இடுகைகள்

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

50 வயசுக்கு மேல சிவாஜியின் Solo பாடல்கள்

படம்
எல்லா விசேஷங்களுக்கும் பாட்டு போடணுமா .சிவாஜி பாட்டு இருக்கு.எல்லா மதத்துக்கும் ஏத்த சிவாஜி  பாட்டு இருக்கு.வாழ்க்கையோட எல்லா சூழ்நிலைக்கும் தகுந்த பாட்டுகளும் இருக்கு.ரொம்ப பேரோட சாய்ஸ் பழைய சிவாஜி பட பாட்டுகள் தான்..அதாவது 50 வயசுக்கு முன்னாலே பாடுன பாட்டுகள்.50 வயசுக்கு பின்னாலே சிவாஜி பாடி நடிச்ச ரொம்ப அருமையான பாட்டுகளும் இருக்கு.எல்லாத்தையும் 50 வயசுக்கு முன்னாலேயே செஞ்சுட்டாலும் அதுக்கு பின்னாலே வந்த பாட்டுகளை சொல்லறதுக்கு வாய்ப்பு இல்லாம போச்சு.எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பழைய பாட்டுக இருந்ததும் ஒரு காரணம்.இதுல நாம பாக்கப்போறது நடிகர்திலகம் தன்னோட 50 வயசுக்கு மேலே பாடி நடிச்ச சூப்பர் ஹிட்டான தனி பாடல்களை மட்டும் தான். நடிகர்திலகம் பிறந்து  50 வருஷம் ஆன வருஷம் 1978. இதுக்கு அடுத்ததா 1979. இந்த வருஷம் வந்த படம் திரிசூலம்.இந்த படத்துலே எல்லா பாட்டும் சூப்பர்ஹிட்டா அமைஞ்சிருந்தாலும் கூட இதை  இதுலே சொல்லப் போறதில்லே.நாம இதுலே பாக்கப்போறது நடிகர்திலகத்தோட சோலோ பாட்டுக்களைத்தான். அடுத்த படமான கவரிமான்லே சூப்பர் ஹிட்டா அமைஞ்ச பாட்டு பூப்போலே உன் புன்னகையில்.இந்த பாட்ட...

சிவாஜி ரசிகன் சசிகுமார்

படம்
நடிகர் சசிகுமார் நடிகர் திலகத்துடன் இணைஞ்சு பல படங்களில் நடிச்சு இருக்கிறார் . பாரத விலாஸ் ராஜபார்ட் ரங்கதுரை மனிதனும் தெய்வமாகலாம் என்னை போல் ஒருவன் போன்ற படங்களில் நடிகர் திலகத்துடன் நடிச்சவர் சசிகுமார் . இவர் ராணுவத்தில் வேலை செய்தவர். சினிமா பீல்டுலே இருந்த ஆர்வத்தால சினிமாவில் நடிக்க வந்தார் . நடிகர் சசிகுமாருக்கு சினிமாவுல ஒரு நல்ல பெயர் இருந்துச்சு.அரசியலை பொறுத்த வரை  காமராஜர் மேல ரொம்ப பக்தி வைச்சிருந்தார் சசிகுமார் .சினிமா துறையில் தன்னோட குருவா சிவாஜிய ஏற்றுக்கொண்டவர். ராணுவத்தில் வேலை செஞ்சதால தேசியத்து மேல இவருக்கு  அக்கறை கொண்டவரா இருந்தார் . காமராஜரோட ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காக ஊர் ஊராக போயி பிரச்சாரம் செஞ்சு அந்தக் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் சசிகுமார். சிவாஜி ரசிகர்  மன்றங்களை அதிகமா திறந்து வச்சசிருக்கார் சசிகுமார் . நடிகர் சசிகுமார் போலவே நடிகர் ஸ்ரீகாந்த் சுருளிராஜன் குலதெய்வம் ராஜகோபால் பிரேம் ஆனந்த் இப்படி பல பேர் ஸ்தாபன காங்கிரசில் இருந்தாங்க. சிவாஜி ரசிகர்கள் தங்களோட ஏரியாவுல சிவாஜி மன்றத்தை திறந்து வைக்கிறதுக்கு இவங்களத்தான் கூப்பிடுவாங்க. இத...

சிவாஜி ஒரு ஹீரோவா?

படம்
தமிழ் சினிமாவுலே கதாநாயகன்ங்கற  இமேஜே எப்படியிருக்குன்னா ஜோடி இருக்கணும் ,டூயட் பாட்டு இருக்கணும் ,சண்டை காட்சி இருக்கணும் .இப்படித்தான் இருக்குது கதநாயகன்ற இமேஜ்.ஆனா இதையெல்லாம் பொருட்படுத்தாமே , கதாநாயகன் வேஷத்தை இந்த வரையறைக்குள்ளே வராம கதையோட நாயகன் அப்படிங்கற பாதையிலே போனவர் நடிகர்திலகம். 1955 ஆம் வருஷம் வந்த முதல்தேதி படத்துலே சிவாஜி நடிச்சப்போ அவருக்கு வயசு 27 தான்.அதுலே 50 வயசு குடும்பஸ்தரா நடிச்சிருப்பார் சிவாஜி.இந்த மாதிரி வயசு வித்தியாசத்துலே வேற யாரும் நடிக்கலையான்னு கேள்வி வராம இருக்காது.ஏதோ சில படங்கள்லே அந்த மாதிரி நடிச்சிருப்பாங்க. அவங்களெல்லாம் நடிச்சாங்க.சிவாஜி தன்னோட கொள்கையாகவே வெச்சிருந்தார்.உதாரணம் சொல்லறதுக்கு ஒரு படமோ ரெண்டு படமோ இல்லே.ரொம்ப படங்கள்லே சிவாஜி இதை செஞ்சதாலே தான் இந்த மேட்டர். 1956 லே வெளிவந்த ரங்கோன் ராதா படத்துலே சிவாஜி ரொம்ப வயசான வேஷத்துலே நடிக்கலேதான்.ஆனா அப்ப இருந்த இமேஜுக்கு செய்ய வேண்டிய வேஷமா அது? கட்டுன மனைவியையே நரபலி கொடுக்க துணியற வேஷத்துலையா நடிக்கணும்.தமிழ்சினிமாலே கதாநாயகனோட இலக்கணம் அவருக்கு மட்டும் இருக்காதா? நீங்க கதாநாயகனா ப...

இந்த பாடல் எடுக்கப்பட்ட இடம்

படம்
சிவாஜிகணேசன் நடித்த ஆண்டவன் கட்டளை படத்தில் அமைதியான நதியினிலே ஓடம் என்று ஒரு இனிமையான பாடல் வரும். இந்தப்பாடலில் சிவாஜியும், தேவிகாவும் நடித்து இருந்தனர். 1964ல் வெளியானது இந்தப் படம். இந்தப் பாடல் காட்சியில் உள்ள அந்த இடமே நமக்கு ஒரு அலாதியான அமைதியைத் தரும். அந்த இடம் எங்குள்ளது என்று தெரியுமா? இந்த இடம் திருவனந்தபுரம் அருகில் உள்ள நெய்யாற்றங்கரை ஆகும். அங்குள்ள ஒரு ரயில்வே ஆற்றுப் பாலத்தின் கீழ் தான் இந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.  இந்த பாடல் படம் பிடிக்கப்பட்ட இடம் பழனிக்கு அருகில் உள்ள கோதைமங்கலம் ஊரில் எடுக்கப்பட்டதாக வேறு ஒரு இணையதளத்தில் பதிவாகி உள்ளது .ஆனால் அது சரியான செய்தி அல்ல. ஆண்டவன் கட்டளை படத்தின் இயக்குனர் கே.சங்கர். இந்தப் படத்தின் மையக்கருவே இந்தப் பாடல் காட்சி தான். அதை வித்தியாசமாக படமாக்க நினைத்தாராம் இயக்குனர். அதனால் சிவாஜி, தேவிகா படகில் பயணம் செய்வது போல எடுத்தனர். அந்தப் படகு ஆற்றில் செல்லும்போது பாலத்தின் மேல் ரயில் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாராம் இயக்குனர். அதனால் திருவனந்தபுரத்தில்   இருந்து நெய்யாற்ங்கரைக்கு வரும் ரயில...

சிவாஜியின் பஞ்சாயத்து

படம்
பொதுவா நடிகர் திலகம் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பார். வீண் விவாதம் பேச்சுன்னு இருக்க மாட்டார்.அதே சமயம் தன்னை சுத்தி இருக்கறவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது அது அவரோட காதுக்கு வரும்போது அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கிறதுலே சிவாஜி போலே ஒரு மனுசனை பார்க்க முடியாது.சினிமா பீல்டுல சக நடிகர் நடிகைகளுக்கு வந்த பல பிரச்சனைகளை தீர்த்து வச்சுருக்கார் நடிகர் திலகம். நடிகை புஷ்பலதாவுக்கும் ஒரு பிரச்சனை வந்துச்சு. அந்தப் பிரச்சனையை சிவாஜி எப்படி தீர்த்து வச்சார் அப்படிங்கறத இந்த பதிவுலே பார்க்கலாம். நடிகை புஷ்பலதா 1955 லே வெளிவந்த நல்ல தங்கை படத்துலே அறிமுகம் ஆனார். 1961 லே வெளிவந்த கொங்கு நாட்டு தங்கம் படத்துலே தான் பிரபலமானார். இதுக்கு பின்னாலே பிரபலமாகி  தமிழ் தெலுங்கு மலையாளம் உள்பட பலமொழியிலே நூத்துக்கணக்கான  படங்களில் நடிச்சார் புஷ்பலதா. நடிகர் திலகம் சிவாஜியோட இவர் நடிச்ச முதல் படம் ஆலயமணி. ஆலயமணி படத்தில் சரோஜாதேவி ஹீரோயின்.   புஷ்பலதாவுக்கு நல்லா பாப்புலரா அமைஞ்ச படம் பார் மகளே பார்.இதுலே புஷ்பலதாவுக்கு நல்ல பேர் கிடைச்சது. இதுக்கு பின்னாலே ஆண்டவன் கட்டளை ர...

சிவாஜி ரசிகர்களுக்காக ....

படம்
மெழுகுவர்த்தி வெளிச்சம் உலகின் இருள் போக்கிடுமா? சிவாஜி இல்லாத திரையுலகத்தை மறைக்க முடியுமா? நெருப்பென்றால் வெந்திடுமா நாக்கு? சிவாஜியை சொல்லாமல் ஏது நடிப்பு  காற்றில்லாமல் உயிர் வாழும் ஜெகமேது? கலைவேந்தன் பேர் சொல்லாத நாவேது ! வான்மழை பொழியாத வையகம் செழிக்குமா ? சிவாஜி இல்லாத திரையுலகம்  சிறக்குமா ! தங்கத்தின் நிறத்தை மாற்ற  முடியுமா ? தவப்புதல்வனின்புகழைத்தான் மறைக்க முடியுமா ! இயற்கையை தான்  மாற்ற முடியுமா  சிவாஜியை தான் மீற முடியுமா? எல்லாவற்றிலும் உச்சம் ஒன்றுண்டு சிவாஜியை மிஞ்ச எவருண்டு அனல் பறந்தால் வெந்து தணியும் காடு சிவாஜி பேசினால் அதிர்ந்து போகும் தேகக்கூடு இடியோசை கேட்டால் அஞ்சுமாம் நாகங்கள் சிவாஜி கர்ஜித்தால்  அதிருமே திரைகள்  எழுத எழுத தீர்ந்து போக தமிழுக்கு என்ன பஞ்சமா? சிம்மக்குரலில்  வசனம் கேட்க கேட்க மனம்தான் கூசுமா ! பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் பெயர் பெறுவான் வள்ளலாவான் நாட்டுக்கு ஈதல் நல் புரிந்தான்  நானிலத்து கலைஞன் கணேசனாவான் அறுந்துபோன வில் அம்பெய்ய உதவுமா? சிவாஜி பேசாத வசனம் இனிக்குமா? மடை திறந்தால்  பாசனம் ...

கேட்டுக்கோடி உருமி மேளம்

படம்
ஒரு டூயட் பாட்டு .அந்த பாட்டு ஒரு குத்துப்பாட்டு மாதிரி.அதோட கதாநாயகன் கதாநாயகியோட கேரக்டரோட குணத்தையும் சொல்லற மாதிரி.அதே சமயம் படத்தோட கதைக்கு பொருத்தமான விஷயத்தை சொல்லற மாதிரி ஒரு பாட்டு.இவ்வளவும் சொல்லற பாட்டு இது.இந்த பாட்டுக்கு மேலே இதே மாதிரி அமைப்புலே ஒரு பாட்டு இல்லேன்னு சொல்ல வெச்ச பாட்டு.என்னதான் இன்டர்நெட் காலம்னு உலகம் வளந்துட்டு இருந்தாலும் இந்த பாட்டை கேட்டா எந்திரிச்சு ஆட வெச்சுடும்.இந்த பாட்டுலே பல சிறப்பான விஷயங்களை சேத்து இசையமைச்சு இருப்பாரு மெல்லிசை மன்னர்.என்ன பாட்டு என்ன சிறப்பான விஷயங்கள் அப்படிங்கறதை இதுலே பாக்கலாம். அதுக்கு முன்னாலே இதே மாதிரி டைப்புலே அமைஞ்ச சில பாட்டுகளையும் பாத்துடலாம். இது முரடன் முத்து படத்துபாட்டு. சிவாஜி தேவிகா நடிச்சது. இது புனர்ஜென்மம். சிவாஜி பத்மினி நடிச்ச பாட்டு. இது எங்க மாமா படத்து பாட்டு.சிவாஜி ஜெயலலிதா. இப்படி பல பாட்டுக இருந்தாலும் இதுலே பாக்கப்போற பாட்டு வேற லெவல் பாட்டுன்னுதான் சொல்லணும். இது ஒரு கிராமியப்படம். கறுப்பு வெள்ளையிலே வந்த சூப்பர்ஹிட் படம்னு சொல்லலாம்.தமிழ் சினிமாலே கறுப்பு வெள்ளை படத்துலே அதிகமான வசூல் செஞ்ச படம...

டிவி சேனல்களில் சிவாஜி திரைப்படங்கள்

படம்
 சிவாஜி கணேசன் நடித்த வெற்றி திரைப்படங்களை அதிகமாக திரையிட்ட பிரபல சேனல்கள் .. முதலாவதாக 2000 ஆண்டுகளில் சன் நெட்வொர்க்கின் சேய் நிறுவனமான கே. டிவி ஆரம்பித்த போது சிவாஜி கணேசன் நடித்த பல வண்ண திரைப்படங்களான  தங்கசுரங்கம், சிவந்த மண், எங்க மாமா, என்னைப்போல் ஒருவன் இந்த 4 திரைப்படங்களும் அதிகமாக கே டிவியில் மேட்னி ஷோவாக திரைப்படபட்டது.  அதை ரசிக மக்கள் தவறாமல் பார்த்து மகிழ்ந்தனர்.  அந்த 4 திரைப்படங்களை சன் டிவி நிறுவனம் 1999-2005 வரை 5 வருட கால ஒப்பந்த முறையில் தியேட்டரிகள் ரைட்ஸ்சில் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கபட்டது.  இதை 5 வருட கால ஒப்பந்தம் தாண்டி அதை தியேட்டரிக்கல் ஒப்பந்தம் முடிந்து சன் நிறுவனம் படத்தை  வாங்கியவர்களிடம்  ஒப்படைத்தனர். பின்பு ஏல முறையில் ராஜ் டிவிக்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய்க்கு விற்க உடனே ராஜ் டிவி நிறுவனம் அவ்வளவு விலை எல்லாம் கொடுக்க முடியாது என்று கூற அந்த 4 திரைப்படங்களில் சிவந்த மண் படத்திற்கே ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் இருப்பதால் அந்த படத்தை மட்டும் தவிர்த்து விட்டு தங்க சுரங்கம், எங்க மாமா, என்னைப்போல் ஒருவன் படங்களை மட்டுமே ராஜ்...

சிவாஜியின் வைரவிழா வருட திரைப்படங்கள்

படம்
முரடன்முத்து நவராத்திரி இந்த ரெண்டு படம் ரிலீசாகி  60 வருஷம் ஆச்சு.1964 தீபாவளி படங்க. தமிழ் சினிமாலே ஒரு ஹீரோ  9 வேஷம் கட்டி முதல் தடவையா வருது.எவ்வளவு பெரிய விஷயம் இது.ஒரு சாதாரண ரசிகனை கேட்டா கூட,சிவாஜியோட 100 வது படமா எதை வெளியிடலாம்னு கேட்டா அந்த சாதாரண ரசிகனே சொல்லிடுவான்.பந்துலு எவ்வளவு பெரிய ஆளு அவர் ஒத்துக்கலையே .. எல்லாரும் தங்களோட படத்தைதான் பெரிசா நினைப்பாங்க.ஆனா இது யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா.உலகத்துக்கே தமிழனோட பெருமையை சொல்ல வெக்கற படம்.அந்த மாதிரி அவரு யோசிக்கலையே. பந்துலு இந்தியாவிலேயே பெரிய ஆளுன்னுதான் சொல்லணும் .வீரபாண்டிய கட்ட பொம்மன் கர்ணன் கப்பலோட்டிய தமிழன் இந்த மூணு படம் போதும் .. .அவர் யார்னு சொல்லறதுக்கு. அதே மாதிரி  ஒரு படத்தை எடுத்துட்டு 100 வது படமா இதை வெளியிடுங்கன்னு சொல்லியிருந்தா கூட அதுலே ஒரு அர்த்தம் இருக்கும்.முரடன்முத்து படத்தை நவராத்திரியோட கம்பேர் பண்ண முடியாதே.அது தான் விஷயம்.அது அதோட முடிஞ்சிடுச்சு. நவராத்திரி .9 பாகமா போற படம்.ஒரு பாகம் வீரம்னா இன்னொரு பாகம் சோகம்.அடுத்ததா ஒவ்வொரு பாகமும் ஒரு வெரைட்டியிலே போகும். தேங்காசோறு பு...

ஜானி மேரா நாம் VS ராஜா

படம்
பெரிய ஹிட் ஆன இந்தி படங்களை தமிழாக்கமோ ,ரீமேக்கோ செய்யப்படும்போது  பெரும்பாலும் இந்தியில் வெற்றி பெற்ற அளவுக்கு வெற்றிகளை பெற்றதில்லை. ஒன்றோ இரண்டோ விதிவிலக்கு.. ஆனால் ,ஜானி மேரா நாம் ஹிந்திப்பட  ரீமேக்கான ராஜா கலக்கியெடுத்தது. 1970 ல் வெளியான ஜானி மேரா நாம் படத்தை 1972 ல் ராஜாவாக்கினார் பாலாஜி.படம் அதிரி புதிரி ஹிட்டானது. ஜானி மேரா நாம் இந்திப்படத்தின் டைட்டில் இசை  மயங்க வைக்கும்.. தமிழிலும் விஸ்வநாதன் பட்டையை கலக்கியிருப்பார்.ரொம்ப பாப்புலர் ஆனது.இது எந்த அளவுக்கு என்றால் அந்த டைட்டில் மியூசிக் மட்டும் தனி ரெக்கார்டாக வெளியிடப்பட்டு சாதனை செய்யும் அளவுக்கு இருந்தது.ராஜா படத்துக்கு மட்டும் தான் டைட்டில் இசையே தனி ரெக்கார்டாக முதன்முதலாக வெளியிடப்பட்டது. படத்தின் ஆரம்ப காட்சி அமைப்புக்களில் பெரிய மாறுதல்கள் இல்லை.பாக்ஸிங் போடும் சகோதரர்கள், போலீஸ் அப்பாவை வில்லன் கத்தியால் குத்துவது எல்லாம். ஹீரோ அறிமுகம் ஆகும் காட்சிக்கு முன்புவரை இந்திப்படத்தின் படமாக்கம் சொல்லப்போனால் அதன் பிண்ணனி,கள அமைப்பு நன்றாகவே இருக்கும்.சிறைசாலையில் ஹீரோ சிகரெட் லைட்டர் நீட்டும் காட்சி இரண்டிலு...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற