இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் பாசிடிவ் பாடல்கள்

படம்
சிவாஜியின் பாசிடிவ் சாங்ஸ். பாட்ட கேட்டா அது மனதுக்குள்ள போயி அந்த டயத்துல ரசிச்சு முடிக்கிறதோட முடிஞ்சிரக்கூடாது .அது காலமெல்லாம் வரணும் நம்ம மனச மாத்தணும். நல்ல விஷயத்தை சொல்லணும்.சிவாஜியோட இந்த பாடல்களை கேட்டால் அது நாம சாகுற வரைக்கும் வரும்.அதுதான் பாசிடிவ் சாங்ஸ். பச்சை விளக்கு படத்துல வர்ற அந்த ஒளிமயமான எதிர்காலத்தை பாட்டை கேளுங்க. இந்த பாட்டோட பெருமையை பத்தி சிவாஜி ரசிகர் யாரு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் ஒரு தன்னம்பிக்கை ஒரு பாட்ட உதாரணமாக சொல்ல ஆரம்பிச்சாங்கன்னா இந்த பாட்ட தான் முதல்ல உதாரணமா சொல்லுவார்கள்.இந்த பாட்டுல ஒரே ஒரு விஷயம் மட்டும் சுத்தி சுத்தி வராது பலவகப்பட்ட விஷயத்தையும் இந்த பாட்டுல நம்ம பார்க்கலாம். பாட்டோட ஆரம்பம் எதிர்காலத்தை பத்தி பாடுற மாதிரி வரும். அப்புறம் ஒரு வீட்டுக்கு பெருமை சேர்க்கிற அந்த பெண் குலத்தோட பெருமையா பேசுற மாதிரி வரும்.  கூடவே இந்தியாவோட மதச்சார்பின்மை ,இந்தியாவோட மக்கள் பலம் எல்லாத்தையும் சேர்த்து எழுதி இருப்பார் கண்ணதாசன். வெறும் பாட்டா கேட்டுட்டு கடந்துட்டு போயிட முடியாது இந்த பாடலை கேட்டா. நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை எ...

சிவாஜி நாகேஷ் நடித்த திரைப்படங்கள்

படம்
சிவாஜி நாகேஷ் நடித்த திரைப்படங்கள் ... அவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. ஒரு நல்ல குணசித்திர நடிகரும் கூட. சிறந்த நடனக்காரர் கூட. நாகேஷ் என்றதும் சட்டென வந்து செல்பவர் தருமி. இது அவரே அடிக்கடி சொல்லும் பாத்திரம்.ஆனால் படத்தில் நாகேஷ் வந்து சென்றது கொஞ்ச நேரமே. அந்த கொஞ்ச நேரம் வந்து இருந்தாலும் அவருடைய வரலாற்றில் இது முதன்மையான பாத்திரம் . ஏராளமான படங்களில் நாகேஷ் நடித்திருந்தாலும் நாகேஷ் நடித்த நல்ல வேடங்கள் என்றால் இந்தப் படங்களை தான் முதலில் சொல்ல வேண்டியுள்ளது. தில்லானாவின் சவடால் வைத்தி, சவாலே சமாளி சின்னப்பண்ணை, நவராத்திரி பூசாரி, தியாகத்தில் அந்த முஸ்லிம் வேடம், இப்படி நடிப்புக்காக நாகேஷ் நடித்த சிவாஜி படங்கள் அதிகம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 65 படங்களில் நாகேஷ் நடித்துள்ளார். அந்தப் படங்கள் பின்வருமாறு ; நடிகர் திலகத்துடன் நாகேஷ் இணைந்த திரைப் படங்கள் 1. நான் வணங்கும் தெய்வம் 2. குங்குமம் 3. ரத்த திலகம் 4. அன்னை இல்லம் 5. பச்சை விளக்கு 6. புதிய பறவை 7. முரடன் முத்து 8. நவராத்திரி 9. பழநி 10.அன்புக்கரங்கள் 11.சாந்தி 12.திருவிளையாடல் 13.நீலவானம் 14.மோட்டார் சு...

நடிகர் திலகம் வெறும் நடிகர் மட்டும்தான்?

படம்
நடிகர்திலகம் வெறும் நடிகர் மட்டும்தானா?  சிவாஜி என்று பேச்சு ஆரம்பித்தாலே அது நடிப்பை பத்தி பேசுவதாகத்தான் எல்லா பேச்சும் இருக்கிறது.நடிகர்திலகத்தின் படங்கள் செய்த தாக்கம்தான் அது. அவரது படங்கள் பற்றி பேசும் அதே நேரத்தில், அந்த படங்கள் எல்லாம் எப்படி அமைந்தது, அவையெல்லாம் அவரது வாழ்க்கையிலும் எப்படி இணைந்திருந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இப்போது வரும் ஸ்டார் வேல்யூ படங்கள் எல்லாம் எப்படி வருகின்றன. ஒவ்வொரு படங்களும் 100 கோடியில் தயாரிப்பு, 200 கோடியில் தயாரிப்பு என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.ஆனால் எல்லாம் அடி தடி குத்து கொலை வெட்டு படங்கள்தான்.கடந்த சில ஆண்டுகளில் எத்தனை படங்களை சிறந்ததாக கொள்ள முடியும்? தமிழ் கலையுலகுக்கு பெருமை தரும் படி எந்த தயாரிப்பும் இல்லை.இதில் கதா நாயகனுக்கு வேறு 40 கோடி 50 கோடி சம்பளம் என்று பெருமைகள்? இதெல்லாம் தான் கதாநாயகர்களுக்கு பெருமையா என்றால் அப்படி மாறி விட்டது திரையுலகம்! என்ன செய்ய! பெரும்பாலோர் சமூகத்தில் வைத்திருக்கும் மதிப்பும், நாட்டுப்பற்றும் சொல்ல வேண்டியதில்லை.அவர்களின் பணப் பெட்டி நிறைந்தால் சரி என்றுதான் இருக்கி...

.சிவாஜி சிங்கமடா!

படம்
தமிழருக்கென்று ஒரு குணம் உண்டு.. (தலைப்பு இதுவல்ல இக் கட்டுரைக்கு)   பிறந்த வீடும் ,புகுந்த வீடும் இணைந்தது, என்று சிவாஜி கணேசன் கடற்கரைக் கூட்டத்திலே பேசினார் .இந்திரா காந்தியும், கருணாநிதியும் இணைந்து பேசிய கூட்டத்தில் சிவாஜிகணேசன் பேசிய பேச்சு இந்த நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது .ஆனால் எதிர்முகாம்  வட்டாரத்தில்,  அதை ஜீரணிக்க முடியாமல் சிலர் சிவாஜி மீது பாய்ந்து இருக்கிறார்கள் .சென்ற மாதம் வரை சிவாஜியை பற்றி ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்த எதிர்முகாம் ஏடுகள் இப்போது விஷத்தை கக்க ஆரம்பித்து இருக்கின்றன. "திரைஉலகம் " ஏட்டிலேயே மகா கேவலமாக சிவாஜியை தாக்கியிருக்கிறார்கள் . புகுந்த வீடு போகப் போற அண்ணே !சிவாஜி கண்ணே ! சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே !.. என்ற தலைப்பில் எழுதி சிவாஜி பிளாக் போட்டு அதன் கீழே ஆணா? பெண்ணா? என்று கேட்டிருக்கிறார்கள். புகுந்த வீட்டுக்குப் போகிறவர்கள் பெண்கள் தானே !சிவாஜி புகுந்த வீடு பற்றி பேசியதால் ஆணா ,பெண்ணா ?என்று கேட்டிருக்கிறார்கள். சிவாஜி பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது .அவர் ஆண்மகன் தான் என்பதற்கு சாட்சியாக நான்கு குழந்த...

புகழை கர்வமாக்கிக் கொள்ளாத சிவாஜி

படம்
சிவாஜியின் படங்கள்  தேன்கூடு  போலே அதிலும் தேனெடுத்தால் தேனீக்கள்  கொட்டாத  கூடு நாகரீகம் வளரும் போது கலாச்சார  சீர்கேடுகளும் உண்டாவது தான்.அதிலிலிருந்து மக்களை நல்வழிப்படுத்தவே கலைகள் தோற்றுவிக்கப்பட்டன. கலாச்சாரம்,பண்பாடு, கடமைகள் போன்றவை நல்வழிகள் சொல்லி மக்களை  பண்படுத்தவே கலைகள் பிறந்தன. கலைகளை பரப்ப நல்ல படைப்பாளிகள் இதிலிருந்தே  வந்திருக்க வேண்டும். அவர்களின் கலை அம்சம்  ஈர்க்கப்பட்டதால் மக்கள் அவர்களை கலைஞர்களாக மதித்து போற்றப்பட்டனர்.நல்ல கலைஞனின் வேலை சமூகத்திற்கு பயன்படும் கலைகளை பரப்புவது தான்.இப்படி தோன்றிய கலைகள் தான் இன்று எப்படி மாறியுள்ளது! இன்று நாகரீகம் எவ்வளவோ வளர்ந்திருக்கலாம்.அந்தளவு நல்ல கலைகள் உருவாக்கப்படுகிறதா? இங்கே தான் நடிகர்திலகத்தின் படங்களை நாம் சொல்ல வேண்டியுள்ளது. சமுகத்தை பண்படுத்தும் படங்களாகவே அவர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். நல்ல கலைஞனாக அவர் செய்ததை செய்துவிட்டார்.அதை பின்பற்றுவது மக்களின் கையில். கலைகள் வளர எதை எடுத்துச் சொல்வது? சமூகத்தில் நடந்த நல்ல நிகழ்வுகள் ,எழுதப்பட்ட காவியங்கள், சிறந்த மனிதர்களி...

சிவாஜியின் நடிப்பு என்னும் ஆயுதம்

படம்
நடிப்பாயுதம்.... கண்ணில் நீர் பெருக   நடிகர்திலகம் திரையில் நிற்கும் நிலை பார்த்து  பெண்டிர் விட்ட கண்ணீர்த்துளிகளே கலையுலகில் அதிகமிருக்கும். எல்லோரும் போகும் வழி  நடிகர்திலகம் போனபின் அது யாரும் போக முடியாத தனிப்பாதை சிறப்பை அடைந்து விடும் தண்ணீர் தனல் போல் எரியும் செந்தனலும் நீர் போல் குளிரும் .. என்பது எப்படியோ  அதுபோல் சிங்கம் போல் கர்ஜிக்கும் குரலை மறு நிமிடமே சிறுமான் போல் பேசும் பாவனைக்கு தொனியை மாற்றும் திறமையை கொண்டிருப்பவர் நடிகர்திலகம். கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா  நடிப்பெல்லாம் நடிகர்திலகம் நடிக்கும் நடிப்பை போலாகுமா? சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்ததும் , அதன்பின் கலைகள் தோன்றியதும்,  அதன்பின் தொடர்ச்சியாய் நடிப்புக்கலை தோன்றியதும் , அதன்பின் சிவாஜி நடிக்க தொடங்கியதும், அதன்பின் நடிப்பென்றால்  நடிகர்திலகமே என்று தொடர்வுகள் முற்றுப் பெற்று  முடிந்து போனது. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினைக் கண்டான் எல்லாப் படைப்புக்கும் மூலம் உண்டென்றால், எதனை கண்டார் நடிகர்திலகம்? நடிப்பதில் புதுமையை படைத்தார்? காவலுக்கு ...

சிவாஜி கொடுத்த சமுக செம்மை படங்கள்

படம்
நல்ல திரைப்படங்கள் சமூகத்தில் நல்ல பண்பை வளர்க்குமா? மனிதரின் குண நலன்களை மேம்படுத்துமா? கண்டிப்பாக. பொழுதுபோக்காக இருந்தாலும் திரைகலையின் முக்கிய நோக்கமே அதுவே. அந்த வகையில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை பார்ப்போம். முதலில் தன்னிலையில் இதன் தாக்கத்தை நினைத்துப் பார்க்கலாம்.தன்னிலை என்றால் தனி மனித ஒழுக்கம் பண்பு நேர்மை கடமை முதலியன முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம்.நடிகர்திலகம் திரைப்படங்கள் பெரும்பாலும் மற்றும் அவர் செய்த பாத்திரங்களை நினைத்து பாருங்கள்.வியட்நாம் வீடு ,தங்கப்பதக்கம் .. இன்னும் உண்டு .இவற்றில் கடமையுணர்வை பிரதிபலித்தார்.இப் பாத்திரங்கள் தமிழரிடத்தில் பெரும் தாக்கத்தை செய்தவையே! எத்தனை பெரிய மனிதர்கள் தங்களின் கடமையுணர்வுக்கு இவர்களை முன்னுதாரணமாக சொல்லியுள்ளனர்.சமூக பரவல் என்ற வார்த்தை இப்போது அதிகமாக சொல்லப்படுகிறது.அந்த சமூக பரவல்தான் இவர் கேரக்டர்களின் மூலமாக சமூகத்தை செம்மைப்படுத்தியது எனலாம்.அந்த கேரக்டர்கள் மனதில் ஆழமாக ஊடுருவி தாங்களும் இது போல் இந்த கேரக்டர்கள் போல் நாமும் பேரெடுக்க வேண்டும் என்ற எண்ணத்...

ஆண்டாண்டுதோறும் வெஞ்சினமாய் ....

படம்
ஜூலை 21.. அந்தநாள் ... ஆண்டாண்டு தோறும் வெஞ்சினமாய் நெஞ்சிலோர் அக்கினியாய்  எரியுதய்யா! இந்தநாள் நீ படைத்ததெல்லாம் வரிசையாய்  வந்து போகுதய்யா! நீ  கொடுத்தது நடிப்பா இல்லை நெருப்பா?  பழஞ்சோறு தின்று களித்த மனிதருக்கு அறுஞ்சுவையில் விருந்தளித்த  கலை காமதேனுவே!  பூமியை தோண்டினால் தான்  பொக்கிஷங்கள் ஆனால்  எமக்கோ  உம் நினைவுகளே  பொக்கிஷங்கள்!  நீ  ஊதித்தள்ளிய நடிப்புச் சூறாவளியில் ஓடி மறைந்தது  எத்தனை அபத்தங்கள் கர்ஜனையில் மிரண்டது  எத்தனை நெஞ்சங்கள் உன்  தொண்டைக்கு மட்டும் ஆண்டவன் ராஜபேரிகை வைத்து படைத்தானா? உன் குரலோசைக்கு பின்தானே வசனங்கள் எல்லாம் தங்கமுலாம் பூசியது  உனக்கெழுத பேனாக்கள் வார்த்தைப் பஞ்சங்களால் தடுமாறியது அஷ்டமா சித்திகளில்  பிரகாமியமும் ஒன்று.. உன் நடிப்பால்  அதை நாங்களும் கண்டோமே!  முன்னால் சொல்லப்பட்ட நடிப்பிலக்கணம் உன் வருகைக்கு பின் தானே புதுப்பிக்கப்பட்டது!  அவ்விலக்கணம் உன்னோடு இனி எதுவுமில்லை  என்று முற்றுமாகி விட்டதே!  விக்கிரமாதித்தனுக்கோ இரண்டாயிரம் ஆண்ட...

சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா இணைந்து நடித்த படங்கள்

படம்
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.   நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழப்பட்ட கே. ஆர். விஜயா அவர்கள் நடிகர்திலகத்தோடு இணைந்து நடித்த படங்களையும் அப் படங்களின் சாதனைகளையும் இதில் பார்க்கலாம். நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடித்த படங்கள். கை கொடுத்த தெய்வம்,சரஸ்வதி சபதம்,செல்வம்  கந்தன் கருணை நெஞ்சிருக்கும் வரை தங்கை பாலாடை திருவருட் செல்வர் இரு மலர்கள் ஊட்டி வரை உறவு திருமால் பெருமை திருடன் எதிரொலி ராமன்  எத்தனை ராமனடி சொர்க்கம் தவப்புதல்வன் பாரதவிலாஸ் தங்கப்பதக்கம்  கிரகப் பிரவேசம் நாம் பிறந்த மண் ஜெனரல் சக்கரவர்த்தி தச்சோளி அம்பு  ஜஸ்டிஸ் கோபிநாத் திரிசூலம் நான் வாழ வைப்பே...

பால்குடியிலேயே கலந்த சிவாஜி

படம்
ஆத்தா பால் குடிச்சு  வளந்த காலத்துல  அத்தோட  சிவாஜி நடிப்பையும்  ருசிச்சு வளந்த உடம்பய்யா  பத்து வயசு அப்போ.. மாறி மாறி மழை பேஞ்சு  ஊரெல்லாம் ஊறிக் கெடந்ததய்யா அதெல்லாம் பெரிசில்லே தரைக் கொட்டாயிலே  ஆறு மணிக்கு போட்டுருவானே "பதிபக்தி " அது எப்போ ஆவும்னு அலைஞ்சய்யாதா அப்போ மனசு அத அன்னைக்கு பாத்தாத்தா  மறுநா வயித்துல சோறிறங்கும் கோலிகுண்டு விளையாண்ட காலம் பெட்டெல்லாம் வெச்சு அடிப்போம் சிவாஜி பிச்சருக்காகவே நான் கோலியெடுப்பேன் குறி கோலி அடிச்சா பத்து பிச்சரு ஒருத்தன் வெச்சிருந்தான் பைக்ல வர்ற சிவாஜி பிச்சரு மூணு மாசமா கேட்டேன் அவந் தரலே ஒருநா கேட்டான் இந்த கோலில நீ ஜெயிச்சா உனக்குத்தா இது தோத்துபுட்டே ஐநூறு பிச்சரு  நீ தரனும்ட்டான் கை உதறுனாலும் வெறி அடங்கலேய்யா அன்னைக்கு அடிச்சேனய்யா குறிகோலிய  தெறிச்சுதய்யா கண்ணாடி கோலி அன்னைக்கே  ஐநூறு பிச்சர சும்மா கேட்டாலும் குடுத்திருப்பேனய்யா  பதினோரு வயசு கொட்டாயிலே அன்னைக்கு  'புதையல் 'படம் நம்மூருக்கு அது புதுசு அஞ்சு மணிக்கே போயும் அத்தினி கூட்டம் டிக்கட் கிடச்ச பாடில்...

எங்கள் வீட்டிற்கு வந்த இளையதிலகம்

படம்
முக்கிய கதைக்குள் நுழையும் முன் .... 1988 ஆம் வருடம்.பொள்ளாச்சியில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி. ஒரு புதிய பட படப்பிடிப்புப்புக்காக இந்த கிராமம் கதைக்கேற்ற இடம் என்று  தேந்தெடுக்கப்பட்டு,  அந்த கிராமத்தில் ஒரு சினிமா ஷுட்டிங் யூனிட் வந்திறங்கியது. ஒரு படப்பிடிப்புக்காக.. ஷுட்டிங் பற்றி அதிகம் தெரிந்திராத கிராமம் அது. அவர் ஒரு பெரிய நடிகர். அவர் மகன்தான் இப்படத்தில் நடிக்கிறார்.  அவர் வருகிறார் என்று ஊரெல்லாம் பேச்சு. முதல் நாள் படப்பிடிப்புக்காக யூனிட் தயாராக இருக்கிறது.அப்போது ஒரு மாருதி வேன் வந்து நிற்கிறது .சைட் டோர் திறக்கிறது. அவர் இறங்குகிறார். ஆச்சர்யத்தில் மக்கள் கூட்டம். இது வரை அவரை பார்த்ததில்லை.முன் பின் பார்த்திராத மக்கள்.அவரோ சிரித்த முகத்துடன் எல்லோரையும் பார்த்து கை கூப்புகிறார்.முகம் மலர சிரிக்கிறார். தொடர்ந்து ஷுட்டிங் நடைபெறுகிறது. இடையிடையே ஷீட்டிங் இடைவெளியில் மக்களை சந்திக்கிறார்.பேசுகிறார்.ஏதோ நெடுநாள் பழக்கம் போலே அந்த மக்களுடன் பேகிறார். பழகுகிறார்.சந்திப்பவர்களை , 'உங்கள் பெயர் என்ன ?என்ன தொழில் செய்கிறீர்கள் ?என்று கேட்பதுடன் குடும்ப உறுப்பினர்...

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

படம்
வருட வாரியாக நூறு நாள் ஓடிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்கள். 1952 பராசக்தி.. 42 வாரங்கள் ஓடியது.. சிவாஜியின் முதல் படமான பராசக்தி வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடி சாதனை படைத்த படம் . 1953 திரும்பிப்பார் 1954 மனோகரா  கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி  தூக்குத்தூக்கி  எதிர்பாராதது 1955  காவேரி  மங்கையர் திலகம்  1956 பெண்ணின் பெருமை  அமரதீபம் 1957 மக்களைப் பெற்ற மகராசி வணங்காமுடி  புதையல்  தங்கமலை ரகசியம் .1958 உத்தமபுத்திரன்  பதிபக்தி  சம்பூர்ண ராமாயணம் அன்னையின் ஆணை சபாஷ் மீனா  1959 தங்கப்பதுமை வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை 1960 இரும்புத்திரை  தெய்வப்பிறவி  படிக்காத மேதை  விடிவெள்ளி 1961 பாவமன்னிப்பு  பாசமலர் பாலும் பழமும் 1962 படித்தால் மட்டும் போதுமா பந்தபாசம்  ஆலயமணி 1963 இருவர் உள்ளம் அன்னை இல்லம் 1964 கர்ணன் பச்சை விளக்கு கைகொடுத்த தெய்வம் புதிய பறவை நவராத்திரி 1965 சாந்தி திருவிளையாடல் 1966 மோட்டார் சுந்தரம் பிள்ளை சரஸ்வதி சபதம் 1967 கந்தன் கருணை ஊட்டி வரை உறவு இரு மலர்கள் 1968 கலாட்டா கல்யாண...

இன்றைய தமிழ் சினிமா சீரழிவுக்கு யார் காரணம்

படம்
இன்றைய தமிழ் சினிமா சீரழிய யார் காரணம்?  இன்னைக்கு ஒரு படம் ரிலீஸ் ஆச்சுன்னா அந்த படம் எப்படி இருக்குன்னு படம் பாத்துட்டு வர்றவங்கள கேட்டா ஒருத்தர் ரெண்டு பேர் இல்லேரொம்ப பேர்  படம் வேற லெவல், மாஸ், தெறி அப்படின்னு  ரெண்டு மூணு வார்த்தைகளை தவிர வேற எதையும் சொல்ல மாட்டாங்க. இந்த ரெண்டு மூணு வார்த்தைகளை தவிர வேற எதையும் சொல்லத் தெரியாதா? அப்புறம் இன்னொரு வார்த்தையும் கூடவே சேர்த்து சொல்லுவாங்க. பக்கமே வர முடியாது ..என்ன பக்கமே வர முடியாது ..? எந்த தமிழ் படமும் பக்கத்திலேயே வராது அப்படிங்கற அர்த்தத்துல ..தமிழ்ல இதுவரைக்கும் 6000 படம் வந்து இருக்குது .அந்த 6000 படங்களும் பக்கத்துல வர முடியாதா இந்த படத்துக்கு .. என்ன பேசணும் தெரிஞ்சு தான் பேசுறாங்களா .. அதுல அந்த நடிகர் நடிச்ச படமும் இருக்குதுல்ல ... இந்த மாதிரி ரசிகர் கிட்ட வந்து என்னைக்குமே நல்ல விமர்சனத்தை எதிர்பார்க்க முடியாது. காலைல படம் பாக்க நடுராத்திரியே போய் தியேட்டர்ல உக்காந்துக்குறாங்க ரொம்ப பேரு. அந்த தூக்க மப்பான்னு தெரியல . படத்துல விஷயம் இருக்குதோ இல்லையோ அந்த நடிகரை காட்டுறப்ப எல்லாம் ஒரே காட்டுக்கத்தலா தான் இர...

சிவாஜிக்காக

படம்
ஒரு கணேசனை தானே படைத்தோம் இந்த மனிதன் என்ன  முந்நூறாய் நிற்கின்றானே!  இது பிரம்மனின் ஆச்சரியம். கடவுள் நிஜமா என்று கேட்டேன் போட்டோ கடைக்காரனிடம் .. ஆமாம் என்றான் கடைக்காரன்  அப்படியானால் நிஜ சிவனை கொடு என்றேன் அவன் சற்றும் அசரவில்லை திருவிளையாடல் சிவாஜியை கொடுத்தான். நாட்டுக்காக செக்கிழுத்தார் சிதம்பரனார் சிதம்பரனாருக்காக செக்கிழுத்தார் சிவாஜியார் சிதம்பரனாரை உதாரணம் காட்ட சிவாஜியை காட்டினார் ஆசிரியார் செக்கிழுத்த செம்மல் யார் என்ற கேள்விக்கு சிவாஜி என்றார் மாணவனார் இது சரியா ?தவறா? இரண்டும்தானே! ஒரு சூரியன் இரு துருவம் மும் மூர்த்திகள் நான்கு வேதம் ஐந்து பூதங்கள் ஆறு சுவைகள் ஏழு சுரங்கள் எட்டு வகை சித்திகள் நவரசங்கள் இந்த வரிசையில்  சிவாஜி யுகமும்.. நகலெடுக்கும் இயந்திரங்கள் கூட ஒன்று போல் தான் நகலெடுக்கும் உன்னை நகலெடுத்தால் ஓராயிரமாய் வரும். பழனிக்குச் சென்றால் பஞ்சாமிர்தம் வாங்குவது கூட  இரண்டாம் பட்சம் தானாம் ஒரு ரசிகருக்கு சித்தநாதன் கடையில் சிவாஜி படத்தை பார்ப்பதில் தான்  முதல் நாட்டமாம். விபூதி வாசனையை விட சிவாஜி படம் தான் தூக்கலாக இருக்குமாம் .. தம...

கடைசி வரை மாறாத சிவாஜி ரசிகர்கள்

படம்
1956ல் புயல் நிவாரணத்திற்காக பலர் நிதி வசூல் செய்து கொடுத்தனர்.  அதிக  வசூல் செய்தவர் சிவாஜிதான். அதிகமாக வசூலித்துக் கொடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சிவாஜி  அழைக்கப்படவில்லை. எம்.ஜி.ஆரை மேடையில் கௌரவித்தனர். அண்ணாதுரை அவர்கள் சிவாஜியை பற்றி கேட்கும் போது " கணேசனால் வர முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்கள். வஞ்சகர்களுக்கு சிவாஜியின் பதில்.... வெறும் அமைதிதான்.. பீம்சிங் வருகிறார்.சிவாஜியின் மன கிலேசம் தீர திருப்பதி அழைத்தார். சிவாஜி போனார். திருப்பதி சாமியை  பார்த்தார். சாந்தி அடைந்தார். திருப்பதியை பார்த்தால் பசி தீரும். கணேசா! உனக்கொரு நல்ல தலைவன் தேவை! இங்கேயும் ஒரு காந்தி இருக்கின்றார்.அதோ கர்மவீரர் காமராஜர். நீ ஒரு உத்தம தொண்டன் காமராஜ் ஒரு உத்தம தலைவன் காமராஜர் ஏற்றார் உன் சேவையை. கலைச்சேவை ஒரு புறம் காங்கிரஸ் வளர்ப்பு ஒரு புறம் காங்கிரஸிலும் புல்லுருவிகள். அங்கேயும் தடைகள் தானே உன் பணிக்கு.. பெருந்தலைவரின் பின்னால் சிவாஜியின் பயணம்.எங்கேயெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அங்கேயெல்லாம் கர்மவீரருக்காக கட்சியை வளர்த்தாய்.கடமையை செய்தாய் ..பலனுக்காக...

சிவாஜி ரஜினி கமல் விஜய்

படம்
கமலுக்கு தேவர்மகன் ரஜினிக்கு படையப்பா விஜய்க்கு ஒன்ஸ்மோர் கமல் தேவர்மகன் கதை சொல்ல வந்த போது சிவாஜி அப்போது நடிக்கும் விருப்பம் இல்லாமல் தான் இருந்தார்.கமல்ஹாசன் தான் வற்புறுத்தி கதை கேட்க வைத்தார்.நான் கதையை சொல்கிறேன்.அப்புறம் நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரி என்ன சொல்லவே சிவாஜியும் கதை கேட்டார்.கதையை கேட்ட பின் இந்த பெரிய தேவர் கேரக்டருக்கு மீசையை அப்படி வைத்துக் கொள்ளலாமா? இப்படி வைத்துக் கொள்ளலாமா? என்ற விவாதங்களுக்கு சிவாஜி வந்து விட்டார்.சிவாஜிஅப்போது தாடியுடன் தான் இருந்தார்.பொள்ளாச்சி ஷுட்டிங் வந்த போதும் அப்படியே தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முன்பாக இருந்துள்ளார்.முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்தவர்கள் அசந்து விட்டார்கள். சிவாஜி மீசைக்காக என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லை.தேவையற்ற தாடி பகுதியை மட்டும் நீக்கி விட்டார்.   தேவர் வந்து விட்டார். ஏற்கனவே முகத்தில் இருந்த மீசை தான் அது. மீசை வைப்பது பெரிதல்ல.அந்த மீசை முகத்துக்கு பொருந்துமா என்பதுதான் முக்கியம்.எவ்வளவோ மீசைகளை பார்த்த சிவாஜிக்கு தேவர் மீசை வைத்ததில் அதிக சிரமம் இருக்கவில்லை. பிற்பாதி படத்தில் கமல் அ...

பஞ்ச் டயலாக்ஸ்

படம்
தமிழ் சினிமாவின் கதைகளையும் வசனங்களையும் நன்றாக எழுகிறார்களோ  இல்லையோ,பஞ்ச் டயலாக் எழுதுகிறேன் பேர்வழி என்று மொக்கை மொக்கையாக எழுதித் தள்ளுகின்றனர் .. அந்த பஞ்ச் டயலாக் செலவழித்த நேரத்தில் கதைகளுக்கும் வசனங்களுக்கும்  முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் .. ஒரு வரி வசனம் எழுதினாலும் அது உருப்படியாக எழுத வேண்டும். வசனங்கள் என்று வந்துவிட்டாலே அது நடிகர் திலகத்தின் படங்களை தவிர வேறு எதை கூற முடியும் ? வசனம் அதற்கேற்ற நடிப்பு என்றால் நடிகர் திலகத்தின் ஞாபகம் தான் வரும் ..வசனமே இல்லாமல் கூட நடிப்பார் நடிகர் திலகம் ..ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் நடிகர் திலகத்தின் ஒருவரி வசனங்களை நாம் பார்க்கலாம்  . தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாக இருக்கிறதே -இது பராசக்தி என் வாழ் களத்திலேதான் விளையாடும் கனிகளை காயப்படுத்தாது-இது மனோகரா  வேங்கை பதுங்கி போனாலும் விருந்தை கண்டால் சீர் கொண்டு கொண்டு எழும்-வீரபாண்டிய கட்டபொம்மன்  அது என் குற்றமல்ல உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம் இது- உத்தமபுத்திரன்  ஏன்  எப்படியும் சொல்லலாமே !இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு எ...

சிவாஜி செய்த தான தர்மங்கள்

படம்
பொன் கொடுத்தார் நிலம் கொடுத்தார் யானை கொடுத்தார் சிலை கொடுத்தார் பணம் கொடுத்தார். சிவாஜியின் வள்ளல் குணம். மேற் கூறிய 5 வகை கொடைதன்மை செய்தவர் சிவாஜி. பொன் கொடுக்க மனம் வேண்டும். அந்த மனம் சிவாஜிக்கு இருந்ததால் தான் கிருபானந்த வாரியார்  'மென்மன செம்மல் சிவாஜி' என்று புகழாரம் செய்தார். கஜ  தானம். (யானை) இதை செய்ய முடிந்தவர்களும் தகுதி படைத்தவர்களும் மன்னர்களே! ஆனால் இந்த 20 ஆம் நூற்றாண்டில் அதிக யானைகள் தானம் வழங்கிய ஒரு தனிப்பட்ட மனிதராய் ஒரே ஒரு நடிகராய் சிவாஜி அவர்கள் மட்டுமே இருக்கிறார்.  'கஜதானம் செய்த கலையுல சாம்ராட் சிவாஜி ' என்று சொல்லலாம். மற்றும் நில தானம், சிலை தானம் அல்லது கொடை, பண தானம்  எல்லாம் நிறைவாக கொடுத்த சிவாஜியின் கொடைகளை சொல்லத்தான் வேண்டும். இந்த பதிவில் சிவாஜியின் ஐவகை தானங்கள் என்னென்ன என்பது பற்றியும் அது பற்றிய செய்திகளையும் பார்க்கலாம். 1.பொன்தானம்.. 1965 ல் இந்தியா மீது போர் தொடுத்தது பாகிஸ்தான்.பாரத அரசாங்கம் இந்த போருக்காக பெரும் செலவுகள் செய்தது.மேலும் நிதித் தேவைகளுக்காக பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யலாம் என்றும் முடிவெடுத்தது.போர் கால...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற