டுக்கு செல்வார்.அங்கே சிவாஜிக்கும்  அந்த நாட்டை சேர்ந்த வீரனுக்கும் சண்டை நடக்கும்.பெரிய பாறைகள் மலை சரிவுகளில் அந்த சண்டை நடைபெறும்.அப்போது 100 அடி உயரத்தில் இருந்து சிவாஜி அவர்கள் கீழே விழுந்திருப்பார்.அதிலிருந்து தப்பித்து விட்டார்.இதைபற்றி நடிகர்திலகமே கூறும்போது 100 அடி உயரத்தில் இருந்து விழுந்திருப்பேன்.ரசிகர்களின் நல்லாசியால் நான் தப்பி பிழைத்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.சிவாஜியவர்கள் கடவுள் பக்தி மிக்கவராக இருந்தாலும் தான் தப்பியதற்காக ரசிகர்களைத்தான் சொல்லிஇருக்கிறார் இது குறிப்பிட வேண்டியது.இறை நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளைத்தான் குறிப்பிடுவார்கள். இது 1957 ல்.. முரடன் முத்து படத்தில் ஒரு சண்டை காட்சியில் காலில் நல்ல அடி பட்டு விட்டது.அந்த வலியுடன் தொடர்ந்து அந்த சண்டை காட்சியில் நடிக்க முற்பட்ட போது வலி அதிகமாக இருந்தது.பிசியாக இருந்த சிவாஜி அந்த கால்ஷீட்டை வீணாக்காமல் நவராத...

3 டைரக்டர் -3 தெரியாத விஷயம்

படம்
கிருஷ்ணன்-பஞ்சு இந்த இரட்டை இயக்குனர்களில் இயக்கத்தில் முதல் படமான பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் நடித்து கொண்டிருக்கும் போது சிவாஜியை ஏளனமாக பலர் பேசியபோது ... சிவாஜி கணேசனை அரவணைத்து நெஞ்சார தைரியம் கொடுத்தது இயக்குனர்களில் பெரியவர் கிருஷ்ணன் அண்ணன் மட்டுமே மேலும் பராசக்தி படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு நாடகத்தில் நடித்த அனுபவம் மட்டுமே இருந்ததாலே படங்களில் கேமரா கோணங்களை அரிய செய்து ஆங்கில போஸ் முறையில் நடிக்க யோசனைகள் சொன்னார் கிருஷ்ணன் அவர்கள் .மேலும் அதனாலே அவரது திரைப்படங்களில் நான் நடிக்கும் போது எனக்கொரு தனி உற்சாகம் சந்தோஷம் இனம் தெறியாத நட்பு மேலும் எனக்கும், அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வயது ஆனால் என்னை அவர் கடைசி காலம் வரை மிஸ்டர் கணேஷ் அல்லது சிவா அதிகபட்சமாக வாங்க போங்க என்று மரியாதை நிமித்தமாகவே என்னை அழைப்பார்.  என்னிடம் ஒரு போதும் அதிர்ந்து கூட பேசாத வயதில் பெரிய இயக்குனர்களில் ஒருவர் கிருஷ்ணன் அவர்கள் . சிவாஜி தன்  தாயார் பெயரில் ராஜாமணி பிக்சர்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பாசமலர் படத்தை வெளியிட்ட பின் , சிவாஜி கணேசன் அவர்கள் மனதில் ஒரு கு...

உலகம் வியந்த நவ சிவாஜி

படம்
நவ சிவாஜி - 9 அற்புதங்கள் அதிசயமாகத்தான் இருக்கு.நம்பாமயும் இருக்க முடியலேயே.சிவாஜி செஞ்ச 9 வேஷந்தான்.ஒரு வேஷத்துக்கும் இன்னொரு வேஷத்துக்கும் சென்டிமீட்டர் மில்லி மீட்டர் அளவுல ஆராய்ச்சி பண்ணினாலும் ஏதும் கண்டு பிடிக்க முடியலேயே.எல்லாமே ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமாத்தானே இருக்கு. அந்த 9 வேஷத்தையும் சிவாஜியாலே நாம பாத்துட்டோம்.சிவாஜி எதைப் பாத்து செஞ்சிருப்பாரு.இந்த ஆச்சர்யம் பாக்குற யாருக்கும் வராம போகாது. அற்புதம்,பயம்,கருணை , கோபம்,சாந்தம்,அருவருப்பு,, சிங்காரம்,வீரம்,ஆனந்தம் இந்த 9 ரசங்களையும் அவர் நடிச்சப்போ நாமும் அந்த குணங்களுக்கு மாறுகிற உணர்வுகளுக்கு அடிமை படுத்திவிடுவார் பாருங்க  இந்த நவ சிவாஜி. அற்புதராஜ் இந்த அற்புதராஜை பாருங்க.அந்த காலத்துலே இங்கிலீஸ் படங்கள பாத்தப்போ அட இவங்க எல்லாம் எவ்வளவு ஸ்டைலிசா இருக்காங்க ,நடிக்கிறாங்க அப்பிடின்னு எல்லாம் பேசிக்குவாங்க.நம்ம ஊர் நடிகர்கள் நம்ம கலாச்சார படி தான் இருப்பங்க ,நடிப்பாங்க.  ஆனா இந்த அற்புதராஜ் நடிப்பை பாக்கையிலே சிவாஜி மேல் நாட்டுல இருந்து வந்தவரோ ,அங்கேயே படிச்சு வளந்தவரோ அப்பிடீன்னு நெனப்பு வந்து போகும்.தோளை மெல்ல த...

சிவாஜி ரசிகன் VS மற்ற ரசிகன்

படம்
சிவாஜி ரசிகர்களுக்கும் மத்த  ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.அப்படி என்ன வித்தியாசம்  ? பேஸ்புக்க்குல பல நாளுக்கு முன்னாலே ஒரு பதிவ பார்த்தேன்.அந்த பதிவுலே இருந்ததை முதல்ல உங்களுக்கு சொல்றேன் .அப்புறம் என்ன வித்தியாசம் என்பதை கடைசியிலே பாக்கலாம். பதிவு இதுதான். அந்த நண்பர் இட்ட பதிவு... சிவாஜி கணேசன் இறந்து விட்டாரா ..? . யார் சொன்னது..? . கடந்த வாரத்தில் ஒரு நாள் காலை ... ... சுமார் ஒன்பது மணி இருக்கும். . எனது ஃபேஸ்புக் நண்பர்  அவர்கள் ‘திடீர்’ என ஒரு பதிவு இட்டார்.. என் பெயரை டேக் செய்து..! . அது இதுதான்...! . “நண்பரே உங்களுக்கு ஒரு சேலஞ்ச் . சும்மா வெளையாட்டுக்குத்தான். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துல , இந்தக் காட்சில வர்ற பாட்டுக்கும் , நடிகர் திலகத்திற்கும் ஒரு சிறப்பான ஸ்பெஷாலிடி உண்டு. யார் மொதல்ல கண்டு புடிக்கிறாங்களோ அவங்களுக்கு ஒரு புத்தகம் பரிசு. அவங்களுக்குப் புடிச்ச புத்தகம். வாங்கி அனுப்புவேன். பரிசுத் தொகை ரூ 500/-“ . இப்படி எழுதி “தில்லானா மோகனாம்பாள்” காட்சி ஒன்றை ஸ்க்ரீன் ஷாட் ஆகப் போட்டிருந்தார் அவருடைய  நண்பர். . காட்சியைப் பார்த்தேன்..! ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற